விஷ்ணு ஸூக்தம் அர்த்தம் ,பொருளுரை .

ரிக் வேதத்தில் விஷ்ணு பல இடங்களில் துதிக்கப்படுகிறார் .

ஆனால் முழுமையாக ஐந்து ஆறு துதிகள் மட்டும் முழமையாக கிடைக்கப் பெற்றுள்ளன .

அவற்றின் தொகுப்பே இப்போது நாம் துதிக்கப் பயன் படுத்தும் விஷ்ணு ஸூக்தம் .

 

Vishnu , one among the Trinity of Hinduism
Vishnu

 

ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் யஃ பார்தி’வானி விமமே ராஜாக்ம்’ஸி யோ அஸ்க’பாயதுத்த’ரக்‍ம் ஸதஸ்தம்’ விசக்ரமாணஸ்த்ரேதோரு’காயோ .

ய : -எவர் ,யார் ,

 

பார்த்திவானி ரஜாம்சி -இப்புவியையும் ,அதனில் உள்ள அனைத்தையும் ,

 

விமமே -வெளிப்படுத்தினாரோ ,(உருவாக்கினாரோ),

 

ய ;-யார் ,எவர் ,

 

உத்தரம் -மேலுள்ள ,

 

சதஸ்தம் -விண்ணுலகை ,

 

அஸ்கபாய -தாங்கி உள்ளாரோ ,

 

த்ரேதா -(தனது) மூவடியால் ,

 

விசக்ரமாண : அளந்தாரோ ,

 

உருகாய -போற்றித் துதிக்கப் படுகிறாரோ ,

 

விஷ்ணோ -விஷ்ணுவின் ,

 

நுகம் வீர்யாணி -சிறப்பு மிக்க செயல்களை ,

 

ப்ரவோசம் -போற்றுவோம் .

 

யார் இப்புவியையும் ,மேலே உள்ள விண்ணுலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்து ,தாங்குகின்ராரோ ,

 

மூன்று அடிகளால் மூவுலகையும் அளந்தாரோ ,பெரியோரால் போற்றப்படுகிராரோ ,அந்த விஷ்ணுவின்

 

,சீரிய செயல்களைப் போற்றுவோம் .

 

2.விஷ்ணோ’ரராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||……………

 

விஷ்ணோ -விஷ்ணுவின் ,

 

ரராடமஸி -நெற்றியாய் விளங்குகிறாய் ,

 

விஷ்ணோ -விஷ்ணுவின் ,

 

பிருஷ்டம் அஸி -பின் புறமாக உள்ளாய் ,

 

விஷ்ணோ -விஷ்ணுவின் ,

ஶ்னப்த்ரே- ஸ்த – இரண்டு கால்களாக உள்ளீர்கள் ,

 

விஷ்ணோ –விஷ்ணுவின்,

 

ஸ்யூ:அஸி -நாடிகளாக இருக்கிறாய்.

 

விஷ்ணோ -விஷ்ணுவின் ,

 

த்ருவம் அஸி -முடிச்சுகளாக உள்ளீர்கள்.

 

வைஷ்ணவமஸி -விஷ்ணுமயமாக இருக்கிறாய் ,

 

விஷ்ணவே -விஷ்ணுவின் அருளைப் பெறுவதற்காக,

 

 

த்வா -உன்னை (வணங்குகிறேன் ).

 

யக்ய சாலையின் மேல் விட்டமே !

 

நீ விஷ்ணுவின் நெற்றியாக விளங்குகிறாய் .

 

பின் புறமாக இருக்கிறாய் .

வாயிற் கால்களே !

 

 

நீங்கள் அவரது இரு கால்களாக உள்ளீர்கள் .

 

கயிறே !

 

நீ , அவரது நாடிகளாக இருக்கிறாய் .

 

முடிச்சுக்களே !

 

நீங்கள் , அவரது முடிச்சுகளாக உள்ளீர்கள் .

