Tag: துதிகள்

  • விஷ்ணு ஸூக்தம் அர்த்தம் ,பொருளுரை .

    ரிக் வேதத்தில் விஷ்ணு பல இடங்களில் துதிக்கப்படுகிறார் .

    ஆனால் முழுமையாக ஐந்து ஆறு துதிகள் மட்டும் முழமையாக கிடைக்கப் பெற்றுள்ளன .

    அவற்றின் தொகுப்பே இப்போது நாம் துதிக்கப் பயன் படுத்தும் விஷ்ணு ஸூக்தம் .

     

    Vishnu , one among the Trinity of Hinduism
    Vishnu

     

    ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் யஃ பார்தி’வானி விமமே ராஜாக்ம்’ஸி யோ அஸ்க’பாயதுத்த’ரக்‍ம் ஸதஸ்தம்’ விசக்ரமாணஸ்த்ரேதோரு’காயோ .

    ய : -எவர் ,யார் ,

     

    பார்த்திவானி ரஜாம்சி -இப்புவியையும் ,அதனில் உள்ள அனைத்தையும் ,

     

    விமமே -வெளிப்படுத்தினாரோ ,(உருவாக்கினாரோ),

     

    ய ;-யார் ,எவர் ,

     

    உத்தரம் -மேலுள்ள ,

     

    சதஸ்தம் -விண்ணுலகை ,

     

    அஸ்கபாய -தாங்கி உள்ளாரோ ,

     

    த்ரேதா -(தனது) மூவடியால் ,

     

    விசக்ரமாண : அளந்தாரோ ,

     

    உருகாய -போற்றித் துதிக்கப் படுகிறாரோ ,

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

     

    நுகம் வீர்யாணி -சிறப்பு மிக்க செயல்களை ,

     

    ப்ரவோசம் -போற்றுவோம் .

     

    யார் இப்புவியையும் ,மேலே உள்ள விண்ணுலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்து ,தாங்குகின்ராரோ ,

     

    மூன்று அடிகளால் மூவுலகையும் அளந்தாரோ ,பெரியோரால் போற்றப்படுகிராரோ ,அந்த விஷ்ணுவின்

     

    ,சீரிய செயல்களைப் போற்றுவோம் .

     

    2.விஷ்ணோ’ரராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||……………

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

     

    ரராடமஸி -நெற்றியாய் விளங்குகிறாய் ,

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

     

    பிருஷ்டம் அஸி -பின் புறமாக உள்ளாய் ,

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

    ஶ்னப்த்ரே- ஸ்த – இரண்டு கால்களாக உள்ளீர்கள் ,

     

    விஷ்ணோ –விஷ்ணுவின்,

     

    ஸ்யூ:அஸி -நாடிகளாக இருக்கிறாய்.

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

     

    த்ருவம் அஸி -முடிச்சுகளாக உள்ளீர்கள்.

     

    வைஷ்ணவமஸி -விஷ்ணுமயமாக இருக்கிறாய் ,

     

    விஷ்ணவே -விஷ்ணுவின் அருளைப் பெறுவதற்காக,

     

     

    த்வா -உன்னை (வணங்குகிறேன் ).

     

    யக்ய சாலையின் மேல் விட்டமே !

     

    நீ விஷ்ணுவின் நெற்றியாக விளங்குகிறாய் .

     

    பின் புறமாக இருக்கிறாய் .

    வாயிற் கால்களே !

     

     

    நீங்கள் அவரது இரு கால்களாக உள்ளீர்கள் .

     

    கயிறே !

     

    நீ , அவரது நாடிகளாக இருக்கிறாய் .

     

    முடிச்சுக்களே !

     

    நீங்கள் , அவரது முடிச்சுகளாக உள்ளீர்கள் .

     

    3.தத’ஸ்ய ப்ரியமபிபாதோ’ அஶ்யாம் | னரோ யத்ர’ தேவயவோ மத’ன்தி |உருக்ரமஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா | விஷ்ணோ” பதே ப’ரமே மத்வ உத்ஸஃ’ |

    3

    யத்ர -எங்கு , எங்கெல்லாம்,

     

    தேவயவ -தேவர்கள் ,

     

    மதந்தி -மகிழ்கிறார்களோ ,

     

    நர :-மனிதர்கள் ,

     

    ப்ரியமிபிபாத -செல்ல விரும்புகிறார்களோ ,

     

    உருக்ரமஸ்ய -விஷ்ணுவின் ,

     

    ஸ ஹி பந்துரிஸ்தா -மனத்திற்கு உகந்த இடமோ ,(இருப்பிடமோ ),

     

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

     

    பரமே பதே -உயர்ந்த ,அனைத்திற்கும் மேலான திருவடியில் ,

     

    மத்வ : அமுதத் தேனூற்று பெருகுகிறதோ ,

     

    ததஸ்ய -அங்கே,

     

    அச்யாம் -அடைவேனாக .

     

    4.ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய | ம்றுகோ ன பீமஃ கு’சரோ கி’ரிஷ்டாஃ |

     

    யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு | அதி’க்ஷயன்தி புவ’னானி விஶ்வா” |பரோ மாத்ர’யா தனுவா’ வ்றுதான | ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி |………………….4

    |

    எங்கு தேவர்கள் மகிழ்ந்து இருக்கிறார்களோ ,எங்கு மனிதர்கள் செல்ல விரும்புகிறார்களோ ,

     

    எது விஷ்ணுவாகிய உமக்கு உகந்த இருப்பிடமோ ,எங்கே அமுதத் தேனூற்று பெருகுகிறதோ ,

     

    அந்த விஷ்ணுவின் திருவடியை அடைவேனாக,

     

     

    கிரிஷ்டா -மலை மீது,

     

    குசர -திரிகின்ற ,

     

    பீமக : மிருக ;-பெரிய யானை ,

     

    யஸ்ய -யாருடைய ,

     

    உருஷு ,த்ரிஷு விக்ரமநேஷு -மூன்று பெரிய அடிகளுள் ,

     

    விஸ்வா -அனைத்து ,

     

    புவனானி -உலகங்களும் ,

     

    அதிஷியந்தி -அடங்குகின்றனவோ ,

     

    -விஷ்ணு – ப்ரதத் -அந்த விஷ்ணுவை ,

     

    வீர்யாய -சிறப்பிற்காக ,

     

    ஸ்தவதே -போற்றுவோம் .

     

    தனுவா -அத்திருமேனி ,

     

    மாத்ரயா பர ;வருதான ;- அளவில் அடங்காதது .

     

    தே -அதன் (உமது ),

     

    மஹித்வம் -சிறப்புகளை ,

     

    அனு அச்னுவந்தி -அறிய முடியாது .

