புருஷன் ,இறைவன் ஆயிரக்கணக்கான தலைகள் உடையவர் .
ஆயிரக்கணக்கான கண்களை உடையவர் .

Image credit. http://karmakandi.com/Images/VishwaRoop.jpg
ஆயிரக்கணக்கான பாதங்களை உடையவர் .அவர் பூமியை வியாபித்து 10 அங்குல அளவில் நிற்கிறார் .1
முன்பு எது இருந்ததோ ,எது இனி வரப் போகிறதோ ,இப்பொழுது எது காணப்படுகிறதோ ,எல்லாம் இறைவனே .
மரணமிலாப் பேரு நிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே.
ஏனெனில் , அவர் இந்த ஜட உலகைக் கடந்தவர் . 2
இங்கு காணப்படுவதெல்லாம் இறைவனின் மகிமையே .
ஆனால் ,அந்த இறைவன் ,இவற்றை விடச் சிறப்பு மிக்கவர் .
தோன்றியவை எல்லாம் அவருடைய கால் பங்கு மட்டுமே .
அவரது முக்கல் பங்கு விண்ணில் இருக்கிறது . 3
பரம்பொருளின் முக்கல் பங்கு விண்ணில் விளங்குகிறது ,
எஞ்சிய கால் பண்குமீண்டும் இந்தப் பிரபஞ்சமாகத் தோன்றியது .
பிறகு , அவர் உயிர்கள் மற்றும் ஜடப் பொருள்களில் எல்லாம் ஊடுருவிப் பார்த்தார். 4
அந்த ஆதி புருஷனிடமிருந்து பிரம்மாண்டம் தோன்றியது .
ப்ரம்மாண்டைத் தொடர்ந்து பிரம்ம உண்டாகி எங்கும் வியாபித்தார் .
பிறகு அவர் பூமியைப் படைத்தார் .
அதன் பிறகு , உயிர்களுக்கு உடலைப் படைத்தார் . 5
முதற்பபடைப்பில் படைக்கப்பட்ட தாங்கள் வேள்வி செய்வதற்கான் போருல்கலில்லை என்பதைக் கண்டனர்.
எனவே ,இறைவனை ஆகுதியாகக் கொண்டு மனத்தளவில் வேள்வி செய்தனர் .
இயற்கையின் அம்சங்களான காலம் போன்றவற்றைப் பயன் படுத்தினர் . 6
இந்த வேள்விக்கு பஞ்ச பூதங்கள் ,இரவு ,பகல் ஆகியவை பரிதிகள் ஆயின .
இருபத்தொரு தத்துவங்கள் விறகுகள் ஆயின .
தேவர்கள் யாகத்தை ஆரம்பித்து பிரம்மாவை ஹோமப் பசுவாய்க் கட்டினார்கள் 7
முதலில் உண்டான அந்த யஜ்ன புருஷனான பிரம்மாவின் மீது தண்ணீர் தெளித்தார்கள் .
அதன் பிறகு சாத்த்யகளும் தேவர்களும் ரிஷிகளும் இன்னும் யார் யார் உண்டோ அவர்களும் யாகத்தைச் செய்தார்கள்.9
பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்தில் இருந்து தயிர் கலந்த நெய் உண்டாயிற்று .
பறவைகளையும் மான் புலி போன்ற காடு விலங்குகளையும் ,பசு போன்ற வீடு மிருகங்களையும் பிரம்ம படைத்தார் 9
பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யகத்தில் இருந்து ரிக் ,சாம வேத மந்திரங்களும் ,காயத்ரீ சந்தங்களும் உண்டாயின .
அதிலிருந்தே யஜுர் வேதம் உண்டாயிற்று . 10
அதிலிருந்தே குதிரைகள் தோன்றின .
இருவரிசைப் பற்கள் உடைய மிருகங்களும் ,பசுகாளும்வேள்ளடுகளும் ,செம்மறியாடுகளும் தோன்றின . 11
பிரம்மாவை தேவைகள் பலியிட்டபோது அவரை எந்தெந்த வடிவம் ஆக்கினார்கள்?
அவர் முகம் எதுவாயிற்று ?
கைகால்களாக எது சொல்லப்படுகிறது ?
தொடைகளாக ,பாதங்களாக எது கூறப்படுகிறது ? 12
அவரது முகம் பிராம்மணன் ஆயிற்று .
கைகள் சத்ரியன் ஆயிற்று .
தொடைகள் வைசியன் ஆயிற்று .
அவரது பாதங்களில் இருந்து சூத்திரன் தோன்றினான் . 13.
மனதிலிருந்து சந்திரன் தோன்றினான் .
கண்ணில் இருந்து சூரியனும் ,முகத்தில் இருந்து இந்திரனும் அக்னியும் தோன்றினர் .
பிராணன் வாயுவைத் தோற்றுவித்தது . 14.
தொப்புளில் இருந்து வானவெளி தோன்றிற்று .