 

3.தத’ஸ்ய ப்ரியமபிபாதோ’ அஶ்யாம் | னரோ யத்ர’ தேவயவோ மத’ன்தி |உருக்ரமஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா | விஷ்ணோ” பதே ப’ரமே மத்வ உத்ஸஃ’ |

3

யத்ர -எங்கு , எங்கெல்லாம்,

 

தேவயவ -தேவர்கள் ,

 

மதந்தி -மகிழ்கிறார்களோ ,

 

நர :-மனிதர்கள் ,

 

ப்ரியமிபிபாத -செல்ல விரும்புகிறார்களோ ,

 

உருக்ரமஸ்ய -விஷ்ணுவின் ,

 

ஸ ஹி பந்துரிஸ்தா -மனத்திற்கு உகந்த இடமோ ,(இருப்பிடமோ ),

 

விஷ்ணோ -விஷ்ணுவின் ,

 

பரமே பதே -உயர்ந்த ,அனைத்திற்கும் மேலான திருவடியில் ,

 

மத்வ : அமுதத் தேனூற்று பெருகுகிறதோ ,

 

ததஸ்ய -அங்கே,

 

அச்யாம் -அடைவேனாக .

 

4.ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய | ம்றுகோ ன பீமஃ கு’சரோ கி’ரிஷ்டாஃ |

 

யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு | அதி’க்ஷயன்தி புவ’னானி விஶ்வா” |பரோ மாத்ர’யா தனுவா’ வ்றுதான | ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி |………………….4

|

எங்கு தேவர்கள் மகிழ்ந்து இருக்கிறார்களோ ,எங்கு மனிதர்கள் செல்ல விரும்புகிறார்களோ ,

 

எது விஷ்ணுவாகிய உமக்கு உகந்த இருப்பிடமோ ,எங்கே அமுதத் தேனூற்று பெருகுகிறதோ ,

 

அந்த விஷ்ணுவின் திருவடியை அடைவேனாக,

 

 

கிரிஷ்டா -மலை மீது,

 

குசர -திரிகின்ற ,

 

பீமக : மிருக ;-பெரிய யானை ,

 

யஸ்ய -யாருடைய ,

 

உருஷு ,த்ரிஷு விக்ரமநேஷு -மூன்று பெரிய அடிகளுள் ,

 

விஸ்வா -அனைத்து ,

 

புவனானி -உலகங்களும் ,

 

அதிஷியந்தி -அடங்குகின்றனவோ ,

 

-விஷ்ணு – ப்ரதத் -அந்த விஷ்ணுவை ,

 

வீர்யாய -சிறப்பிற்காக ,

 

ஸ்தவதே -போற்றுவோம் .

 

தனுவா -அத்திருமேனி ,

 

மாத்ரயா பர ;வருதான ;- அளவில் அடங்காதது .

 

தே -அதன் (உமது ),

 

மஹித்வம் -சிறப்புகளை ,

 

அனு அச்னுவந்தி -அறிய முடியாது .

 

மலையில் உலவும் பெரிய யானை போல் சுதந்திரமானவரும்,கட்டுக்கு அடங்காதவரும் ,

 

தனது மூன்று அடிகளுக்குள் அனைத்து உலகங்களையும் அடக்கிய்வருமான அந்த விஷ்ணுவை அவரது

 

செயல் சிறத்திற்காக போற்றுவோம் .

 

இறைவனே !

 

உமது திருமேனி அளவிற்கு அடங்காதது .

 

உமது சிறப்புக்கள் அறிய முடியாதவை .

 

5.உபே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேவத்வம் | பரமஸ்ய’ வித்ஸே | விச’க்ரமே ப்றுதிவீமேஷ ஏதாம் | க்ஷேத்ரா’ய விஷ்ணுர்மனு’ஷே தஶஸ்யன் .

தே -உமது ,

ப்ருதிவ்யா –நறுமணம் நிறைந்த பூமி ,

 

உபே -இரண்டை ,

 

வித்ம-அறிவோம் (நாங்கள் )

 

விஷ்ணோ தேவ -ஒளி திகழ் திருமாலே !