     

    மலையில் உலவும் பெரிய யானை போல் சுதந்திரமானவரும்,கட்டுக்கு அடங்காதவரும் ,

     

    தனது மூன்று அடிகளுக்குள் அனைத்து உலகங்களையும் அடக்கிய்வருமான அந்த விஷ்ணுவை அவரது

     

    செயல் சிறத்திற்காக போற்றுவோம் .

     

    இறைவனே !

     

    உமது திருமேனி அளவிற்கு அடங்காதது .

     

    உமது சிறப்புக்கள் அறிய முடியாதவை .

     

    5.உபே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேவத்வம் | பரமஸ்ய’ வித்ஸே | விச’க்ரமே ப்றுதிவீமேஷ ஏதாம் | க்ஷேத்ரா’ய விஷ்ணுர்மனு’ஷே தஶஸ்யன் .

    தே -உமது ,

    ப்ருதிவ்யா –நறுமணம் நிறைந்த பூமி ,

     

    உபே -இரண்டை ,

     

    வித்ம-அறிவோம் (நாங்கள் )

     

    விஷ்ணோ தேவ -ஒளி திகழ் திருமாலே !

     

    த்வம் -நீர் மட்டுமே ,

     

    பரமஸ்ய -உயர்ந்த , மேலான உலகை,

     

    வித்சே –அறிவீர்,

     

    ஏஷ -இந்த ,

     

    ப்ருத்வீம் -புவியில் ,

     

    விஷ்ணு -விஷ்ணு ,

     

    விசக்ரமே -நடந்து ,

     

    ஏதாம் -அதனை ,

     

    க்ஷேத்ராய -இருப்பிடமாகக் கொள்வதற்கு ,

     

    மனுஷே –மனிதர்களுக்கு,

     

    ததஸ்யன் -கொடுத்துள்ளார் .

     

    விஷ்ணுவே !

     

     

    நறுமணம் நிறைந்ததான பூமி மற்றும் விண்ணுலகம் இரண்டையும் நாங்கள் அறிவோம் .

     

    ஒளி மிக்க திருமாலே !

     

    நீர் மட்டுமே மேலான் உலகை அறிவீர் .

     

    நீர் நடந்த இந்த பூமியை மனிதர்களுக்கு இருப்பிடமாகக் கொடுத்துள்ளீர் .

    6.

    த்ருவாஸோ’ அஸ்ய கீரயோ ஜனா’ஸஃ | ஊருக்ஷிதிக்‍ம்ஸுஜனி’மாசகார | த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ ஏதாம் | விச’க்ரமே ஶதர்ச’ஸம் மஹித்வா | ப்ரவிஷ்ணு’ரஸ்து தவஸஸ்தவீ’யான் | த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||……………………………………………………….6.

     

    கீரய ;ஜனாஸ -பணிவு மிக்க மக்கள் ,

     

    அஸ்ய -அவரில் ,

     

    த்ருவாஸ -பாதுகாப்பான உறைவிடைத்தை தேடுகிறார்கள் .

     

    ஏதாம் -இந்த ,

     

    ஊருஷிதம் -பூமியை ,

     

    சுஜனிமா -விரிந்து பரந்த வாழ்விடமாக ,

     

    சகார -செய்துள்ளார் .

     

    சதவர்ச்சசம் -அளவிலா எழில் பொருந்திய ,

     

    ஏஷு -இந்த ,

     

    ப்ருத்வீம் -பூமியை ,

     

    தேவ -தேவனான விஷ்ணு ,

     

    மகித்மா -தந்து பெருமையால் ,

     

    த்ரி -மும்முறை ,

     

    விசக்ரமே–அளந்துள்ளார் .

     

    தவ -உமது ,

     

    ஸ : ஸ்தவீயான் -சிறந்த ,மேலான பெருமை ,

     

    பிரவிஷ்ணு -விஷ்ணு ,

     

    அஸ்து -உள்ளது .

     

    து –மேலும்,

     

    ஏஷம் ஹி -இதுவே ,

     

    அஸ்ய ஸ்தவிரஸ்ய -இந்த மாபெரும் சிறப்பின் ,

     

    நாம -பெயர்.

     

    பணிவு மிகுந்த மக்கள் ,அவரில் பாதுகாப்பான உறைவிடத்தைத் தேடுகிறார்கள் .

     

    இப்பூமியை , அவர் , இந்த மக்களுக்காக விரிந்து பரந்ததாகச் செய்துள்ளார் .

     

    எழில் கொஞ்சும் இப்புவியை விஷ்ணு தனது கீர்த்தியினால் மும்முறை அளந்துள்ளார் .

     

    மஹா விஷ்ணுவே !

     

    உமது மேலான காக்கும் திறத்தால் நீர் விஷ்ணு எனப் பெயர் பெறுகிறீர் .

     

    இது உமது பெருமைக்குப் பொருத்தமாக உள்ளது .

     

    7.அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே | ப்றுதிவ்யாஃஸப்ததாம’பிஃ |

    இதம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே பதம் | ஸமூ’டமஸ்ய பாக்‍ம் ஸுரே ||

     

    ய ;-எந்த ,

     

    ப்ருதிவ்யா -பூமியின் ,

     

    சப்ததாமஅபி -ஏழு பகுதிகளிலும் ,

     

    விசக்ரமே -நடந்தாரோ ,

     

    அத -அந்த பூமியின் ,

     

    தேவா -தேவர்கள் ,

     

    ந -நம்மை ,

     

    அவந்து -காக்கட்டும் .

     

    விஷ்ணு -விஷ்ணு ,

     

    இதம் விசக்ரமே -நடந்தபோது ,

     

    பதம்-தமது திருவடிகளை ,

     

    திரேதா -மும்முறை ,

     

    நிதேத -வைத்தார் .

    7

    அஸ்ய -அவரது ,

     

    பாம்சுரே -பாத தூசியால் ,

    ஸமூட -மூடப்பட்டது .

     

    8.த்ரீணி’ பதா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ | ததோ தர்மா’ணி தாரயன்’ |

     

    விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்யத யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே | இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||

     

    விஷ்ணு -விஷ்ணு ,

     

    கோபா -அனைத்தையும் காப்பவரும் ,

     

    அதாப்ய -ஏமாற்றப்பட முடியாதவரும் ,

     

    த்ரீணி பதா -மூவடிகளால் ,

     

    விசக்ரமே -அளந்து ,

     

    அத -இங்கே ,

    தர்மாணி -தர்மங்களை ,

    தாரயன் -நிலை நிறுத்தினார் .

