சமகம் 3 சஞ்சமே பொருள் விளக்கம்

 

ஶம் ச’ மே மய’ஶ்ச மே ப்ரியம் ச’ மே‌உனுகாமஶ்ச’ மே காம’ஶ்ச மே ஸௌமனஶ்ச’ மே த்ரம் ச’ மே ஶ்ரேய’ஶ்ச மே வஸ்ய’ஶ்ச மே யஶ’ஶ்ச மேபக’ஶ்ச மே த்ரவி’ணம் ச மே ன்தா ச’ மே ர்தா ச’ மே க்ஷேம’ஶ்ச மேத்றுதி’ஶ்ச மே விஶ்வம்’ ச மே மஹ’ஶ்ச மே ம்விச்ச’ மே ஜ்ஞாத்ரம்’ ச மேஸூஶ்ச’ மே ப்ரஸூஶ்ச’ மே ஸீரம்’ ச மே யஶ்ச’ ம றுதம் ச’ மே‌உம்றுதம்’ ச மே‌உயக்ஷ்மம்  மே‌உனா’மயச்ச மே ஜீவாது’ஶ்ச மே தீர்காயுத்வம் ச’ மே‌உனமித்ரம்  மே‌உப’யம் ச மே ஸுகம் ச’ மே ஶய’னம் ச மே ஸூஷா ச’ மேஸுதினம்’ ச மே || 3 ||

 

Neelakanta,Form of Shiva consuming Poison, Halakaala.image.jpg.
Neelakanta,Form of Shiva consuming Poison, Halakaala.

 

 

இந்த உலக இன்பங்களும்,வானுலக இன்பங்களும் ,அனைத்து உயிர்களிடம் நேசமும் ,அதனால் ஏற்படும் ஆசையும்,அந்த ஆசையால்

 

ஏற்படும் அனுபவங்களும் ,மனதிற்கு உகந்த உற்றாரும் ,மங்களமும்,உயர் நலமும் ,நல்ல உறைவிடமும் ,நற் புகழும்,

சௌபாக்கியங்களும் ,முறையாக அடையப் பட்ட செல்வமும் ,-நல் வழி காட்டும் ஆசார்யனும் ,தந்தையைப் போல் தாங்குபவனும் ,

க்ஷேம ;-உடமைகளைக் காக்கும் திறனும் ,தைர்யமும் ,அனைத்துஉயிர்களின் நலனுக்கான திறனும் ,வெகுமானமும் ,

 

வேத மற்றும் சாஸ்திர ஞானமும் ,பிறருக்கு கற்பிக்கும் சக்தியும் ,பிறரை  ஏவுந்திறனும் ,பணியாட்களை வழி நடத்தும் திறனும்,

 

மேழிச் செல்வமும் ,தடைகளின் அழிவும் ,நற்கருமங்களும் ,அவற்றால் விளையும் புண்ணியமும் ,க்ஷயம் முதலிய நீடிக்கும்  கொடிய

 

நோய்கள் இன்மையும் ,குறுகிய காலம் நீடிக்கும் ஜ்வரம் போன்ற நோய்கள் இன்மையும் ,நோயற்ற வாழ்வுக்கு உரிய மருந்துகளும் ,

 

நீண்ட ஆயுளும் ,நட்பு மற்றும் நபர் இல்லாமையும் ,பயமின்மையும் ,நன்னடத்தையும் ,இடையூறில்லாத நல்ல தூக்கமும் ,

 

இறை நினைப்புடன் கூடிய நல்ல விடியலும் ,யாகம் ,யக்னம் , அத்யயனம் மற்றும் நன்னடத்தையுடன் கூடிய பகற்பொழுதும் ,

 

ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும் எனக்கு அமையப் பெறுமாம் .

 

சம்-இந்த உலக இன்பங்களும்,

மய;வானுலக இன்பங்களும் ,

ப்ரிய;-அனைத்து உயிர்களிடம் நேசமும் ,

அனுகாம ;-அதனால் ஏற்படும் ஆசையும்,

காம ;-அந்த ஆசையால் ஏற்படும் அனுபவமும் ,

சௌ மனச :மனதிற்கு உகந்த உற்றாரும் ,

பத்ரம் –மங்களமும்,

ஸ்ரேய;-உயர் நலமும் ,

வஸ்ய :நல்ல உறைவிடமும் ,

யச ;நற் புகழும் ,

பக ;சௌ பாக்கியங்களும் ,

த்ரவிணம்-முறையாக அடையப் பட்ட செல்வமும் ,

யந்தா -நல வழி காட்டும் ஆசார்யனும் ,

தர்த்தா-தந்தையைப் போல் தாங்குபவனும் ,

க்ஷேம ;-உடமைகளைக் காக்கும் திறனும் ,

த்ருதி –தைர்யமும் ,

விஸ்வம்-அனைத்துஉயிர்களின் நலனுக்கான திறனும் ,

 

மக ;-வெகுமானமும் ,

 

சம்வித ;வேத மற்றும் சாஸ்திர ஞானமும் ,

 

ஞாத்ரம் -பிறருக்கு கற்பிக்கும் சக்தியும் ,

 

சூ ;_பிறரை  ஏவுந்திறனும் ,

 

பிரசூ -பணியாட்களை வழி நடத்தும் திறனும்,

 

ஸீரம்-மேழிச் செல்வமும் ,

 

லய ;-தடைகளின் அழிவும் ,

 

ருதம் –நற்கருமங்களும் ,

 

அம்ருதம் -அவற்றால் விளையும் புண்ணியமும் ,

 

அயக்ஷ்மம் -க்ஷயம் முதலிய நீடிக்கும்  கொடிய நோய்கள் இன்மையும் ,

 

அநாமயம்-குறுகிய காலம் நீடிக்கும் ஜ்வரம் போன்ற நோய்கள் இன்மையும் ,

 

ஜீவாது ;-நோயற்ற வாழ்வுக்கு உரிய மருந்துகளும் ,

 

தீக்காயுத்வம் -நீண்ட ஆயுளும் ,

 

அனமித்ரம் -நட்பு மற்றும் நபர் இல்லாமையும் ,

 

அபயம் –பயமின்மையும் ,

 

சுகம் –நன்னடத்தையும் ,

 

சயனம் –இடையூறில்லாத நல்ல தூக்கமும் ,

 

சூக்ஷா-இறை நினைப்புடன் கூடிய நல்ல விடியலும் ,

 

சூக்ஷா-யாகம் ,யக்னம் , அத்யயனம் மற்றும் நன்னடத்தையுடன் கூடிய பகற்பொழுதும் ,

 

மே–ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும் எனக்கு அமையப் பெறுமாம் .

 

 

Comments

2 responses to “சமகம் 3 சஞ்சமே பொருள் விளக்கம்”

  1. vijayaraghavanp1 Avatar
    vijayaraghavanp1

    C Chamaka..

    ..

    .

    Sent from Samsung Mobile

    1. ramanan50 Avatar

      thanks.You may check Chmakam 1 and 2 and Pancha sukthas translations

Leave a Reply

More posts

Discover more from Ramanisblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading