Tag: விஷ்ணு ஸூக்தம் அர்த்தம்

  • விஷ்ணு ஸூக்தம் அர்த்தம் ,பொருளுரை .

    ரிக் வேதத்தில் விஷ்ணு பல இடங்களில் துதிக்கப்படுகிறார் .

    ஆனால் முழுமையாக ஐந்து ஆறு துதிகள் மட்டும் முழமையாக கிடைக்கப் பெற்றுள்ளன .

    அவற்றின் தொகுப்பே இப்போது நாம் துதிக்கப் பயன் படுத்தும் விஷ்ணு ஸூக்தம் .

     

    Vishnu , one among the Trinity of Hinduism
    Vishnu

     

    ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் யஃ பார்தி’வானி விமமே ராஜாக்ம்’ஸி யோ அஸ்க’பாயதுத்த’ரக்‍ம் ஸதஸ்தம்’ விசக்ரமாணஸ்த்ரேதோரு’காயோ .

    ய : -எவர் ,யார் ,

     

    பார்த்திவானி ரஜாம்சி -இப்புவியையும் ,அதனில் உள்ள அனைத்தையும் ,

     

    விமமே -வெளிப்படுத்தினாரோ ,(உருவாக்கினாரோ),

     

    ய ;-யார் ,எவர் ,

     

    உத்தரம் -மேலுள்ள ,

     

    சதஸ்தம் -விண்ணுலகை ,

     

    அஸ்கபாய -தாங்கி உள்ளாரோ ,

     

    த்ரேதா -(தனது) மூவடியால் ,

     

    விசக்ரமாண : அளந்தாரோ ,

     

    உருகாய -போற்றித் துதிக்கப் படுகிறாரோ ,

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

     

    நுகம் வீர்யாணி -சிறப்பு மிக்க செயல்களை ,

     

    ப்ரவோசம் -போற்றுவோம் .

     

    யார் இப்புவியையும் ,மேலே உள்ள விண்ணுலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்து ,தாங்குகின்ராரோ ,

     

    மூன்று அடிகளால் மூவுலகையும் அளந்தாரோ ,பெரியோரால் போற்றப்படுகிராரோ ,அந்த விஷ்ணுவின்

     

    ,சீரிய செயல்களைப் போற்றுவோம் .

     

    2.விஷ்ணோ’ரராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||……………

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

     

    ரராடமஸி -நெற்றியாய் விளங்குகிறாய் ,

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

     

    பிருஷ்டம் அஸி -பின் புறமாக உள்ளாய் ,

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

    ஶ்னப்த்ரே- ஸ்த – இரண்டு கால்களாக உள்ளீர்கள் ,

     

    விஷ்ணோ –விஷ்ணுவின்,

     

    ஸ்யூ:அஸி -நாடிகளாக இருக்கிறாய்.

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

     

    த்ருவம் அஸி -முடிச்சுகளாக உள்ளீர்கள்.

     

    வைஷ்ணவமஸி -விஷ்ணுமயமாக இருக்கிறாய் ,

     

    விஷ்ணவே -விஷ்ணுவின் அருளைப் பெறுவதற்காக,

     

     

    த்வா -உன்னை (வணங்குகிறேன் ).

     

    யக்ய சாலையின் மேல் விட்டமே !

     

    நீ விஷ்ணுவின் நெற்றியாக விளங்குகிறாய் .

     

    பின் புறமாக இருக்கிறாய் .

    வாயிற் கால்களே !

     

     

    நீங்கள் அவரது இரு கால்களாக உள்ளீர்கள் .

     

    கயிறே !

     

    நீ , அவரது நாடிகளாக இருக்கிறாய் .

     

    முடிச்சுக்களே !

     

    நீங்கள் , அவரது முடிச்சுகளாக உள்ளீர்கள் .

     

    3.தத’ஸ்ய ப்ரியமபிபாதோ’ அஶ்யாம் | னரோ யத்ர’ தேவயவோ மத’ன்தி |உருக்ரமஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா | விஷ்ணோ” பதே ப’ரமே மத்வ உத்ஸஃ’ |

    3

    யத்ர -எங்கு , எங்கெல்லாம்,

     

    தேவயவ -தேவர்கள் ,

     

    மதந்தி -மகிழ்கிறார்களோ ,

     

    நர :-மனிதர்கள் ,

     

    ப்ரியமிபிபாத -செல்ல விரும்புகிறார்களோ ,

     

    உருக்ரமஸ்ய -விஷ்ணுவின் ,

     

    ஸ ஹி பந்துரிஸ்தா -மனத்திற்கு உகந்த இடமோ ,(இருப்பிடமோ ),

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

     

    பரமே பதே -உயர்ந்த ,அனைத்திற்கும் மேலான திருவடியில் ,

     

    மத்வ : அமுதத் தேனூற்று பெருகுகிறதோ ,

     

    ததஸ்ய -அங்கே,

     

    அச்யாம் -அடைவேனாக .

     

    4.ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய | ம்றுகோ ன பீமஃ கு’சரோ கி’ரிஷ்டாஃ |

     

    யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு | அதி’க்ஷயன்தி புவ’னானி விஶ்வா” |பரோ மாத்ர’யா தனுவா’ வ்றுதான | ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி |………………….4

    |

    எங்கு தேவர்கள் மகிழ்ந்து இருக்கிறார்களோ ,எங்கு மனிதர்கள் செல்ல விரும்புகிறார்களோ ,

     

    எது விஷ்ணுவாகிய உமக்கு உகந்த இருப்பிடமோ ,எங்கே அமுதத் தேனூற்று பெருகுகிறதோ ,

     

    அந்த விஷ்ணுவின் திருவடியை அடைவேனாக,

     

     

    கிரிஷ்டா -மலை மீது,

     

    குசர -திரிகின்ற ,

     

    பீமக : மிருக ;-பெரிய யானை ,

     

    யஸ்ய -யாருடைய ,

     

    உருஷு ,த்ரிஷு விக்ரமநேஷு -மூன்று பெரிய அடிகளுள் ,

     

    விஸ்வா -அனைத்து ,

     

    புவனானி -உலகங்களும் ,

     

    அதிஷியந்தி -அடங்குகின்றனவோ ,

     

    -விஷ்ணு – ப்ரதத் -அந்த விஷ்ணுவை ,

     

    வீர்யாய -சிறப்பிற்காக ,

     

    ஸ்தவதே -போற்றுவோம் .

     

    தனுவா -அத்திருமேனி ,

     

    மாத்ரயா பர ;வருதான ;- அளவில் அடங்காதது .

     

    தே -அதன் (உமது ),

     

    மஹித்வம் -சிறப்புகளை ,

     

    அனு அச்னுவந்தி -அறிய முடியாது .

     

    மலையில் உலவும் பெரிய யானை போல் சுதந்திரமானவரும்,கட்டுக்கு அடங்காதவரும் ,

     

    தனது மூன்று அடிகளுக்குள் அனைத்து உலகங்களையும் அடக்கிய்வருமான அந்த விஷ்ணுவை அவரது

     

    செயல் சிறத்திற்காக போற்றுவோம் .

     

    இறைவனே !

     

    உமது திருமேனி அளவிற்கு அடங்காதது .

     

    உமது சிறப்புக்கள் அறிய முடியாதவை .

     

    5.உபே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேவத்வம் | பரமஸ்ய’ வித்ஸே | விச’க்ரமே ப்றுதிவீமேஷ ஏதாம் | க்ஷேத்ரா’ய விஷ்ணுர்மனு’ஷே தஶஸ்யன் .

    தே -உமது ,

    ப்ருதிவ்யா –நறுமணம் நிறைந்த பூமி ,

     

    உபே -இரண்டை ,

     

    வித்ம-அறிவோம் (நாங்கள் )

     

    விஷ்ணோ தேவ -ஒளி திகழ் திருமாலே !

     

    த்வம் -நீர் மட்டுமே ,

     

    பரமஸ்ய -உயர்ந்த , மேலான உலகை,

     

    வித்சே –அறிவீர்,

     

    ஏஷ -இந்த ,

     

    ப்ருத்வீம் -புவியில் ,

     

    விஷ்ணு -விஷ்ணு ,

     

    விசக்ரமே -நடந்து ,

     

    ஏதாம் -அதனை ,

     

    க்ஷேத்ராய -இருப்பிடமாகக் கொள்வதற்கு ,

     

    மனுஷே –மனிதர்களுக்கு,

     

    ததஸ்யன் -கொடுத்துள்ளார் .

     

    விஷ்ணுவே !

     

     

    நறுமணம் நிறைந்ததான பூமி மற்றும் விண்ணுலகம் இரண்டையும் நாங்கள் அறிவோம் .

     

    ஒளி மிக்க திருமாலே !

     

    நீர் மட்டுமே மேலான் உலகை அறிவீர் .

     

    நீர் நடந்த இந்த பூமியை மனிதர்களுக்கு இருப்பிடமாகக் கொடுத்துள்ளீர் .

    6.

    த்ருவாஸோ’ அஸ்ய கீரயோ ஜனா’ஸஃ | ஊருக்ஷிதிக்‍ம்ஸுஜனி’மாசகார | த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ ஏதாம் | விச’க்ரமே ஶதர்ச’ஸம் மஹித்வா | ப்ரவிஷ்ணு’ரஸ்து தவஸஸ்தவீ’யான் | த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||……………………………………………………….6.

     

    கீரய ;ஜனாஸ -பணிவு மிக்க மக்கள் ,

     

    அஸ்ய -அவரில் ,

     

    த்ருவாஸ -பாதுகாப்பான உறைவிடைத்தை தேடுகிறார்கள் .

     

    ஏதாம் -இந்த ,

     

    ஊருஷிதம் -பூமியை ,

     

    சுஜனிமா -விரிந்து பரந்த வாழ்விடமாக ,

     

    சகார -செய்துள்ளார் .

     

    சதவர்ச்சசம் -அளவிலா எழில் பொருந்திய ,

     

    ஏஷு -இந்த ,

     

    ப்ருத்வீம் -பூமியை ,

     

    தேவ -தேவனான விஷ்ணு ,

     

    மகித்மா -தந்து பெருமையால் ,

     

    த்ரி -மும்முறை ,

     

    விசக்ரமே–அளந்துள்ளார் .

     

    தவ -உமது ,

     

    ஸ : ஸ்தவீயான் -சிறந்த ,மேலான பெருமை ,

     

    பிரவிஷ்ணு -விஷ்ணு ,

     

    அஸ்து -உள்ளது .

     

    து –மேலும்,

     

    ஏஷம் ஹி -இதுவே ,

     

    அஸ்ய ஸ்தவிரஸ்ய -இந்த மாபெரும் சிறப்பின் ,

     

    நாம -பெயர்.

     

    பணிவு மிகுந்த மக்கள் ,அவரில் பாதுகாப்பான உறைவிடத்தைத் தேடுகிறார்கள் .

     

    இப்பூமியை , அவர் , இந்த மக்களுக்காக விரிந்து பரந்ததாகச் செய்துள்ளார் .

     

    எழில் கொஞ்சும் இப்புவியை விஷ்ணு தனது கீர்த்தியினால் மும்முறை அளந்துள்ளார் .

     

    மஹா விஷ்ணுவே !

     

    உமது மேலான காக்கும் திறத்தால் நீர் விஷ்ணு எனப் பெயர் பெறுகிறீர் .

     

    இது உமது பெருமைக்குப் பொருத்தமாக உள்ளது .