    இந்த்ரஸ்ய -இந்திரனனின் ,

    யுஜ்ய :சஹா -நெருங்கிய நண்பனான ,

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

    கர்மாணி -செயல்களை ,

    பச்யத -பாருங்கள்.

    யத : அவற்றின் மூலம் ,

    வ்ரதானி -வாழ்க்கை நெறிகளை ,

    பஸ்பசே -வெளிப்படுத்தினார் .

     

    விஷ்ணு அனைத்தையும் காப்பாற்றுவரும் ஒருவராலும் ஏமாற்றப்பட முடியாதவரும் ஆவார் .

    தனது மூன்று அடிகளால் இவுலகை அளந்து,,இங்கே தர்மத்தை நிலை நிறுத்தியுள்ளார் .

    இந்திரனின் நெருங்கிய நண்பனான விஷ்ணுவின் செயல்திறத்தைப் பாருங்கள் .

    அவற்றின் மூலம் வாழ்க்கை நியதிகளை வெளிப்படுத்தினார் .

     

    9.தத்விஷ்ணோ”ஃ பமம் தக்‍ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ | திவீக்ஷுராத’தம் | தத்விப்ரா’ஸோ வின்யவோ’ ஜாக்றுவாக்‍ம்ஸ்ஸமி’ன்ததே | விஷ்ணோர்யத்ப’மம் தம் 

     

    ஆததம் – பரந்து  விரிந்த ,

    திவி இவ -வானம் போல் ,

    சஷு -கண்களை உடையவர்கள் ,

    ஸூரய -ரிஷிகள் ,

    தத் விஷ்ணோ -அந்த விஷ்ணுவின் ,

    பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை ,

    ஸதா -எப்பொழுதும் ,

    பஸ்யந்தி -காண்கிறார்கள் .

    விப்ராஸ் -கவிதையை விரும்புபவர்களும் ,

    விபன்யவ -முனிவர்களும் ,

     

    ஜாக்ர்வாம்ஸ -விழிப்புற்றவர்களுமான ,

    யத் -இவர்களே ,

    விஷ்ணோ -விஷ்ணுவின் ,

    யத் பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை ,

    ஸமிந்ததே -ஒளிரச் செய்கிறார்கள் .

     

    விரிந்து பரந்த வானம் போல் கண்களை உடையவர்களான ரிஷிகள் ,விஷ்ணுவின் மேலான உறைவிடத்தை

    ,எப்போதும் காண்கிறார்கள் .கவிதையை விரும்புபவர்களும் ,முனிவர்களும்,விழிப்புற்றவர்களுமான

    இவர்களே விஷ்ணுவின் மேலான அந்த உறைவிடத்தை ஒளிரச் செய்கிறார்கள் .

     

    பர்யா”ப்த்யாஅன’ன்தராயா ஸர்வ’ஸ்தோமோ‌உதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||

     

    பர்யாப்த்யா -அளவற்ற ,

    அனந்த ஆயாத -எல்லையில்லா செல்வம் பெறுவதற்கும் ,

    ஸர்வத்தோம -மங்காப் புகழ் அடைவதற்கும் ,

    அதிராத்ரம் – அதிராத்ரம்,

    உத்தம -சிறந்த ,

    மஹ -உயர்ந்த யாகம் ,

    பவதி- ஆகிறது .

    தென் -அந்த யாகத்தால் ,

    ஸர்வஸ்ய ஆப்த்யை- அனைத்தும் கிடைக்கிறது .

    ஸர்வஸ்ய ஜித்யை -அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .

    சர்வம் ஏவ -அனைத்தும் ,

    ஆப்னோதி -அடையப்பெருகின்றன .

    ஸர்வம் -அனைத்தும் வளம் பெறுகின்றன .

     

    எல்லையில்லா வற்றாத செல்வம் பெறுவதற்கும் ,மங்காப் புகழ் பெறுவதற்கும் ,அதிராத்ரம் என்னும் யாகமே

    மேலான யாஹம் ஆகும் .

    அந்த யாகத்தால் அனைத்தும் கிடைக்கின்றன .

    அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .

    அனைத்தும் அடையப் படுகிறது .

    அனைத்தும் வளம் பெறுகின்றன .

    விஷ்ணு ஸூக்தம் நிறைவுற்றது.

    ஓம் தத் ஸத்

     

    ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் யஃ பார்தி’வானி விமே ராஜாக்ம்’ஸி யோ அஸ்க’பாதுத்த’ரக்‍ம் தஸ்தம்’ விசக்ரமாஸ்த்ரேதோரு’காயோ விஷ்ணோ’ராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||

    தத’ஸ்ய ப்ரிபிபாதோ’ அஶ்யாம் | னரோ யத்ர’ தேவோ மத’ன்தி |ருக்ரஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா | விஷ்ணோ” தே ப’மே மத்வ உத்ஸஃ’ | ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய | ம்றுகோ ன பீமஃ கு’ரோ கி’ரிஷ்டாஃ | யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு | அதி’க்ஷன்தி புவ’னானி விஶ்வா” |ரோ மாத்ர’யா னுவா’ வ்றுதான | ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி ||

    பே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேத்வம் | மஸ்ய’ வித்ஸே | விச’க்ரமே ப்றுதிவீமேஷ தாம் | க்ஷேத்ரா’ விஷ்ணுர்மனு’ஷே தஸ்யன் | த்ருவாஸோ’ அஸ்ய கீயோ ஜனா’ஸஃ | ருக்ஷிதிக்‍ம்ஸுஜனி’மாசகார | த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ தாம் | விச’க்ரமே தர்ச’ஸம் மஹித்வா | ப்ரவிஷ்ணு’ரஸ்து ஸ்தவீ’யான் | த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||

    அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே | ப்றுதிவ்யாஃப்ததாம’பிஃ | தம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே தம் | ஸமூ’டமஸ்ய பாக்‍ம் ஸுரே || த்ரீணி’ தா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ | ததோ தர்மா’ணி தாரயன்’ | விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்ய யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே | இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||

    தத்விஷ்ணோ”ஃ பமம் தக்‍ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ | திவீக்ஷுராத’தம் | தத்விப்ரா’ஸோ வின்யவோ’ ஜாக்றுவாக்‍ம்ஸ்ஸமி’ன்ததே | விஷ்ணோர்யத்ப’மம் தம் | பர்யா”ப்த்யாஅன’ன்தராயா ஸர்வ’ஸ்தோமோ‌உதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||

    ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

     

     

  • ஆறு படை வீடுகளின் கவசங்கள் .

    நமக்கு கந்த ஷஷ்டி கவசம் தெரியும்
    அது  திருச்செந்தூர் வேலவன் மேல் இயற்றப் பெற்றது  .
    படை வீடுகளின்     கவசங்கள் வருமாறு.