 

த்வம் -நீர் மட்டுமே ,

 

பரமஸ்ய -உயர்ந்த , மேலான உலகை,

 

வித்சே –அறிவீர்,

 

ஏஷ -இந்த ,

 

ப்ருத்வீம் -புவியில் ,

 

விஷ்ணு -விஷ்ணு ,

 

விசக்ரமே -நடந்து ,

 

ஏதாம் -அதனை ,

 

க்ஷேத்ராய -இருப்பிடமாகக் கொள்வதற்கு ,

 

மனுஷே –மனிதர்களுக்கு,

 

ததஸ்யன் -கொடுத்துள்ளார் .

 

விஷ்ணுவே !

 

 

நறுமணம் நிறைந்ததான பூமி மற்றும் விண்ணுலகம் இரண்டையும் நாங்கள் அறிவோம் .

 

ஒளி மிக்க திருமாலே !

 

நீர் மட்டுமே மேலான் உலகை அறிவீர் .

 

நீர் நடந்த இந்த பூமியை மனிதர்களுக்கு இருப்பிடமாகக் கொடுத்துள்ளீர் .

6.

த்ருவாஸோ’ அஸ்ய கீரயோ ஜனா’ஸஃ | ஊருக்ஷிதிக்‍ம்ஸுஜனி’மாசகார | த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ ஏதாம் | விச’க்ரமே ஶதர்ச’ஸம் மஹித்வா | ப்ரவிஷ்ணு’ரஸ்து தவஸஸ்தவீ’யான் | த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||……………………………………………………….6.

 

கீரய ;ஜனாஸ -பணிவு மிக்க மக்கள் ,

 

அஸ்ய -அவரில் ,

 

த்ருவாஸ -பாதுகாப்பான உறைவிடைத்தை தேடுகிறார்கள் .

 

ஏதாம் -இந்த ,

 

ஊருஷிதம் -பூமியை ,

 

சுஜனிமா -விரிந்து பரந்த வாழ்விடமாக ,

 

சகார -செய்துள்ளார் .

 

சதவர்ச்சசம் -அளவிலா எழில் பொருந்திய ,

 

ஏஷு -இந்த ,

 

ப்ருத்வீம் -பூமியை ,

 

தேவ -தேவனான விஷ்ணு ,

 

மகித்மா -தந்து பெருமையால் ,

 

த்ரி -மும்முறை ,

 

விசக்ரமே–அளந்துள்ளார் .

 

தவ -உமது ,

 

ஸ : ஸ்தவீயான் -சிறந்த ,மேலான பெருமை ,

 

பிரவிஷ்ணு -விஷ்ணு ,

 

அஸ்து -உள்ளது .

 

து –மேலும்,

 

ஏஷம் ஹி -இதுவே ,

 

அஸ்ய ஸ்தவிரஸ்ய -இந்த மாபெரும் சிறப்பின் ,

 

நாம -பெயர்.

 

பணிவு மிகுந்த மக்கள் ,அவரில் பாதுகாப்பான உறைவிடத்தைத் தேடுகிறார்கள் .

 

இப்பூமியை , அவர் , இந்த மக்களுக்காக விரிந்து பரந்ததாகச் செய்துள்ளார் .

 

எழில் கொஞ்சும் இப்புவியை விஷ்ணு தனது கீர்த்தியினால் மும்முறை அளந்துள்ளார் .

 

மஹா விஷ்ணுவே !

 

உமது மேலான காக்கும் திறத்தால் நீர் விஷ்ணு எனப் பெயர் பெறுகிறீர் .

 

இது உமது பெருமைக்குப் பொருத்தமாக உள்ளது .

 

7.அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே | ப்றுதிவ்யாஃஸப்ததாம’பிஃ |

இதம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே பதம் | ஸமூ’டமஸ்ய பாக்‍ம் ஸுரே ||

 

ய ;-எந்த ,

 

ப்ருதிவ்யா -பூமியின் ,

 

சப்ததாமஅபி -ஏழு பகுதிகளிலும் ,

 

விசக்ரமே -நடந்தாரோ ,

 

அத -அந்த பூமியின் ,

 

தேவா -தேவர்கள் ,

 

ந -நம்மை ,

 

அவந்து -காக்கட்டும் .

 

விஷ்ணு -விஷ்ணு ,

 

இதம் விசக்ரமே -நடந்தபோது ,

 

பதம்-தமது திருவடிகளை ,

 

திரேதா -மும்முறை ,

 

நிதேத -வைத்தார் .

7

அஸ்ய -அவரது ,

 

பாம்சுரே -பாத தூசியால் ,

ஸமூட -மூடப்பட்டது .

 

8.த்ரீணி’ பதா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ | ததோ தர்மா’ணி தாரயன்’ |

 

விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்யத யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே | இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||

 

விஷ்ணு -விஷ்ணு ,

 

கோபா -அனைத்தையும் காப்பவரும் ,

 

அதாப்ய -ஏமாற்றப்பட முடியாதவரும் ,

 

த்ரீணி பதா -மூவடிகளால் ,

 

விசக்ரமே -அளந்து ,

 

அத -இங்கே ,

தர்மாணி -தர்மங்களை ,

தாரயன் -நிலை நிறுத்தினார் .

இந்த்ரஸ்ய -இந்திரனனின் ,

யுஜ்ய :சஹா -நெருங்கிய நண்பனான ,

விஷ்ணோ -விஷ்ணுவின் ,

கர்மாணி -செயல்களை ,

பச்யத -பாருங்கள்.

யத : அவற்றின் மூலம் ,

வ்ரதானி -வாழ்க்கை நெறிகளை ,

பஸ்பசே -வெளிப்படுத்தினார் .

 

விஷ்ணு அனைத்தையும் காப்பாற்றுவரும் ஒருவராலும் ஏமாற்றப்பட முடியாதவரும் ஆவார் .

தனது மூன்று அடிகளால் இவுலகை அளந்து,,இங்கே தர்மத்தை நிலை நிறுத்தியுள்ளார் .

இந்திரனின் நெருங்கிய நண்பனான விஷ்ணுவின் செயல்திறத்தைப் பாருங்கள் .

அவற்றின் மூலம் வாழ்க்கை நியதிகளை வெளிப்படுத்தினார் .

 

9.தத்விஷ்ணோ”ஃ பமம் தக்‍ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ | திவீக்ஷுராத’தம் | தத்விப்ரா’ஸோ வின்யவோ’ ஜாக்றுவாக்‍ம்ஸ்ஸமி’ன்ததே | விஷ்ணோர்யத்ப’மம் தம் 

 

ஆததம் – பரந்து  விரிந்த ,

திவி இவ -வானம் போல் ,

சஷு -கண்களை உடையவர்கள் ,

ஸூரய -ரிஷிகள் ,

தத் விஷ்ணோ -அந்த விஷ்ணுவின் ,

பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை ,

ஸதா -எப்பொழுதும் ,

பஸ்யந்தி -காண்கிறார்கள் .

விப்ராஸ் -கவிதையை விரும்புபவர்களும் ,

விபன்யவ -முனிவர்களும் ,

 

ஜாக்ர்வாம்ஸ -விழிப்புற்றவர்களுமான ,

யத் -இவர்களே ,

விஷ்ணோ -விஷ்ணுவின் ,

யத் பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை ,

ஸமிந்ததே -ஒளிரச் செய்கிறார்கள் .

 

விரிந்து பரந்த வானம் போல் கண்களை உடையவர்களான ரிஷிகள் ,விஷ்ணுவின் மேலான உறைவிடத்தை

,எப்போதும் காண்கிறார்கள் .கவிதையை விரும்புபவர்களும் ,முனிவர்களும்,விழிப்புற்றவர்களுமான

இவர்களே விஷ்ணுவின் மேலான அந்த உறைவிடத்தை ஒளிரச் செய்கிறார்கள் .