     

    7.அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே | ப்றுதிவ்யாஃஸப்ததாம’பிஃ |

    இதம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே பதம் | ஸமூ’டமஸ்ய பாக்‍ம் ஸுரே ||

     

    ய ;-எந்த ,

     

    ப்ருதிவ்யா -பூமியின் ,

     

    சப்ததாமஅபி -ஏழு பகுதிகளிலும் ,

     

    விசக்ரமே -நடந்தாரோ ,

     

    அத -அந்த பூமியின் ,

     

    தேவா -தேவர்கள் ,

     

    ந -நம்மை ,

     

    அவந்து -காக்கட்டும் .

     

    விஷ்ணு -விஷ்ணு ,

     

    இதம் விசக்ரமே -நடந்தபோது ,

     

    பதம்-தமது திருவடிகளை ,

     

    திரேதா -மும்முறை ,

     

    நிதேத -வைத்தார் .

    7

    அஸ்ய -அவரது ,

     

    பாம்சுரே -பாத தூசியால் ,

    ஸமூட -மூடப்பட்டது .

     

    8.த்ரீணி’ பதா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ | ததோ தர்மா’ணி தாரயன்’ |

     

    விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்யத யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே | இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||

     

    விஷ்ணு -விஷ்ணு ,

     

    கோபா -அனைத்தையும் காப்பவரும் ,

     

    அதாப்ய -ஏமாற்றப்பட முடியாதவரும் ,

     

    த்ரீணி பதா -மூவடிகளால் ,

     

    விசக்ரமே -அளந்து ,

     

    அத -இங்கே ,

    தர்மாணி -தர்மங்களை ,

    தாரயன் -நிலை நிறுத்தினார் .

    இந்த்ரஸ்ய -இந்திரனனின் ,

    யுஜ்ய :சஹா -நெருங்கிய நண்பனான ,

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

    கர்மாணி -செயல்களை ,

    பச்யத -பாருங்கள்.

    யத : அவற்றின் மூலம் ,

    வ்ரதானி -வாழ்க்கை நெறிகளை ,

    பஸ்பசே -வெளிப்படுத்தினார் .

     

    விஷ்ணு அனைத்தையும் காப்பாற்றுவரும் ஒருவராலும் ஏமாற்றப்பட முடியாதவரும் ஆவார் .

    தனது மூன்று அடிகளால் இவுலகை அளந்து,,இங்கே தர்மத்தை நிலை நிறுத்தியுள்ளார் .

    இந்திரனின் நெருங்கிய நண்பனான விஷ்ணுவின் செயல்திறத்தைப் பாருங்கள் .

    அவற்றின் மூலம் வாழ்க்கை நியதிகளை வெளிப்படுத்தினார் .

     

    9.தத்விஷ்ணோ”ஃ பமம் தக்‍ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ | திவீக்ஷுராத’தம் | தத்விப்ரா’ஸோ வின்யவோ’ ஜாக்றுவாக்‍ம்ஸ்ஸமி’ன்ததே | விஷ்ணோர்யத்ப’மம் தம் 

     

    ஆததம் – பரந்து  விரிந்த ,

    திவி இவ -வானம் போல் ,

    சஷு -கண்களை உடையவர்கள் ,

    ஸூரய -ரிஷிகள் ,

    தத் விஷ்ணோ -அந்த விஷ்ணுவின் ,

    பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை ,

    ஸதா -எப்பொழுதும் ,

    பஸ்யந்தி -காண்கிறார்கள் .

    விப்ராஸ் -கவிதையை விரும்புபவர்களும் ,

    விபன்யவ -முனிவர்களும் ,

     

    ஜாக்ர்வாம்ஸ -விழிப்புற்றவர்களுமான ,

    யத் -இவர்களே ,

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

    யத் பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை ,

    ஸமிந்ததே -ஒளிரச் செய்கிறார்கள் .

     

    விரிந்து பரந்த வானம் போல் கண்களை உடையவர்களான ரிஷிகள் ,விஷ்ணுவின் மேலான உறைவிடத்தை

    ,எப்போதும் காண்கிறார்கள் .கவிதையை விரும்புபவர்களும் ,முனிவர்களும்,விழிப்புற்றவர்களுமான

    இவர்களே விஷ்ணுவின் மேலான அந்த உறைவிடத்தை ஒளிரச் செய்கிறார்கள் .

     

    பர்யா”ப்த்யாஅன’ன்தராயா ஸர்வ’ஸ்தோமோ‌உதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||

     

    பர்யாப்த்யா -அளவற்ற ,

    அனந்த ஆயாத -எல்லையில்லா செல்வம் பெறுவதற்கும் ,

    ஸர்வத்தோம -மங்காப் புகழ் அடைவதற்கும் ,

    அதிராத்ரம் – அதிராத்ரம்,

    உத்தம -சிறந்த ,

    மஹ -உயர்ந்த யாகம் ,

    பவதி- ஆகிறது .

    தென் -அந்த யாகத்தால் ,

    ஸர்வஸ்ய ஆப்த்யை- அனைத்தும் கிடைக்கிறது .

    ஸர்வஸ்ய ஜித்யை -அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .

    சர்வம் ஏவ -அனைத்தும் ,

    ஆப்னோதி -அடையப்பெருகின்றன .

    ஸர்வம் -அனைத்தும் வளம் பெறுகின்றன .

     

    எல்லையில்லா வற்றாத செல்வம் பெறுவதற்கும் ,மங்காப் புகழ் பெறுவதற்கும் ,அதிராத்ரம் என்னும் யாகமே

    மேலான யாஹம் ஆகும் .

    அந்த யாகத்தால் அனைத்தும் கிடைக்கின்றன .

    அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .

    அனைத்தும் அடையப் படுகிறது .

    அனைத்தும் வளம் பெறுகின்றன .

    விஷ்ணு ஸூக்தம் நிறைவுற்றது.

    ஓம் தத் ஸத்

     

    ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் யஃ பார்தி’வானி விமே ராஜாக்ம்’ஸி யோ அஸ்க’பாதுத்த’ரக்‍ம் தஸ்தம்’ விசக்ரமாஸ்த்ரேதோரு’காயோ விஷ்ணோ’ராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||

    தத’ஸ்ய ப்ரிபிபாதோ’ அஶ்யாம் | னரோ யத்ர’ தேவோ மத’ன்தி |ருக்ரஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா | விஷ்ணோ” தே ப’மே மத்வ உத்ஸஃ’ | ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய | ம்றுகோ ன பீமஃ கு’ரோ கி’ரிஷ்டாஃ | யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு | அதி’க்ஷன்தி புவ’னானி விஶ்வா” |ரோ மாத்ர’யா னுவா’ வ்றுதான | ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி ||

    பே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேத்வம் | மஸ்ய’ வித்ஸே | விச’க்ரமே ப்றுதிவீமேஷ தாம் | க்ஷேத்ரா’ விஷ்ணுர்மனு’ஷே தஸ்யன் | த்ருவாஸோ’ அஸ்ய கீயோ ஜனா’ஸஃ | ருக்ஷிதிக்‍ம்ஸுஜனி’மாசகார | த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ தாம் | விச’க்ரமே தர்ச’ஸம் மஹித்வா | ப்ரவிஷ்ணு’ரஸ்து ஸ்தவீ’யான் | த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||

    அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே | ப்றுதிவ்யாஃப்ததாம’பிஃ | தம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே தம் | ஸமூ’டமஸ்ய பாக்‍ம் ஸுரே || த்ரீணி’ தா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ | ததோ தர்மா’ணி தாரயன்’ | விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்ய யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே | இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||

    தத்விஷ்ணோ”ஃ பமம் தக்‍ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ | திவீக்ஷுராத’தம் | தத்விப்ரா’ஸோ வின்யவோ’ ஜாக்றுவாக்‍ம்ஸ்ஸமி’ன்ததே | விஷ்ணோர்யத்ப’மம் தம் | பர்யா”ப்த்யாஅன’ன்தராயா ஸர்வ’ஸ்தோமோ‌உதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||

    ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||