    முருகனின் ஆறு படை வீடுகள் .
    முருகனின் ஆறு படை வீடுகள் .

    முதலாவது கவசம் – பழநி கவசம்

    காப்பு

    அமரர்இடர்தீர அமரம் புரிந்த 
    குமரன் அடி நெஞ்சே குறி,

    துப்போருக்கு வல்வினை போம்துன்பம் போம் நெஞ்சில் 
    பதிப்போருக்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்

    நிஷ்டையுங் கூகூடும் நிமலர் அருள் கந்தர் 
    சஷ்டி கவசந்தனை

    திருவா வினன்குடி சிறக்கும் முருகா
    குருபரா குமரா குழந்தைவே லாயுதா
    சரவணை சண்முகா சதாசிவன் பாலா
    இரவலர் தயாபரா ஏழைபங் காளா
    பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா
    வரமெனக்(கு) அருள்வாய் வாமனன் மருகா
    இரண்டா யிரம்வெள்ளம் யோகம் படைத்தவா
    திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா
    இலட்சத் திருநான்கு நற்றம்பி மாருடன்
    பட்சத்துடனே பராசக்தி வேலதாய்

    வீர வாகு மிகுதள கர்த்தனாய்
    சூரசம் காரா துஷ்டநிஷ் டூரா
    கயிலாய மேவும் கனகசிம் மாசனா
    மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா
    அகத்திய மாமுனிக்(கு) அருந்தமிழ் உரைத்தவா
    சுகத்திரு முருகாற் றுப்படை சொல்லிய
    நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக்
    கைக்கீழ் வைக்கும் கனகமிசைக் குதவா
    திருவரு ணகிரி திருப்புகழ் பாட
    இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா

    ஆயிரத் தெட்டாம் அருள்சிவ தலத்தில்
    பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா
    எண்ணா யிரம்சமண் எதிர்கழு வேற்றி
    விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா
    குருவாம் பிரமனைக் கொடுஞ்சிறை வைத்து
    உருப்பொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன்
    சுருதிமெய் யோகம் சொல்லிய(து) ஒருமுகம்
    அருள்பெரு மயில்மீ(து) அமர்ந்தது ஒருமுகம்
    வள்ளிதெய் வானையை மருவிய(து) ஒருமுகம்
    தெள்ளுநான் முகன்போல் சிருட்டிப்பது ஒருமுகம்

    சூரனை வேலால் துணித்த(து) ஒருமுகம்
    ஆரணம் ஓதும் அருமறை யடியார்
    தானவர் வேண்டுவ தருவ(து) ஒருமுகம்
    ஞான முதல்வர்க்கு நற்பிள்ளை பழநி
    திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம
    பொருட்செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம
    ஏரகம் தனில்வாழ் இறைவா நமோ நம
    கூரகம் ஆவினன் குடியாய் நமோ நம
    சர்வசங் கரிக்குத் தனயா நமோ நம
    உறுசோலை மலைமேல் உகந்தாய் நமோ நம

    எல்லாக் கிரிக்கும் இறைவா நமோ நம
    சல்லாப மாகச் சண்முகத் துடனே
    எல்லாத் தலமும் இனிதெழுந் தருளி
    உல்லா சத்துறும் ஓங்கார வடிவே
    மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை
    சர்வ முக்கோணத் தந்தமுச் சத்தியை
    வேலா யுதமுடன் விளங்கிடும் குகனைச்
    சீலமார் வயலூர் சேந்தனைத் தேவனை
    கைலாச மேருவா காசத்தில் கண்டு
    பைலாம் பூமியும் பங்கய பார்வதி

    மேலும் பகலும் விண்ணுரு வேத்தி
    நாற்கோ ணத்தில் நளினமாய் அர்ச்சனை
    கங்கை யீசன் கருதிய நீர்புரை
    செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை
    அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன்
    முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி
    வாய்அறு கோணம் மகேசுவரன் மகேசுவரி
    ஐயும் கருநெல்லி வெண்சாரை தன்மேல்
    ஆகாச வட்டத்(து) அமர்ந்த சதாசிவன்
    பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை

    தந்திர அர்ச்சனை தலைமேல் கொண்டு
    மந்திர மூலத்தில் வாசியைக் கட்டி
    அக்கினிக் குதிரை ஆகாசத் தேவி
    மிக்கமாய் கருநெல்லி வெண்சாரை உண்பவர்
    பாகமாய் ரதமும் பகல்வழி யாரை
    சாகா வகையும் தன்னை அறிந்து
    ஐந்து ஜீவனுடன் ஐயஞ் சுகல்பமும்
    விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி
    சந்திர சூரியர் தம்முடன் அக்கினி
    அந்தி ரனைக்கண்(டு) அறிந்தே யிடமாய்ச்

    சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை
    மந்திர அர்ச்சனை வாசிவ என்று
    தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில்
    ஆறு முகமாய் அகத்துளே நின்று
    வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து
    யோசனை ஐங்கரன் உடன்விளை யாடி
    மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு
    வாலைக் குழந்தை வடிவையும் காட்டி
    நரைதிரை மாற்றி நாலையும் காட்டி
    உரைசிவ யோகம் உபதேசம் செப்பி

    மனத்தில் பிரியா வங்கண மாக
    நினைத்த படிஎன் நெஞ்சத் திருந்து
    அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி
    மதியருள் வேலும் மயிலுடன் வந்து
    நானே நீயெனும் லட்சணத் துடனே
    தேனே என்னுளம் சிவகிரி எனவே
    ஆறா தாரத்(து) ஆறு முகமும்
    மாறா திருக்கும் வடிவையும் காட்டிக்
    கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்க
    தனதென வந்து தயவுடன் இரங்கிச்

    சங்கொடு சக்கரம் சண்முக தெரிசனம்
    எங்கு நினைத்தாலும் என்முன் னேவந்து
    அஷ்டாவ தானம் அறிந்தவுடன் சொல்லத்
    தட்டாத வாக்கு சர்வா பரணமும்
    இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத்
    துலக்கிய காவியம் சொற்பிர பந்தம்
    எழுத்துச் சொற்பொருள் யாப்பல ங்காரம்
    வழுத்தும் என்நாவில் வந்தினி திருந்தே
    அமுத வாக்குடன் அடியார்க்கும் வாக்கும்
    சமுசார சாரமும் தானேநிசமென

