Tag: ருத்ரம்

  • சமகம் 3 சஞ்சமே பொருள் விளக்கம்

     

    ஶம் ச’ மே மய’ஶ்ச மே ப்ரியம் ச’ மே‌உனுகாமஶ்ச’ மே காம’ஶ்ச மே ஸௌமனஶ்ச’ மே த்ரம் ச’ மே ஶ்ரேய’ஶ்ச மே வஸ்ய’ஶ்ச மே யஶ’ஶ்ச மேபக’ஶ்ச மே த்ரவி’ணம் ச மே ன்தா ச’ மே ர்தா ச’ மே க்ஷேம’ஶ்ச மேத்றுதி’ஶ்ச மே விஶ்வம்’ ச மே மஹ’ஶ்ச மே ம்விச்ச’ மே ஜ்ஞாத்ரம்’ ச மேஸூஶ்ச’ மே ப்ரஸூஶ்ச’ மே ஸீரம்’ ச மே யஶ்ச’ ம றுதம் ச’ மே‌உம்றுதம்’ ச மே‌உயக்ஷ்மம்  மே‌உனா’மயச்ச மே ஜீவாது’ஶ்ச மே தீர்காயுத்வம் ச’ மே‌உனமித்ரம்  மே‌உப’யம் ச மே ஸுகம் ச’ மே ஶய’னம் ச மே ஸூஷா ச’ மேஸுதினம்’ ச மே || 3 ||

     

    Neelakanta,Form of Shiva consuming Poison, Halakaala.image.jpg.
    Neelakanta,Form of Shiva consuming Poison, Halakaala.

     

     

    இந்த உலக இன்பங்களும்,வானுலக இன்பங்களும் ,அனைத்து உயிர்களிடம் நேசமும் ,அதனால் ஏற்படும் ஆசையும்,அந்த ஆசையால்

     

    ஏற்படும் அனுபவங்களும் ,மனதிற்கு உகந்த உற்றாரும் ,மங்களமும்,உயர் நலமும் ,நல்ல உறைவிடமும் ,நற் புகழும்,

    சௌபாக்கியங்களும் ,முறையாக அடையப் பட்ட செல்வமும் ,-நல் வழி காட்டும் ஆசார்யனும் ,தந்தையைப் போல் தாங்குபவனும் ,

    க்ஷேம ;-உடமைகளைக் காக்கும் திறனும் ,தைர்யமும் ,அனைத்துஉயிர்களின் நலனுக்கான திறனும் ,வெகுமானமும் ,

     

    வேத மற்றும் சாஸ்திர ஞானமும் ,பிறருக்கு கற்பிக்கும் சக்தியும் ,பிறரை  ஏவுந்திறனும் ,பணியாட்களை வழி நடத்தும் திறனும்,

     

    மேழிச் செல்வமும் ,தடைகளின் அழிவும் ,நற்கருமங்களும் ,அவற்றால் விளையும் புண்ணியமும் ,க்ஷயம் முதலிய நீடிக்கும்  கொடிய

     

    நோய்கள் இன்மையும் ,குறுகிய காலம் நீடிக்கும் ஜ்வரம் போன்ற நோய்கள் இன்மையும் ,நோயற்ற வாழ்வுக்கு உரிய மருந்துகளும் ,

     

    நீண்ட ஆயுளும் ,நட்பு மற்றும் நபர் இல்லாமையும் ,பயமின்மையும் ,நன்னடத்தையும் ,இடையூறில்லாத நல்ல தூக்கமும் ,

     

    இறை நினைப்புடன் கூடிய நல்ல விடியலும் ,யாகம் ,யக்னம் , அத்யயனம் மற்றும் நன்னடத்தையுடன் கூடிய பகற்பொழுதும் ,

     

    ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும் எனக்கு அமையப் பெறுமாம் .

     

    சம்-இந்த உலக இன்பங்களும்,

    மய;வானுலக இன்பங்களும் ,

    ப்ரிய;-அனைத்து உயிர்களிடம் நேசமும் ,

    அனுகாம ;-அதனால் ஏற்படும் ஆசையும்,

    காம ;-அந்த ஆசையால் ஏற்படும் அனுபவமும் ,

    சௌ மனச :மனதிற்கு உகந்த உற்றாரும் ,

    பத்ரம் –மங்களமும்,

    ஸ்ரேய;-உயர் நலமும் ,

    வஸ்ய :நல்ல உறைவிடமும் ,

    யச ;நற் புகழும் ,

    பக ;சௌ பாக்கியங்களும் ,

    த்ரவிணம்-முறையாக அடையப் பட்ட செல்வமும் ,

    யந்தா -நல வழி காட்டும் ஆசார்யனும் ,

    தர்த்தா-தந்தையைப் போல் தாங்குபவனும் ,

    க்ஷேம ;-உடமைகளைக் காக்கும் திறனும் ,

    த்ருதி –தைர்யமும் ,

    விஸ்வம்-அனைத்துஉயிர்களின் நலனுக்கான திறனும் ,

     

    மக ;-வெகுமானமும் ,

     

    சம்வித ;வேத மற்றும் சாஸ்திர ஞானமும் ,

     

    ஞாத்ரம் -பிறருக்கு கற்பிக்கும் சக்தியும் ,

     

    சூ ;_பிறரை  ஏவுந்திறனும் ,

     

    பிரசூ -பணியாட்களை வழி நடத்தும் திறனும்,

     

    ஸீரம்-மேழிச் செல்வமும் ,

     

    லய ;-தடைகளின் அழிவும் ,

     

    ருதம் –நற்கருமங்களும் ,

     

    அம்ருதம் -அவற்றால் விளையும் புண்ணியமும் ,

     

    அயக்ஷ்மம் -க்ஷயம் முதலிய நீடிக்கும்  கொடிய நோய்கள் இன்மையும் ,

     

    அநாமயம்-குறுகிய காலம் நீடிக்கும் ஜ்வரம் போன்ற நோய்கள் இன்மையும் ,

     

    ஜீவாது ;-நோயற்ற வாழ்வுக்கு உரிய மருந்துகளும் ,

     

    தீக்காயுத்வம் -நீண்ட ஆயுளும் ,

     

    அனமித்ரம் -நட்பு மற்றும் நபர் இல்லாமையும் ,

     

    அபயம் –பயமின்மையும் ,

     

    சுகம் –நன்னடத்தையும் ,

     

    சயனம் –இடையூறில்லாத நல்ல தூக்கமும் ,

     

    சூக்ஷா-இறை நினைப்புடன் கூடிய நல்ல விடியலும் ,

     

    சூக்ஷா-யாகம் ,யக்னம் , அத்யயனம் மற்றும் நன்னடத்தையுடன் கூடிய பகற்பொழுதும் ,

     

    மே–ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும் எனக்கு அமையப் பெறுமாம் .

     

     

  • நன் மகன் பெற ,மரண பிசாசு பயம் நீங்க விசேஷ ருத்ர மந்திரங்கள்

     

    கீழ்க்கண்ட மந்திரங்கள் ஸ்ரீ ருத்ரத்தில் இருந்து தொகுக்கப் பட்டவை .

     

    Lord Siva.Image.jpg.
    Lord Siva.

     

    மறைந்திருக்கும் இம்மந்திரங்கள் ருத்ர கலபார்ணவத்தில் இருந்து எடுக்கப் பட்டுள்ளன..

     

    மிகுந்த பலனைக் கொடுக்கும் இந்த மந்திரங்களை ஒழுக்கத்துடன் ஜபித்தால் பலன் நிச்சயம் .

     

    மந்திரங்கள் சொல்லும் விதத்தை எனது மற்றைய பதிவுகளில் காண்க.

     

    தேவையான மந்திரத்தை தினமும் 108 முறை 45 நாட்கள் ஜபிக்கவும்.

     

    நைவேத்யம் -பருப்புக்கஞ்சி ( செய் முறை எனது மற்றைய பதிவில் .

     

    நல்ல மகனைப் பெற .

     

    சரத் சந்த்ரப்ரகாசேன வபுஷா சீதளத்யுதிம்

     

    த்யாயேத் சிம்ஹாஸனாநீந  முமையா சஹிதம் சிவம்

     

    நீலக்ரீவாய .

     

    கொடிய ஜ்வரம், பேய் பிசாசு பீடித்தலை அகற்ற .

     

    சந்த்ரரர்த்த மௌலிம்காலாரிம் வியால யஞ்யோபோவீதினம்

    ஜ்வலத் பாவக சங்காஸம் த்யாயேத் தேவம் த்ரிலோசனம்.

     

    பரமேஸ்வரா

     

    பகைவரை அழிக்க , பகைவர் என்பது காமம் ,பெருந்தீனி உண்பது ,பாவத்தை செய்வது .

     

    உத்யத் பாஸ்கர கோடிப் பிரகாசம்

     

    ஆதீப்த தஹன மூர்த்தானம்

     

    பீஷன புஜங்க பூஷம்

     

    த்யாயேத் விவிதாயுதம் ருத்ரம் .

     

    அகால மரணத்தைத் தவிர்க்க .

     

    ஸ்மேராரனம்சந்த்ரகலா வதம்சம்

     

    கங்காதரம் சைலசுதா சஹாயம்

     

    த்ரிலோசனம் பஸ்ம  புஜங்க பூஷணம்

     

    த்யாயேத் பசூனாம் பத்தி மீசிதாரம்

     

     

  • சமகம் 2 அர்த்தம் பொழிப்புரை

    ஜைஷ்ட்யம்’ ச  ஆதி’பத்யம் ச மே ன்யுஶ்ச’ மே பாம’ஶ்ச மே‌உம’ஶ்சமே‌உம்ப’ஶ்ச மே ஜேமா ச’ மே மஹிமா ச’ மே வரிமா ச’ மே ப்ரதிமா ச’ மேர்ஷ்மா ச’ மே த்ராகுயா ச’ மே வ்றுத்தம் ச’ மே வ்றுத்தி’ஶ்ச மே த்யம் ச’ மே ஶ்ரத்தா ச’ மே ஜக’ச்ச மே தனம்’ ச மே வஶ’ஶ்ச மே த்விஷி’ஶ்ச மே க்ரீடா ச’மே மோத’ஶ்ச மே ஜாதம் ச’ மே ஜனிஷ்யமா’ணம் ச மே ஸூக்தம் ச’ மே ஸுக்றுதம் ச’ மே வித்தம் ச’ மே வேத்யம்’ ச மே பூதம் ச’ மே பவிஷ்யச்ச’ மேஸுகம் ச’ மே ஸுபதம் ச ம றுத்தம் ச ம றுத்திஶ்ச மே க்லுப்தம் ச’ மேக்லுப்தி’ஶ்ச மே திஶ்ச’ மே ஸுதிஶ்ச’ மே || 2 ||

     

    ஜைஷ்ட்யம் -மேன்மையும் ,

     

    ஆதிபத்யம்-தலைமைத் திறனும்,

     

    மன்யு :உட்பகைகளுடன் கோபமும் ,

     

    பாம:-வெளிப்பகைகளிடம் கோபமும் ,

     

    அம”ஆழமான மனமும் ,

     

    அம்ப;குளிர்ந்த நீரும் ,

     

    ஜேமா-வெற்றி கொள்ளும் திறனும் ,

     

    மஹிமா-வெற்றியால் வெற்றியால் விளையும் பெருமையும் ,

     

    வரிமா-அதனால் விளையும் மனத் திருப்தியும் ,

     

    ப்ரதிமா -வீடு மனை முதலிய செல்வங்களும் ,

     

    வர்ஷமா -புத்திர பௌத்ரர்களும் ,

     

