Ramanisblog

Multi Lingual Blog English Tamil Kannada Hindi Indian History Verified Vedic Thoughts Hinduism around The World Tamils History

19,904,624 hits

காதல் சிறகை வானில் விரித்து ,கண்ணதாசன் -காலத்தை வெல்லும் வரிகள்

‘தூது’ பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் விரவிக் கிடக்கின்றன .

சம்ஸ்க்ருதத்தில் காளிதாசனின் மேக சந்தேசம் மிக உயர்ந்த கற்பனை வளத்துடன் படைக்கப்பட்டது .
சம  கால இலக்கியத்திலும் பல பாடல்கள் உள்ளன .
காதலியும் காதலனும் பிரிந்து பின் சேர்கின்றனர் .
எண்ணத்தையே தூது விடும் கற்பனை கண்ணதாசன் சிறப்பு.
எண்ணங்களைப்   பறவயாககி  விண்ணில்  பறக்கவிட்டவர் ,காதலை சிறகு விரித்துப் பறக்கச் செய்கிறார்.
‘காதல் சிறகை வானில் விரித்து வான வீத்யில் பறக்கவா ,
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் மிதக்கவா’
எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா,
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி  இரு கை கொண்டு வணங்கவா ‘
பிரிந்த தலைவி கணவனின் மார்பில் முகம் புதைத்து அழுகிறாள் -இந்தக் கண்ணீர் யாருடையது என்பதைச்  சொல்லாததன் மூலம்,அது காதலனின்  கண்ணீராகக் கூட இருக்கலாம்.
பிரிந்திருந்த காலத்தை வெறுத்து அக் காலத்தை வெறுப்பதாகவும் கொள்ளலாம் ; பிரிவின்  மூலம் காதலின் வலிமையை  உணர்த்தியதால் நன்றி மேலிட்டு காலத்தை வணங்குவதாகவும் கொள்ளலாம் .
‘முதல் நாள் காணும் மணப்பெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா ,
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா’
பிரிந்தவர் கூடினால் அங்கு அடக்கத்திற்கு இடம் இல்லை ,உணர்ச்சிகள் பெருக்கெடுத்து இருக்கும் வேளையில்,அடக்கத்திற்கு இடம் ஏது?
இதை’ நான் உன்னை மணந்தவள் ,நமக்கு இடையில் நாணம் தேவை இல்லை ,அங்கு உணர்ச்சிகளுக்குத்தான் முதல் இடம் ,வழிவழியாய் வந்த நாணத்திற்கு இடம் இல்லை .’
( இதே கவிஞர் ‘தாய் வழியே வந்த நாணத்தைக் காட்டி ‘ என்று ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி ‘ பாடலில்  பேசுகிறார் .)
‘பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது, அழுதால்  கொஞ்சம் நிம்மதி ,
பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சந்நிதி ,
அதுதான் காதல் சந்நிதி ‘
பிரிந்தவராலே மட்டும் உணரக்கூடிய வரிகள் .
அதுவும் நிரந்தரமாகப் (இறப்பில்) பிரிந்தவராலே மட்டும் கேட்டு அழக்கூடிய  வரிகள்.
காதலின் சாரத்தைப் பிழிந்தெடுக்கும் மேலும் இரு பாடல்களுடன் கண்ணதாசன் மீண்டும் வருவார் .
Related;
”நான் பழந்தமிழ் பாடல்களைத் திருடுவதாகப் பலர் கூறுகிறார்கள்..ஆம்,,பழந்தமிழ்ப் பாடல்களை எளிமைப் படுத்தி அளிக்கிறேன்

என்பதில் எனக்கு வெட்கம் இல்லை ,பெருமைப்படுகிறேன் .”
நமக்கும் தமிழ் தெரியும் .ஆனால் கவியரசைப் போல் உணர்ந்து நாம் அன்றாடம் பயன் படுத்தும் சொற்களைக் கொண்டு இதயத்தைத் தொடுவதில் கண்ணதாசன், கண்ணதாசன்தான்

Leave a Reply

latest posts

categories

subscribe to my blog

Discover more from Ramanisblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading