புருஷன் ,இறைவன் ஆயிரக்கணக்கான தலைகள் உடையவர் .
ஆயிரக்கணக்கான கண்களை உடையவர் .

Image credit. http://karmakandi.com/Images/VishwaRoop.jpg
ஆயிரக்கணக்கான பாதங்களை உடையவர் .அவர் பூமியை வியாபித்து 10 அங்குல அளவில் நிற்கிறார் .1
முன்பு எது இருந்ததோ ,எது இனி வரப் போகிறதோ ,இப்பொழுது எது காணப்படுகிறதோ ,எல்லாம் இறைவனே .
மரணமிலாப் பேரு நிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே.
ஏனெனில் , அவர் இந்த ஜட உலகைக் கடந்தவர் . 2
இங்கு காணப்படுவதெல்லாம் இறைவனின் மகிமையே .
ஆனால் ,அந்த இறைவன் ,இவற்றை விடச் சிறப்பு மிக்கவர் .
தோன்றியவை எல்லாம் அவருடைய கால் பங்கு மட்டுமே .
அவரது முக்கல் பங்கு விண்ணில் இருக்கிறது . 3
பரம்பொருளின் முக்கல் பங்கு விண்ணில் விளங்குகிறது ,
எஞ்சிய கால் பண்குமீண்டும் இந்தப் பிரபஞ்சமாகத் தோன்றியது .
பிறகு , அவர் உயிர்கள் மற்றும் ஜடப் பொருள்களில் எல்லாம் ஊடுருவிப் பார்த்தார். 4
அந்த ஆதி புருஷனிடமிருந்து பிரம்மாண்டம் தோன்றியது .
ப்ரம்மாண்டைத் தொடர்ந்து பிரம்ம உண்டாகி எங்கும் வியாபித்தார் .
பிறகு அவர் பூமியைப் படைத்தார் .
அதன் பிறகு , உயிர்களுக்கு உடலைப் படைத்தார் . 5
முதற்பபடைப்பில் படைக்கப்பட்ட தாங்கள் வேள்வி செய்வதற்கான் போருல்கலில்லை என்பதைக் கண்டனர்.
எனவே ,இறைவனை ஆகுதியாகக் கொண்டு மனத்தளவில் வேள்வி செய்தனர் .
இயற்கையின் அம்சங்களான காலம் போன்றவற்றைப் பயன் படுத்தினர் . 6
இந்த வேள்விக்கு பஞ்ச பூதங்கள் ,இரவு ,பகல் ஆகியவை பரிதிகள் ஆயின .
இருபத்தொரு தத்துவங்கள் விறகுகள் ஆயின .
தேவர்கள் யாகத்தை ஆரம்பித்து பிரம்மாவை ஹோமப் பசுவாய்க் கட்டினார்கள் 7
முதலில் உண்டான அந்த யஜ்ன புருஷனான பிரம்மாவின் மீது தண்ணீர் தெளித்தார்கள் .
அதன் பிறகு சாத்த்யகளும் தேவர்களும் ரிஷிகளும் இன்னும் யார் யார் உண்டோ அவர்களும் யாகத்தைச் செய்தார்கள்.9
பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்தில் இருந்து தயிர் கலந்த நெய் உண்டாயிற்று .
பறவைகளையும் மான் புலி போன்ற காடு விலங்குகளையும் ,பசு போன்ற வீடு மிருகங்களையும் பிரம்ம படைத்தார் 9
பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யகத்தில் இருந்து ரிக் ,சாம வேத மந்திரங்களும் ,காயத்ரீ சந்தங்களும் உண்டாயின .
அதிலிருந்தே யஜுர் வேதம் உண்டாயிற்று . 10
அதிலிருந்தே குதிரைகள் தோன்றின .
இருவரிசைப் பற்கள் உடைய மிருகங்களும் ,பசுகாளும்வேள்ளடுகளும் ,செம்மறியாடுகளும் தோன்றின . 11
பிரம்மாவை தேவைகள் பலியிட்டபோது அவரை எந்தெந்த வடிவம் ஆக்கினார்கள்?
அவர் முகம் எதுவாயிற்று ?
கைகால்களாக எது சொல்லப்படுகிறது ?
தொடைகளாக ,பாதங்களாக எது கூறப்படுகிறது ? 12
அவரது முகம் பிராம்மணன் ஆயிற்று .
கைகள் சத்ரியன் ஆயிற்று .
தொடைகள் வைசியன் ஆயிற்று .
அவரது பாதங்களில் இருந்து சூத்திரன் தோன்றினான் . 13.
மனதிலிருந்து சந்திரன் தோன்றினான் .
கண்ணில் இருந்து சூரியனும் ,முகத்தில் இருந்து இந்திரனும் அக்னியும் தோன்றினர் .
பிராணன் வாயுவைத் தோற்றுவித்தது . 14.
தொப்புளில் இருந்து வானவெளி தோன்றிற்று .
தலையில் இருந்து சொர்க்கம் தோன்றியது .பாதங்களில் இருந்து பூமியும் ,காதில் இருந்து திசைகளும் தோன்றின .
அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன . 15.
எல்லா உருவங்களையும் தோற்றுவித்து ,பெயர்கையும் அமைத்து ,எந்த இறைவன் செயல் பட்டுக் கொண்டிருக்கிறாரோ ,
மகிமை பொருந்தியவரும் ,சூரியனைப் போல் ஒளிர்பவரும் ,இருளுக்கு அப்பாற்பட்டவரும் ஆன அந்த இறைவனை நான்
அறிவேன் . 16
எந்த இறைவனை பிரம்மா ஆதியில் என்று கண்டு கூறினாரோ ,இந்திரன் நான்கு நான்கு திசைகளிலும் நன்றாகக் கண்டானோ ,
அவரை நான் இவ்வாறு அறிவபன்,
இங்கேயே, அதாவது இந்தப் பிறவியிலே முக்தனாகிறான் .
மோட்சத்திற்கு வேறு வழி இல்லை . 18
தேவர்கள் இந்த வேள்வியினால் இறைவனை வழி பட்டார்கள் .
அவை முதன்மையான தர்மகள் ஆயின .
எங்கே ஆரம்பத்தில் வேள்வியால் இறைவனை வழி பட்ட சாத்யர்களும் தேவர்களும் இருக்கிறார்களோ தர்மங்களைக் கடைப்
பிடிக்கின்ற மகான்கள் அந்த மேலான உலகை அடைவார்கள் . 18
தண்ணீரிலிருந்தும் சாரமான அம்சத்தில் இருந்தும் பிரபஞ்சம் உண்டாயிற்று .
பிரபஞ்சத்தை உருவாக்கிய இறைவனிடம் இருந்து சிறந்தவரான பிரம்ம தோன்றினார் .
இறைவன் அந்த பிரம்மாவின் (பதிநானு உலகும் நிறைந்த)உருவை உண்டாக்கி அதில் வியாபித்து இருக்கிறார் .
பிரம்மாவின் இந்தப் பிரபஞ்ச வடிவம் படைப்பின் தொடக்கத்தில் உண்டாயிற்று . 19
மகிமை பொருந்தியவரும் ,சூரியனைப் போல் ஒளிர்பவரும் ,இருளுக்கு அப்பால் இருப்பவரும் ஆகிய அந்த இறைவனை நான்
அறிவேன் .
அவரை இவ்வாறு அறிபவன் இங்கேயே இந்தப் பிறவியில் முக்தனாகிறான் .
முக்திக்கு வேறு வழி இல்லை . 20
இறைவன் பிரபஞ்சத்தில் செயல் படுகிறார் .
பிறக்காதவர் ஆயினும் ,அவர் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறார்.
அவரது உண்மையான வடிவத்தை மகான்கள் நாக்கு அறிகிறார்கள் .
பிரம்மா போன்றோர் கூட மரீசி போன்ற மகன்களின் பதவியை விரும்புகிறார்கள் . 21.
யார் தேவர்களிடம் தேஜஸ் ஆக விளங்குகிராரோ ,ஹெவர்களின் குருவாக இருக்கிறாரோ ,தேவர்களுக்கு முன்பே
தோன்றியவரோ , அந்த ஒளி மயமான பரம்போருக்கு நமஸ்காரம் . 22.
பரம்பொருளைப் பற்றிய உண்மையை அளிக்கும்போது தேவர்கள் ஆதியில் அடாஹிப் பற்றி பின் வருமாறு கூறினார்கள் .
“யாராக இருந்தாலும் , பரம்பொருளை நாடுபவன் , இவ்வாறு அறிவான் ஆனால் , அவனுக்கு தேவர்கள் வசமாக இருப்பார்கள்
– 23
நாணத்தின் தலைவி ஆகிய ஹ்ரீ தேவியும் ,செல்வத்திற்குத் தலைவி ஆகிய லக்ஷ்மி தேவியும் உமது மனைவியர் .
பகலும் இரவும் உமது பக்கங்கள் ,நட்சத்திரங்கள் உமது திரு உருவம் .
அஸ்வினி தேவர்கள் உமது மலர்ந்த திரு வாய் . 24.
பரம் பொருளே !
நாங்கள் விரும்புவதைக் கொடுத்து அருள்வாய் .
இவ்வுலக இன்பத்தைக் கொடுத்து அருள்வாய் ,
இகத்திலும் , பரத்திலும் அனைத்தையும் தந்தருள்வாய் .
ஓம் தத் சத் !
புருஷ சூக்தம் நிறைந்தது
Leave a Reply to vthinktankCancel reply