    த்ராகுயா -அழியாத சந்ததியும் ,

     

    வ்ருத்தம்-செல்வப் பெருக்கும்,

     

    வ்ருத்தி-கல்வி கேள்விகளில் வளர்ச்சியும் ,

     

    சத்யம் -உண்மையும் ,

     

    ஸ்ரத்தா-உண்மையான் நம்பிக்கையும் ,

     

    ஜகத் -அசையும் மற்றும் அசையாப் பொருள்களும் ,

     

    தனம் -தனமும் ,

     

    வச :-பிறரை வசீகரிக்கும் சக்தியும் ,

     

    த்வீஷி -சரீர காந்தியும் ,

     

    க்ரீடா -ஆடல் மற்றும் பாடல் கலைகளும் ,

     

    மோத:அதனால் விளையும் களிப்பும் ,

     

    ஜாதம்-உருவானதும் ,

     

    ஜனி ஷ்யமாணம்-உருவாகப் போவதும் ,

     

    ஸூக்தம்-தேவர் துதியும் ,

     

    சூக்ருதம் -புண்யமும் ,

     

    வித்தம் -சேமித்த பொருளும் ,

     

    வேத்யம்-இனி கிட்டப் போகும் பொருளும் ,

     

    பூதம் -நிலம் முதலிய பொருட்களும் ,

     

    சுகம்-எளிதில் சென்றடையக் கூடிய ஊரும்,

     

    சுபதம்-நல்வழியும் ,

     

    ருத்தம் -கைகூடிய யாகங்களின் நற் பயனும் ,

     

    ருத்தி-கை கூட இருக்கும் நற் பயனும் ,

     

    க்லுப்தம்-முறையாகச் சேர்த்த பொருளும் ,

     

    க்லுப்தி-செய்யும் செயலில் திறனும் ,

     

    மதி -ஊகித்து அறியும் நுண் மதியும் ,

     

    சுமதி -அரசுப் பணிகளைப் பராமரிக்கும் திறனும் ,

     

    மே -ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும் என்னிடம் உள்ளன .

     

     

     

    மேன்மையும் ,தலைமைத் திறனும்,உட்பகைகளுடன் கோபமும் ,வெளிப்பகைகளிடம் கோபமும் ,ஆழமான மனமும் ,குளிர்ந்த நீரும் ,

     

    வெற்றி கொள்ளும் திறனும் ,வெற்றியால் விளையும் பெருமையும் ,அதனால் விளையும் மனத் திருப்தியும் ,வீடு மனை முதலிய செல்வங்களும் ,

     

    புத்திர பௌத்ரர்களும் ,அழியாத சந்ததியும் ,செல்வப் பெருக்கும்,கல்வி கேள்விகளில் வளர்ச்சியும் ,உண்மையும் ,

     

    உண்மையான் நம்பிக்கையும் ,அசையும் மற்றும் அசையாப் பொருள்களும் ,தனமும் ,பிறரை வசீகரிக்கும் சக்தியும் ,சரீர காந்தியும் ,

     

    ஆடல் மற்றும் பாடல் கலைகளும் ,அதனால் விளையும் களிப்பும் ,(உருவானதும் ,உருவாகப் போவதும் ),தேவர் துதியும் ,

     

    புண்யமும் ,சேமித்த பொருளும் ,இனி கிட்டப் போகும்அத்தகைய  பொருளும் ,நிலம் முதலிய பொருட்களும் ,

     

    எளிதில் சென்றடையக் கூடிய ஊரும்,நல்வழியும் ,

     

    கைகூடிய யாகங்களின் நற் பயனும் ,

     

    கை கூட இருக்கும் அத்தகைய  நற் பயனும் ,

     

    முறையாகச் சேர்த்த பொருளும் ,

     

    செய்யும் செயலில் திறனும் ,

     

    ஊகித்து அறியும் நுண் மதியும் ,

     

    அரசுப் பணிகளைப் பராமரிக்கும் திறனும் ,

     

    ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும் என்னிடம் உள்ளன .