தலையில் இருந்து சொர்க்கம் தோன்றியது .பாதங்களில் இருந்து பூமியும் ,காதில் இருந்து திசைகளும் தோன்றின .
அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன . 15.
எல்லா உருவங்களையும் தோற்றுவித்து ,பெயர்கையும் அமைத்து ,எந்த இறைவன் செயல் பட்டுக் கொண்டிருக்கிறாரோ ,
மகிமை பொருந்தியவரும் ,சூரியனைப் போல் ஒளிர்பவரும் ,இருளுக்கு அப்பாற்பட்டவரும் ஆன அந்த இறைவனை நான்
அறிவேன் . 16
எந்த இறைவனை பிரம்மா ஆதியில் என்று கண்டு கூறினாரோ ,இந்திரன் நான்கு நான்கு திசைகளிலும் நன்றாகக் கண்டானோ ,
அவரை நான் இவ்வாறு அறிவபன்,
இங்கேயே, அதாவது இந்தப் பிறவியிலே முக்தனாகிறான் .
மோட்சத்திற்கு வேறு வழி இல்லை . 18
தேவர்கள் இந்த வேள்வியினால் இறைவனை வழி பட்டார்கள் .
அவை முதன்மையான தர்மகள் ஆயின .
எங்கே ஆரம்பத்தில் வேள்வியால் இறைவனை வழி பட்ட சாத்யர்களும் தேவர்களும் இருக்கிறார்களோ தர்மங்களைக் கடைப்
பிடிக்கின்ற மகான்கள் அந்த மேலான உலகை அடைவார்கள் . 18
தண்ணீரிலிருந்தும் சாரமான அம்சத்தில் இருந்தும் பிரபஞ்சம் உண்டாயிற்று .
பிரபஞ்சத்தை உருவாக்கிய இறைவனிடம் இருந்து சிறந்தவரான பிரம்ம தோன்றினார் .
இறைவன் அந்த பிரம்மாவின் (பதிநானு உலகும் நிறைந்த)உருவை உண்டாக்கி அதில் வியாபித்து இருக்கிறார் .
பிரம்மாவின் இந்தப் பிரபஞ்ச வடிவம் படைப்பின் தொடக்கத்தில் உண்டாயிற்று . 19
மகிமை பொருந்தியவரும் ,சூரியனைப் போல் ஒளிர்பவரும் ,இருளுக்கு அப்பால் இருப்பவரும் ஆகிய அந்த இறைவனை நான்
அறிவேன் .
அவரை இவ்வாறு அறிபவன் இங்கேயே இந்தப் பிறவியில் முக்தனாகிறான் .
முக்திக்கு வேறு வழி இல்லை . 20
இறைவன் பிரபஞ்சத்தில் செயல் படுகிறார் .
பிறக்காதவர் ஆயினும் ,அவர் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறார்.
அவரது உண்மையான வடிவத்தை மகான்கள் நாக்கு அறிகிறார்கள் .
பிரம்மா போன்றோர் கூட மரீசி போன்ற மகன்களின் பதவியை விரும்புகிறார்கள் . 21.
யார் தேவர்களிடம் தேஜஸ் ஆக விளங்குகிராரோ ,ஹெவர்களின் குருவாக இருக்கிறாரோ ,தேவர்களுக்கு முன்பே
தோன்றியவரோ , அந்த ஒளி மயமான பரம்போருக்கு நமஸ்காரம் . 22.
பரம்பொருளைப் பற்றிய உண்மையை அளிக்கும்போது தேவர்கள் ஆதியில் அடாஹிப் பற்றி பின் வருமாறு கூறினார்கள் .
“யாராக இருந்தாலும் , பரம்பொருளை நாடுபவன் , இவ்வாறு அறிவான் ஆனால் , அவனுக்கு தேவர்கள் வசமாக இருப்பார்கள்
– 23
நாணத்தின் தலைவி ஆகிய ஹ்ரீ தேவியும் ,செல்வத்திற்குத் தலைவி ஆகிய லக்ஷ்மி தேவியும் உமது மனைவியர் .
பகலும் இரவும் உமது பக்கங்கள் ,நட்சத்திரங்கள் உமது திரு உருவம் .
அஸ்வினி தேவர்கள் உமது மலர்ந்த திரு வாய் . 24.
பரம் பொருளே !
நாங்கள் விரும்புவதைக் கொடுத்து அருள்வாய் .
இவ்வுலக இன்பத்தைக் கொடுத்து அருள்வாய் ,
இகத்திலும் , பரத்திலும் அனைத்தையும் தந்தருள்வாய் .
ஓம் தத் சத் !
புருஷ சூக்தம் நிறைந்தது

Many of the contents of the Purusha Sooktham are symbolic and are not to be taken literally. And several terms like Brahman and Brahma can be confused with each other if not translated properly. Brahman and Brahma are actually very different in the Vedic context
True. Check my posts on Brahmins definition.
Interests only understand
Can you elaborate on the comment?
Reblogged this on V's ThinkTank and commented:
Thank you for sharing this information