    வச்சிர சரீரம் மந்திர வசீகரம்
    அட்சரம் யாவும் அடியேனுக் குதவி
    வல்லமை யோகம் வசீகர சக்தி
    நல்லஉன் பாதமும் நாடிய பொருளும்
    சகலகலை ஞானமும் தானெனக் கருளி
    செகதல வசீகரம் திருவருள் செய்து
    வந்த கலிபிணி வல்வினை மாற்றி
    இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக்
    கிட்டவே வந்து கிருபை பாலிக்க
    அட்டதுட் டமுடன் அநேக மூர்க்கமாய்

    துட்டதே வதையும் துட்டப் பிசாசும்
    வெட்டுண்ட பேயும் விரிசடைப் பூதமும்
    வேதாளம் கூளி விடும்பில்லி வஞ்சனை
    பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுநடுங்க
    பேதாளம் துர்க்கை பிடாரி நடுநடுங்க
    பதைபதைத் தஞ்சிடப் பாசத்தால் கட்டி
    உதைத்த மிதித்தங்(கு) உருட்டி நொறுக்கிச்
    சூலத்தாற் குத்தித் தூளுதூ ளுருவி
    வேலா யுதத்தால் வீசிப் பருகி
    மழுவிட் டேவி வடவாக் கினிபோல்

    தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச்
    சிதம்பர சக்கரம் தேவி சக்கரம்
    மதம்பெறும் காளி வல்ல சக்கரம்
    மதியணி சம்பு சதாசிவ சக்கரம்
    பதிகர்ம வீர பத்திரன் சக்கரம்
    திருவை குண்டம் திருமால் சக்கரம்
    அருள்பெருந் திகிரி அக்கினிச் சக்கரம்
    சண்முக சக்கரம் தண்டா யுதத்தால்
    விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும்

    ஏக ரூபமாய் என்முனே நின்று
    வாகனத் துடன்என் மனத்துள் இருந்து
    தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்
    இம்பமா கருடணம் மேவுமுச் சாடனம்
    வம்பதாம் பேதனம் வலிதரும் ஆரணம்
    உம்பர்கள் ஏத்தும் உயிர்வித் வேடணம்
    தந்திர மந்திரம் தருமணி அட்சரம்
    உந்தன் விபூதி உடனே சபித்து
    கந்தனின் தோத்திரம் கவசமாய்க் காக்க
    எந்தன் மனத்துள் எதுவேண் டினும்

    தந்துரட் சித்தருள் தயாபரா சரணம்
    சந்தம் எனக்கருள் சண்முகா சரணம்
    சரணம் சரணம் சட்கோண இறைவா
    சரணம் சரணம் சத்துரு சம்காரா!
    சரணம் சரணம் சரவண பவஓம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்!

     

     

    2. இரண்டாவது கவசம் – ஸ்வாமி மலை கவசம்
    3. மூன்றாவது கவசம் – திருச்செந்தூர் கவசம்
    4.நான்காவது கவசம் – திருப்பரங்குன்றம் கவசம்
    5. ஐந்தாவது கவசம்- திருத்தணி(கை) கவசம்
    6. பழமுதிர்சோலை – பழமுதிர்சோலை கவசம்.

    இரண்டாவது கவசம் – ஸ்வாமி மலை கவசம்

    ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்
    காமுற உதித்த கனமறைப் பொருளே
    ஓங்கார மாக உதயத் தெழுந்தே
    ஆங்கார மான அரக்கர் குலத்தை
    வேரறக் களைந்த வேலவா போற்றி

    தேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்
    வேலா யுதத்தால் வீசி அறுத்த
    பாலா போற்றி பழநியின் கோவே
    நான்கு மறைகள் நாடியே தேடும்
    மான்மரு கோனே வள்ளி மணாளனே

    நானெனும் ஆணவம் நண்ணிடா(து) என்னைக்
    காணநீ வந்து காப்பதும் கடனே
    காளி கூளி கங்காளி ஓங்காரி
    சூலி கபாலி துர்க்கை யேமாளி
    போற்றும் முதல்வா புனித குமாரா

    சித்தர்கள் போற்றும் தேசிகா போற்றி
    ஏகாட் சரமாய் எங்கும் தானாகி
    வாகாய் நின்ற மறைமுதற் பொருளே
    துதியட் சரத்தால் தொல்லுல(கு) எல்லாம்
    அதிசய மாக அமைத்தவா போற்றி

    திரியட் சரத்தால் சிவனயன் மாலும்
    விரிபா ருலகில் மேன்மையுற் றவனே
    சதுரட் சரத்தால் சாற்றுதல் யோகம்
    மதுர மாய் அளிக்கும் மயில்வா கனனே
    பஞ்சாட் சரத்தால் பரமன் உருவத்தால்

    தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென்
    நெஞ்சகத்(து) இருக்கும் நித்தனே சரணம்
    அஞ்சலி செய்த அமரரைக் காக்கும்
    ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி
    ஆறுசிரமும் அழகிய முகமும்

    ஆறிரு செவியும் அகன்ற மார்பும்
    ஆறிரு கண்ணும் அற்புத வடிவும்
    சரவணை வந்த சடாட்சரப் பொருளே
    அரனயன் வாழ்த்தும் அப்பனே கந்தா
    கரங்கள்பன் னிரண்டில் கதிரும் ஆயுதத்தால்

    தரங்குலைந்(து) ஓடத் தாரகா சுரன்முதல்
    வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தோய்
    சீர்திருச் செந்தூர்த் தேவசே னாதிபதி
    அஷ்ட குலாசலம் யாவையும் ஆகி
    இஷ்டசித்திகள் அருள் ஈசன், புதல்வா

    துஷ்டசங் காரா சுப்பிர மணியா
    மட்டிலா வடிவே வையாபுரித் துரையே
    எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன்
    கண்கொள்ளாக் காட்சி காட்டிய சடாட்சர
    சைவம் வைணவம் சமரச மாகத்

    தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
    சரியை கிரியை சார்ந்தநல் யோகம்
    இரவலர்க்(கு) அருளும் ஈசா போற்றி
    ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக்
    கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித்

    தரிசனம் கண்ட சாதுவோ(டு) உடன்யான்
    அர்ச்சனை செய்ய அனுக்ரகம் அருள்வாய்
    பில்லிவல் வினையும் பீனிச மேகம்
    வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க
    அல்லலைப் போக்கிநின் அன்பரோ(டு) என்னைச்

    சல்லாப மாகக் சகலரும் போற்ற
    கண்டு களிப்புறக் கருணை அருள்வாய்
    அண்டர் நாயகனே அருமறைப் பொருளே
    குட்டிச் சாத்தான் குணமிலா மாடன்
    தட்டிலா இருளன் சண்டிவே தாளம்

    சண்டமா முனியும் தக்கராக் கதரும்
    மண்டை வலியொடு வாதமும் குன்மமும்
    சூலைகா மாலை சொக்கலும் சயமும்
    மூலரோ கங்கள் முடக்குள் வலிப்பு
    திட்டு முறைகள் தெய்வச் சாபம்

    குட்டல் சோம்பல் கொடிய வாந்தியம்
    கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா
    வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும்
    உன்னுடைய நாமம் ஓதியே நீறிடக்
    கன்னலொன் றதனில் களைந்திடக் கருணை

    செய்வதுன் கடனே செந்தில் நாயகனே
    தெய்வநா யகனே தீரவே சரணம்!
    சரணம் சரணம் சரவண பவஓம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்!!!

    ***

    மூன்றாவது கவசம் – திருச்செந்தூர் கவசம்.

    சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
    சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
    பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
    கீதம் பாடக் கிண்கிணி யாட

    மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
    கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
    வரவர வேலா யுதனார் வருக
    வருக வருக மயிலோன் வருக

    இந்திரன் முதலா எண்டிசை போற்ற
    மந்திர வடிவேல் வருக வருக!
    வாசவன் மருகா வருக வருக
    நேசக் குறமகள் நினைவோன் வருக

    ஆறுமுகம் படைத்த ஐயா வருக
    நீறிடும் வேலவன் நித்தம் வருக
    சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
    சரவண பவனார் சடுதியில் வருக

    ரவண பவச ர ர ர ர ர ர ர
    ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
    விநபவ சரவண வீரா நமோநம
    நிபவ சரவண நிறநிற நிறென

    வசுர வணப வருக வருக
    அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
    என்னை ஆளும் இளையோன் கையில்
    பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

    பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
    விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
    ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
    உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

    கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
    நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
    சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
    குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

    ஆறு முகமும் அணிமுடி ஆறும்
    நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
    பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
    நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

    ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
    ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
    பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
    நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

    முப்புரி நூலும் முத்தணி மார்பும்
    செப்பழ குடைய திருவயி றுந்தியும்
    துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
    நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

    இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
    திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
    செககண செககண செககண செகண
    மொகமொக மொகமொக மொகமொக மொகென

    நகநக நகநக நகநக நகென
    டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
    ரரரர ரரரர ரரரர ரரர
    ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

    டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
    டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
    விந்து விந்து மயிலோன் விந்து
    முந்து முந்து முருகவேள் முந்து

    என்றனை யாளும் ஏரகச் செல்வ
    மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
    லாலா லாலா லாலா வேசமும்
    லீலா லீலா லீலா வினோ தனென்று

    உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
    எந்தலை வைத்துன் இணையடி காக்க
    என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
    பன்னிரு விழியால் பாலனைக் காக்க

    அடியேன் வதனம் அழகுவேல் காக்க
    பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
    கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
    விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

    நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
    பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
    முப்பத் திருபல் முனைவேல் காக்க
    செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

    கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
    என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
    மார்பை ரத்ன வடிவேல் காக்க
    சேரிள முலைமார் திருவேல் காக்க

    வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
    பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
    அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
    பழுபதி னாறும் பருவேல் காக்க

    வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
    சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
    நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
    ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க

    பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
    பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க
    கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
    வட்டக் குதத்தை வல்வேல் காக்க

    ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
    கைகளி ரண்டும் கருணைவேல் காக்க
    முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
    பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க

    நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
    நாபிக் கமலம் நல்வேல் காக்க
    முப்பால் நாடியை முனைவேல் காக்க
    எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க

    அடியேன் வதனம் அசைவுள நேரம்
    கடுகவே வந்து கனகவேல் காக்க
    வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
    அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

    ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
    தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
    காக்க காக்க கனகவேல் காக்க
    நோக்க நோக்க நொடியில் நோக்க

    தாக்க தாக்க தடையறக் தாக்க
    பார்க்க பார்க்க பாவம் பொடிபட
    பில்லி சூனியம் பெரும்பகை அகல
    வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

    அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
    பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
    கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
    பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

    அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
    இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
    எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
    கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்

    விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
    தண்டியக் காரரும் சண்டாளர் களும்
    என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
    ஆனை யடியினில் அரும்பா வைகளும்

    பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
    நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
    பாவைக ளுடனே பலகல சத்துடன்
    மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

    ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
    காசும் பணமும் காவுடன் சோறும்
    ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
    அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

    மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
    காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
    அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
    வாய்விட் டலறி மதிகெட் டோட

    படியினில் முட்ட பாசக் கயிற்றால்
    கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
    கட்டி உருட்டு கைகால் முறிய
    கட்டு கட்டு கதறிடக் கட்டு

    முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
    செக்கு செக்கு செதில் செதிலாக
    சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
    குத்து குத்து கூர்வடி வேலால்

    பற்று பற்று பகலவன் தணலெரி
    தணலெரி தணலெரி தணலது வாக
    விடு விடு வேலை வெகுண்டது வோடப்
    புலியும் நரியும் புன்னரி நாயும்

    எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
    தேளும் பாம்பும் செய்யான் பூரான்
    கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
    ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

    ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
    வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
    குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
    குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி

    பக்கப் பிளவை படர்தொடை வாழை
    கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
    பற்குத் தரணை பருஅரை யாப்பும்
    எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

    நில்லா தோட நீஎனக் கருள்வாய்
    ஈரேழு உலகமும் எனக் குறவாக
    ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
    மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

    உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
    சரவண பவனே சைலொளி பவனே
    திரிபுர பவனே திகழொளி பவனே
    பரிபுர பவனே பவமொளி பவனே

    அரிதிரு மருகா அமரா வதியைக்
    காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
    கந்தா குகனே கதிர்வே லவனே
    கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

    இடும்பனை யழித்த இனியவேல் முருகா
    தனிகா சலனே சங்கரன் புதல்வா
    கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
    பழநிப் பதிவாழ் பாலகு மாரா

    ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
    செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
    சமரா புரிவாழ் சண்முகத் தரசே
    காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

    என்நா இருக்க யானுனைப் பாட
    எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
    பாடினேன் ஆடினேன் பரவச மாக
    ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை

    நேச முடன்யான் நெற்றியில் அணிய
    பாச வினைகள் பற்றது நீங்கி
    உன்பதம் பெறவே உன்னரு ளாக
    அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்

    மெத்தமெத் தாக வேலா யுதனார்
    சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
    வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
    வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

    வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
    வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
    வாழ்க வாழ்க வாரணத் துவசம்
    வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க

    எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
    எத்தனை அடியேன் எத்தனை செயினும்
    பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
    பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே

    பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
    மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
    தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
    கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

    பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
    காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
    ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
    நேசமுடன் ஒரு நினைவது வாகிக்

    கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
    சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
    ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
    ஓதியே செபித்து உகந்துநீ றணிய
     
    அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
    திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
    மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்
    நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

    நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
    எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
    கந்தர்கை வேலாம் கவசத் தடியை
    வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்

    விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
    பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
    நல்லோர் நினைவில் நடனம் புரியும்
    சர்வ சத்ரு சங்கா ரத்தடி

    அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
    வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
    சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
    இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

    குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
    சின்னக் குழந்தை சேவடி போற்றி!
    எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
    மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

    தேவர்கள் சேனா பதியே போற்றி!
    குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
    திறமிகு திவ்விய தேகா போற்றி!
    இடும்பா யுதனே இடும்பா போற்றி!

    கடம்பா போற்றி கந்தா போற்றி!
    வெட்சி புனையும் வேளே போற்றி!
    உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
    மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

    சரணம் சரணம் சரவண பவஓம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்!

    நான்காவது கவசம் – திருப்பரங்குன்றம் கவசம்

    திருப்ரங்குன்றுறை தீரனே குகனே
    மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
    குறுக்குத் துறையுறை குமரனே அரனே
    இருக்கும் குருபரா ஏரகப் பொருளே
    வையாபுரியில் மகிழ்ந்துவாழ் பவனே

    ஓய்யார மயில்மேல் உகந்தாய் நமோ நமோ
    ஐயா குமரா அருளே நமோ நமோ 
    மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ
    ப‌ழநியங் கிரிவாழ் பகவா நமோ நமோ 
    மழுவுடைய முதல்வன் முதலாய் நமோ நமோ

    விராலிமலை யுறை விமலா நமோ நமோ
    மராமரம் துளைத் தோன் மருகா நமோ நமோ
    சூரகம் காரா துரையே நமோ நமோ 
    வீரவேலேந்தும் வேலனே நமோ நமோ 
    பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ

    கண்கள் ராறுடைக் கந்தா நமோ நமோ
    கோழிக் கொடியுடைக்கோவே நமோ நமோ
    ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ 
    சச்ச‍ ச்ச‍ச ஓம்ரீம் 
    ரரர‍ ரர‍ர ரீம் ரீம்

    வவவ‍ வவ‍வ ஆம் ஹோம்
    ணணண‍ ணண‍ண வாம் ஹோம்
    பபப‍ பப‍ப சாம் சூம் 
    வவவ‍ வவவ‍ களம் ஓம் 
    வவ லீலீ லுலு நாட்டிய அட்சரம்

    கக கக‍ கக‍ கந்தனே வருக‌
    இக இக இக ஈசனே வருக‌
    தக தக தக சற்குரு வருக 
    பசு பசு பசு பரந்தாமா வருக‌

    வருக வருகவென்வள்ள‍லே வருக‌
    தாயென நின்னிரு தாள் பணிந்தேன் எனைச் 
    சேயெனக் காத்த‍ருள் திவ்யமா முகனே
    அல்லும் பகலும் அனுதினம் என்னை

    எல்லினும் இருட்டிலும் எரிபகல் படுக்கை 
    வல்ல‍ விடங்கள் வராமல் தடுத்து
    நல்ல‍ மனத்துடன் ஞான குரு உனை 
    வ‌ணங்கித் துதிக்க‍ மகிழ்ந்துநீ வரங்கள் 
    இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்

    கந்தா கடம்பா கார்த்தி கேயா
    நந்தன் மருகா நாரணி சேயே 
    எண்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை
    தண்ண‍ளி அளிக்கும் சாமி நாதா
    சிவகிரி கையிலை திருப்ப‍தி வேளூர்

    த‌வக்கதிர் காமம் சார்திரு வேரகம் 
    கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர் 
    விண்ண‍வர் ஏத்தும் விராலி மலைமுதல்
    தன்னிகரில்லாத தலங்களைக் கொண்டு 
    சன்ன‍தியாய் வளர் சரவண பவனே

    அகத்திய முனிவனுக்கு அன்புடன் தமிழைச் 
    செகத்தோர் அறியச் செப்பிய கோவே
    சித்துக்கள் ஆடும் சிதம்பர சக்க‍ரம் 
    நர்த்த‍னம் புரியும் நாற்பத்தெண் கோணம் 
    வித்தாம் நின்ற மெய்ப்பொருளோனே

    உத்த‍ம குணத்தாய் உம்பவர்கள் ஏறே 
    வெற்றிக் கொடியுடைய வேளே போற்றி 
    பத்திசெய் தேவர் பயனே போற்றி 
    சித்த‍ம் மகிழ்ந்திடச் செய்தவர்போற்றி 
    அத்த‍ன் அரியன் அம்பிகை லட்சுமி

    வாணியுடனே வரையுமாக் கலைகளும் 
    தானே நானென்று சண்முக மாகத் 
    தாரணியுள்ளோர் சகலரும் போற்ற‍ப் 
    பூரண கிருபை புரியவா போற்றி 
    ஓதமார் கடல் சூழ் ஒளிபுவி கிரிகளில்

    எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய் 
    பண்ணும் நிட்டைகள் பலபலவெல்லாம் 
    கள்ள‍ம் அபச்சாரம் கர்த்த‍னே எல்லாம் 
    எள்ளினுள் எண்ணெய்போல் எழிலுடை உன்னை
    அல்லும் பகலும் ஆசாரத்துடன்

    சல்லாப மாய் உனைத் தாணுறச் செய்தால்
    எல்லா வல்ல‍மை இமைப்பினில் அருளி
    பல்லா யிரநூல் பகர்ந்தருள் வாயே 
    செந்தில் நகர்உறை தெய்வானை வள்ளி 
    சந்தகம் மகிழும் தயாபர குகனே!

    ச‌ரணம் சரணம் சரவண பவ ஓம்
    அரன் மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம் 
    ச‌ரணம் சரணம் சரவண பவ ஓம் 
    ச‌ரணம் சரணம் சண்முகா சரணம்!

    *-*-*-*-*-*

    ஐந்தாவது கவசம்- திருத்தணி(கை) கவசம்.