     

     

     

     

     

     

  • சமகம் அர்த்தம் பொழிப்புரை 1

     

    யஜூர் வேதத்தில் தைத்ரிய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள், நான்காவது காண்டத்தின் மத்தியில் அமைத்துள்ளது ஸ்ரீ ருத்ரம் .

     

    Sri Rudram  Image of Lingam.jpg
    Sri Rudram

     

    இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது .

     

    ஒன்று நமகம் , மற்றொன்று சமகம்.

     

    சமகத்தின் அர்த்தம் மட்டும் பொழிப்புரை .

     

    சமகம் 11 அனுவாகங்களாக உள்ளது .

     

    சமகம் .

    ஓம் அக்னா’விஷ்ணோ ஜோஷ’ஸேமாவ’ர்தம்து வாம் கிரஃ’ | 

     

    த்யும்னைர்-வாஜே’பிராக’தம் |

     

     

    வாஜ’ஶ்ச மே ப்ரவஶ்ச’ மே ப்ரய’திஶ்ச மே ப்ரஸி’திஶ்ச மே தீதிஶ்ச’ மே க்ரது’ஶ்ச மே,

     

    ஸ்வர’ஶ்ச மே ஶ்லோக’ஶ்ச மே ஶ்ராவஶ்ச’ மே ஶ்ருதி’ஶ்ச 

     

    மே ஜ்யோதி’ஶ்ச மே ஸுவ’ஶ்ச மேப்ராணஶ்ச’ மே‌உபானஶ்ச’ மே 

     

    வ்யாஶ்ச மே‌உஸு’ஶ்ச மே சித்தம் ச’  ஆதீ’தம் ச மே 

     

    வாக்ச’மே மன’ஶ்ச மே சக்ஷு’ஶ்ச மே ஶ்ரோத்ரம்’ ச மே

     

     தக்ஷ’ஶ்ச மே பலம்’ ச  ஓஜ’ஶ்ச மேஸஹ’ஶ்ச  

     

    ஆயு’ஶ்ச மே ரா ச’ ம த்மா ச’ மே னூஶ்ச’ மே 

     

    ஶர்ம’ ச மேவர்ம’ மே‌உம்கா’னி ச மே‌உஸ்தானி’ ச மே 

     

    பரூக்ம்’ஷி ச மே ஶரீ’ராணி ச மே || 1 ||

     

    அக்னா விஷ்ணு -அக்னியும் , விஷ்ணுவும் ஆகியவர்களே ,

     

    சஜோஷா -நீங்கள் இருவரும் எங்களிடம் ஒருமித்த அன்பு நிறைந்த மனமுடயவர்களாக இருக்க வேண்டும்.

     

    வாம் -உங்களை ,

     

    இமாம் கிர: உங்களைத் துதிக்கும் இந்த வார்த்தைகள்

     

    வர்த்தந்து-செழிக்க வேண்டும் .

     

    யுவாம் -நீங்கள் இருவரும் ,

     

    த்யும்னை :அனைத்து ஐஸ்வர்யங்களுடனும் ,

     

    வாஜேபி ;உணவுப் பொருள்களுடன் ,

     

    ஆகதம்-எங்களை அனுக்ரகிக்க எழுந்தருள  வேண்டும் .

     

    வாஜச்சமே -உணவு மற்றும் நீர் முதலான பானங்கள்

     

    மே-இறைவனை துதிக்கும் என்னிடம் உள்ளன .