 

பர்யா”ப்த்யாஅன’ன்தராயா ஸர்வ’ஸ்தோமோ‌உதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||

 

பர்யாப்த்யா -அளவற்ற ,

அனந்த ஆயாத -எல்லையில்லா செல்வம் பெறுவதற்கும் ,

ஸர்வத்தோம -மங்காப் புகழ் அடைவதற்கும் ,

அதிராத்ரம் – அதிராத்ரம்,

உத்தம -சிறந்த ,

மஹ -உயர்ந்த யாகம் ,

பவதி- ஆகிறது .

தென் -அந்த யாகத்தால் ,

ஸர்வஸ்ய ஆப்த்யை- அனைத்தும் கிடைக்கிறது .

ஸர்வஸ்ய ஜித்யை -அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .

சர்வம் ஏவ -அனைத்தும் ,

ஆப்னோதி -அடையப்பெருகின்றன .

ஸர்வம் -அனைத்தும் வளம் பெறுகின்றன .

 

எல்லையில்லா வற்றாத செல்வம் பெறுவதற்கும் ,மங்காப் புகழ் பெறுவதற்கும் ,அதிராத்ரம் என்னும் யாகமே

மேலான யாஹம் ஆகும் .

அந்த யாகத்தால் அனைத்தும் கிடைக்கின்றன .

அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .

அனைத்தும் அடையப் படுகிறது .

அனைத்தும் வளம் பெறுகின்றன .

விஷ்ணு ஸூக்தம் நிறைவுற்றது.

ஓம் தத் ஸத்

 

ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் யஃ பார்தி’வானி விமே ராஜாக்ம்’ஸி யோ அஸ்க’பாதுத்த’ரக்‍ம் தஸ்தம்’ விசக்ரமாஸ்த்ரேதோரு’காயோ விஷ்ணோ’ராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||

தத’ஸ்ய ப்ரிபிபாதோ’ அஶ்யாம் | னரோ யத்ர’ தேவோ மத’ன்தி |ருக்ரஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா | விஷ்ணோ” தே ப’மே மத்வ உத்ஸஃ’ | ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய | ம்றுகோ ன பீமஃ கு’ரோ கி’ரிஷ்டாஃ | யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு | அதி’க்ஷன்தி புவ’னானி விஶ்வா” |ரோ மாத்ர’யா னுவா’ வ்றுதான | ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி ||

பே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேத்வம் | மஸ்ய’ வித்ஸே | விச’க்ரமே ப்றுதிவீமேஷ தாம் | க்ஷேத்ரா’ விஷ்ணுர்மனு’ஷே தஸ்யன் | த்ருவாஸோ’ அஸ்ய கீயோ ஜனா’ஸஃ | ருக்ஷிதிக்‍ம்ஸுஜனி’மாசகார | த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ தாம் | விச’க்ரமே தர்ச’ஸம் மஹித்வா | ப்ரவிஷ்ணு’ரஸ்து ஸ்தவீ’யான் | த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||

அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே | ப்றுதிவ்யாஃப்ததாம’பிஃ | தம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே தம் | ஸமூ’டமஸ்ய பாக்‍ம் ஸுரே || த்ரீணி’ தா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ | ததோ தர்மா’ணி தாரயன்’ | விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்ய யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே | இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||

தத்விஷ்ணோ”ஃ பமம் தக்‍ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ | திவீக்ஷுராத’தம் | தத்விப்ரா’ஸோ வின்யவோ’ ஜாக்றுவாக்‍ம்ஸ்ஸமி’ன்ததே | விஷ்ணோர்யத்ப’மம் தம் | பர்யா”ப்த்யாஅன’ன்தராயா ஸர்வ’ஸ்தோமோ‌உதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

 

 

Comments

Leave a Reply

More posts

Discover more from Ramanisblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading