-திராவிடர்களுக்கு எதிராக தமிழக பார்ப்பனர்களும் (சோ,சுவாமி ) மற்றும் ஆரிய ஊடகங்களும் கிளப்பவிட்ட சதி.
சோவிற்கும் சுவாமிக்கும் எந்த அளவு மக்களிடையே செல்வாக்கு உள்ளது என்பது அனைவரும் அறிந்தததே .
மேலும் இந்த ஊழலைப்பற்றி சுவாமி ஒரு வருடத்திற்கு முன்பே பிரதமருக்கு தெரிவித்து உள்ளார் .அப்போது இந்த வாதம் எங்கே போயிற்று ?இதுவரை ஏதும் பேசாமல் இருந்தது ஏன் ?
அவரின் புகார் வர்த்தக நிறுவனங்கள் அவர்களால் நியமிக்கப்பட்ட ‘lobbyist ‘அரசாங்கத்தை நடத்துகிறது ,அந்த நிறுனங்கள் என்ன ஆதாயங்கள் பெற்றுள்ளன அது எதனால் என்பதுதான்..இதற்கு,மறுமொழி மழுப்பலாக இருந்தததால் ,உச்ச நீதி மன்றம் சென்றுள்ளார்..
CAG அறிக்கை எவரால் தயாரிக்கப்பட்டது ?அது எந்த ஒரு விஷயத்திற்காக மட்டும் அமைக்கப்பட்டுள்ள அமைப்பு அல்ல .அரசின் நிர்வாகத்தில் எந்த முறைகேடு இருப்பதாக சந்தேகப் பட்டால் அது அறிக்கை வெளியிடும்.
உச்ச நீதி மன்றம் பார்ப்பனர்களால் நடத்தப்படுவது அல்ல..
ஆரியர் சதி என்றால் ஆரியர்களே சதிக்கூட்டம் என்பதுதானே ?
நீங்கள் உறவு கொண்டிருக்கும் சோனியா காந்தி திராவிடரா?அல்லது ‘நிலையான அரசு தருக ‘ என்று அழைத்த இந்திரா காந்தி ஆரியரா ?உங்கள் குடும்பத் தொலைக் காட்சிகளை நடத்துபவர்கள் தமிழர்களா ?
சோ இந்த விவகாரத்தில் , முறைகேடுகள் வெளி வந்தவுடன் கருத்து தெரிவித்தார்.
‘அவதூறு வழக்கு ஊடகங்கள் மற்றும் சோ சுவாமி மீது தொடருவேன் ‘
இது வரை தொடரவில்லை என்பது இருக்கட்டும்..
ஓலி நாடாக்களை வெளியிட்ட outlook மேல் ஏன் தொடரவில்லை?
அது சரி , ஒலிநாடாக்களில் இருப்பது எங்கள் நபர்கள் இல்லை, அது மிமிக்ரி என்று ஏன் மறுக்கவில்லை ?
யாரோ ஒரு உதவியாளர் நில பேர விவகாரத்தில் சம்பந்தப்ப்டுள்ளார் என்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே தெரிந்துகொண்டிருக்கக்கூடிய விஷயங்களை உங்கள் துணைவியார் நீட்டி முழக்கி அறிக்கை விடுப்பது ஏன்?
இத்தனைக்கும் அவரை நேரடியாக யாரும் குற்றம் சாட்டவில்லை .
அப்படி இருக்க , நேரடியாக குற்றம் சாட்டப்பட்ட ராசா ஏன் அறிக்கை விடவில்லை ?
துணைவியாருக்கு வரிந்து கட்டாத கருணாநிதி , ராசாவுக்கு வக்காலத்து ஏன்?
நிருபர் ராசா வீட்டில் CBI சோதனை பற்றிக்கேட்டதற்கு ‘நீ ஏன் பாடு படுகிறாய் ?உன் வீட்டிலா சோதனை’ என்பது ஏன்?
பார்பனர், ஆரியர் சதி ,CAG அறிக்கை இறுதி அல்ல ,சிபிஐ விசாரணை வழக்கமான (?) ஒன்று ,ராசாவை விசாரணைக்குத்தான் அழைத்தாகள்,அது ஒன்றும் இல்லை .
இதுதான் கடமை ,கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு .
(please read my blogs under Radia tapes,Politics,Business,Corruption,Politicians ,Politics)
இதையும் படிங்க;
http://ramanisblog.in/2010/12/25/sarkaria-report-veeranam-scam/
Leave a Reply to Take Action Seeman Others For Hate Speech Procedure | Ramani's comments.Cancel reply