     

    பிரசவ -அன்னமளிக்கும் மனதும் ,

     

    ப்ரயதி :பரிசுத்தமும் ,

     

    பிரசதி :-உற்சாகமும் ,

     

    தீதி :-உணவைப் பாதுகாக்கும் திறனும் ,

     

    க்ரது-உணவை சம்பாதிக்கும் யாகமும் ,

     

    ஸ்வர:-யாகத்தில் ஸ்வரத்துடன் மந்திரங்களை உச்சரிக்கும் திறனும் ,

     

    ஸ்லோக : புகழும் ,

     

    ஸ்ராவ; சொல் திறமையும் ,

     

    ச்ருதி: வேள்வியாற்றும் திறனும் ,

     

    ஜ்யோதி :உள்ளொளியும் ,

     

    சுவ :-ஸ்வர்கமும்,

     

    பிராண :-பிராணனும் ,

     

    அபான ;-அபானனும்,

     

    வியாந:-வ்யானனும்,

     

    அஸு-உயிரும் ,

     

    சித்தம்-சித்தமும் ,

     

    ஆதீதம் -சித்தத்தால் அறியப்பட்ட பொருளும் ,

     

    வாக் -வாக்கும் ,

     

    மன : மனமும் ,

     

    சக்ஷு :கண்களும் ,

     

    ச்ரோத்ரம் -காதுகளும்,

     

    தக்ஷ -ஞா னேந்திரியங்களின்  சக்தியும் ,

     

    பலம் -கர்மேந்திரியங் களின் சக்தியும் ,

     

    ஓஜ:-பிராண சக்தியும் ,

     

    சக :பகைவரை வெல்லும் திறமையும் ,

     

    ஆயுஹு -ஆயுளும் ,

     

    ஜரா -முதுமையும் ,

     

    ஆத்மா -அந்தராத்மாவும் ,

     

    தனூ;-நல்ல உடலும் ,

     

    சர்ம-சுகமும் ,

     

    வர்ம;_உடலைக் காக்கும் கவசம் முதலியவையும் ,

     

    அங்கானி-திடமான உறுப்புகளும் ,

     

    அஸ்தானி-எலும்புகளும் ,

     

    பரூம்ஷி -கணுக்களும் ,

     

    சரீராணி -மற்றும் உடலில் உள்ள அனைத்து அவயவங்களும் ,

     

    உணவு மற்றும் நீரும் முதலிய பானங்கள் ,உணவிடும் டும் மனது ,சுத்தம் ,உற்சாகமும் ,உணவைப் பாதுகாக்கும் திறனும் ,உணவை

     

     

    சம்பாதிக்கும் யாகமும் ,யாகத்தில் ஸ்வரங்களை உச்சரிக்கும் திறனும் ,புகழும் ,சொல் திறமையும் ,வேள்வித் திறமையும் ,

     

    உள்ளொளியும் , சுவர்க்கமும்,பிராணனும் ,அபானனும் ,வ்யானனும்,உயிரும் ,சித்தமும் ,சித்தத்தால் அறியப்படும் பொருளும் ,

     

    வாக்கும் ,மனமும் ,கண்களும் ,காதுகளும் ,ஞா னேந்திரியங்களின்  சக்தியும் , கர்மேந்திரியங் களின் சக்தியும் ,

     

    பிராண சக்தியும் ,பகைவரை வெல்லும் திறமையும் ,ஆயுளும் ,முதுமையும் ,அந்தராத்மாவும் ,நல்ல உடலும் ,சுகமும் ,

     

    உடலைக் காக்கும் கவசம் முதலியவையும் ,திடமான உறுப்புகளும் ,எலும்புகளும் ,கணுக்களும் ,

     

    மற்றும் உடலில் உள்ள அனைத்து அவயவங்களும் ,

     

    ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும்  என்னிடம் உள்ளன .

     

    எனவே அக்னியும் விஷ்ணுவும் ஆன நீங்கள் இருவரும் என்னிடம் ஒருமித்த அன்புடயவர்களாக  இருக்க வேண்டும் .

     

    உங்களைத்துதிக்கும் இந்த வார்த்தைகள் செழிக்க வேண்டும் .

     

    நீங்கள் இருவரும் உணவுப் பொருள்கள் மற்றும் அனைத்து ஐஸ்வர்யங்கள், இவற்றுடன் எழுந்தருள  வேண்டும் .

     

     

    Sri Rudram Chamaakm Text

     

     

    Enhanced by Zemanta