தமிழில் ,பரம்பொருளை, இறைவனைக்குறிக்கும் இரண்டு பெயர்கள் உள்ளன . _ _
மனதைத் தாண்டி இருப்பவர் “ கடவு ள்” .
இந்து மதம் கடவுளைக் குறிக்க பகவான் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.
பக் ,என்றால் அதிர்ஷ்டம், வரம்பற்ற செல்வம்.
இந்து மதத்தில் பொருட் செல்வத்தை செல்வம் என்று கருதுவதில்லை.
நித்தியமான, நிறைந்த பண்புக்கூறுகள் அல்லது குணங்கள் அவ்வாறு கருதப்படுகின்றன. வேதங்கள், குணங்களுக்கு அப்பாற்பட்ட, குணங்கள் அற்ற,(நிர்குண,) குணாதிசயங்கள் இல்லாத பரம்பொருளைப்பற்றி எடுத்து உரைக்கின்றன.
பரம்பொருள் ஒரு தத்துவம். விவரிக்க முடியாதது.
அவக்தவ்யா , விவரணைக்களுக்கு அப்பாற்பட்டது, எனக் கூறும்.
உபநிடதங்கள் யதார்த்தத்தை, Reality, விவரிக்கும் போது, நேதி ,Nethi நியாயத்தைப் பயன்படுத்துவதற்கு இதுவே காரணம்.
ஒரு விஷயத்தை, அதன் குணங்களை விளக்க,நாம் அறிந்த ,பிற பொருள்களுக்கு உரிய குணங்களை விலக்கி, விவரிக்கும் செயல்முறை.
பிரம்மன், முக்காலம் கடந்த உண்மை,யதார்த்தம்.எனவே, அதை சில குறிப்பிட்ட குறியீடுகளாக,அதாவது, உயரமானதாகவோ, குட்டையாகவோ, ஆணாகவோ, பெண்ணாகவோ…. விவரிக்கப்படவில்லை.
நாம் எதையும் அறியக்கூடிய பண்புக்கூறுகளைத் தவிர்த்து, உள்ள உண்மை, யதார்த்தம், அறிய முடியாதது என்பது மறைமுகமான செய்தியாகும்.
ஆனால் அதை,பரம்பொருளை,அனுபவிக்க முடியும்.
இந்த விளக்க முறை ‘நேதி நியாய’ என்று அழைக்கப்படுகிறது.
இருப்பினும்,இந்து மதம் கடவுள்கள், சின்னங்கள்,குறியீடுகள் வடிவில் உருவ வழிபாட்டை ஆதரிக்கிறது.
ஏனென்றால், மனித மனம் இடம்,காலம் ( Space,Time) இவற்றையல்லால்,குறிப்பிடாமல் ,எதையும் புரிந்து கொள்ளவோ அல்லது அவற்றில் கவனம் செலுத்தவோ முடியாது.
எனவே, மனதை ஒருமுகப்படுத்த கடவுள் சிலைகளை வழிபடுவது முதல் படி.
இந்த தனிப்பட்ட கடவுளான ஈஸ்வர (ஈஸ்வரன் என்பது இந்திய தத்துவத்தில் தனிப்பட்ட கடவுள் என்று பொருள்படும், இது சகுண ( குணங்கள் நிறைந்த) வழிபாடு ,ஆராதனை என்று அழைக்கப்படுகிறது.
தனிப்பட்ட கடவுள்களை வணங்குவதன் மூலம் ஒருவர் ஆன்மீக வளர்ச்சியடையும் போது, உண்மையானது தனிப்பட்ட கடவுள்களுக்குள்ளும் அதற்கு அப்பாலும் இருப்பதை அவர்கள் உணருவர்.
இது பற்றி எனதுவிளக்கங்களை, இந்து மதத்தின்(Hinduism) கீழ் எனது பதிவுகளைப் படிக்கவும்.
குறிப்பாக ‘கடவுள் உண்டா மற்றும் உருவம் உள்ளதா’. என்பது பற்றி!
எனவே பகவான் என்ற சொல் சகுண பிரம்மன், கடவுளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது
Leave a Reply