    கணபதி துணைவா கங்காதரன் புதல்வா
    குணவதி உமையாள் குமரா குருபரா
    வள்ளிதெய் வானை மருவிய நாயகா
    துள்ளிமயி லேறும் சுப்பிர மணியா

    அழகொளிப் பிரபை அருள்வடி வேலா
    பழநி நகரில் பதியநு கூலா
    திருவா வினன்குடி சிறக்கும் முருகா
    அருள்சேர் சிவகிரி ஆறு முகவா

    சண்முக நதியும் சராபன்றி மலையும்
    பன்முகம் நிறைந்த பழநிக்கு இறைவா
    ஆறாறு நூற்று அட்டமங் களமும்
    வீரவை யாபுரி விளங்கும் தயாபரா

    ஈராறு பழநி எங்கும் தழைக்கப்
    பாராறு சண்முகம் பகரும் முதல்வா
    ஆறு சிரமும் ஆறுமுகமும்
    ஆறிரு புயமும் ஆறிரு காதும்

    வடிவம் சிறந்த மகரகுண் டலமும்
    தடித்த பிரபைபோல் சார்ந்த சிந்தூரமும்
    திருவெண் ணீறணி திருநுதல் அழகும்
    கருணை பொழியும் கண்ணான்கு மூன்றும்

    குனித்த புருவமும் கூரிய மூக்கும்
    கனித்த மதுரித்த கனிவாய் இதழும்
    வெண்ணிலாப் பிரபைபோல் விளங்கிய நகையும்
    எண்ணிலா அழகாய் இலங்குபல் வரிசையும்

    காரிகை உமையாள் களித்தே இனிதெனச்
    சீர்தரும் வள்ளி தெய்வநா யகியாள்
    பார்த்தழ கென்னப் பரிந்த கபாலமும்
    வார்த்த கனகம்போல் வடிவேல் ஒளியும்

    முறுக்குமேல் மீசையும் மூர்க்கம் சிறக்க
    மறுக்கும் சூரர்மேல் வாதுகள் ஆட
    ஈச்வரன் பார்வதி எடுத்துமுத் தாடி
    ஈச்வரன் வடிவை மிகக்கண் டனுதினம்

    கையால் எடுத்துக் கனமார்(பு) அணைத்தே
    ஐயா! குமரா! அப்பனே! என்று
    மார்பினும் தோளினும் மடியினும் வைத்துக்
    கார்த்திகே யாஎனக் கருணையால் கொஞ்சி

    முன்னே கொட்டி முருகா! வருகவென்(று)
    அந்நேரம் வட்டமிட் டாடி விளையாடித்
    தேவியும் சிவனும் திருக்கண் களிகூரக்
    கூவிய மயிலேறும் குருபரா வருக

    தாவிய தகரேறும் சண்முகா வருக
    ஏவியவே லேந்தும் இறைவா வருக
    கூவிய சேவற் கொடியோய் வருக
    பாவலர்க் கருள்சிவ பாலனே வருக

    அன்பர்க் கருள்புரி ஆறுமுகா வருக
    பொன்போல் சரவணப் புண்ணியா வருக
    அழகிற் சிவனொளி அய்யனே வருக
    களபம் அணியுமென் கந்தனே வருக

    மருமலர்க் கடம்பணி மார்பா வருக
    மருவுவோர் மலரணி மணியே வருக
    திரிபுர பவனெனும் தேவே வருக
    பரிபுர பவனெனும் பவனே வருக

    சிவகிரி வாழ்தெய்வ சிகாமணி வருக
    காலில் தண்டை கலீர் கலீரென
    சேலிற் சதங்கை சிலம்பு கலீரென
    இடும்பனை மிதித்ததோர் இலங்கிய பாதமும்

    அடும்பல வினைகளை அகற்றிய பாதமும்
    சிவகிரி மீதினில் திருநிறை கொலுவும்
    நவகிரி அரைமேல் இரத்தினப் பிரபையும்
    தங்கரை ஞாணும் சாதிரை மாமணி

    பொங்குமாந் தளிர்சேர் பொற்பீதாம் பரமும்
    சந்திர காந்தச் சரிகைத் தொங்கலும்
    மந்திர வாளும் வங்கிச் சரிகையும்
    அருணோ தயம்போல் அவிர்வன் கச்சையும்

    ஒருகோடி சூரியன் உதித்த பிரபைபோல்
    கருணையால் அன்பரைக் காத்திடும் அழகும்
    இருகோடி சந்திரன் எழிலொட்டி யாணமும்
    ஆயிரம் பணாமணி அணியுமா பரணமும்

    வாயிலநன் மொழியாய் வழங்கிய சொல்லும்
    நாபிக் கமலமும் நவரோக பந்தியும்
    மார்பில் சவ்வாது வாடை குபீரென
    புனுகு பரிமளம் பொருந்திய புயமும்

    ஒழுகிய சந்தனம் உயர் கஸ்தூரியும்
    வலம்புரி சங்கொலி மணியணி மிடறும்
    நலம்சேர் உருத்திர அக்க மாலையும்
    மாணிக்கம் முத்து மரகதம் நீலம்

    அணிவை டூரியம் அணிவைரம் பச்சை
    பவளகோ மேதகம் பதித்தவச் ராங்கியும்
    நவமணிப் பிரபைபோல் நாற்கோடி சூரியன்
    அருணோ தயமெனச் சிவந்த மேனியும்

    கருணை பொழியும் கடாட்சவீட் சணமும்
    கவசம் தரித்தருள் காரண வடிவும்
    நவவீரர் தம்முடன் நற்காட்சி யான
    ஒருகை வேலாயுதம் ஒருகை சூலாயுதம்

    ஒருகை நிறைசங்கு ஒருகை சக்ராயுதம்
    ஒருகை நிறைவில்லு ஒருகை நிறையம்பு
    ஒருகை மந்திரவாள் ஒருகை மாமழு
    ஒருகை மேற்குடை ஒருகை தண்டாயுதம்

    ஒருகை சந்திராயுதம் ஒருகை வல்லாயுதம்
    அங்கையில் பிடித்த ஆயுதம் அளவிலாப்
    பங்கயக் கமலப் பன்னிரு தோளும்
    முருக்கம் சிறக்கும் முருகா சரவணை

    இருக்கும் குருபரா ஏழைபங் காளா
    வானவர் முனிவர் மகிழ்ந்து கொண் டாடத்
    தானவர் அடியவர் சகலரும் பணியப்
    பத்திர காளி பரிவது செய்யச்

    சக்திகள் எல்லாம் தாண்டவ மாட
    அஷ்ட பயிரவர் ஆனந்த மாட
    துஷ்டமிகுஞ் சூளிகள் சூழ்திசை காக்க
    சப்த ரிஷிகள் சாந்தக மென்னச்

    சித்தர்கள் நின்று சிவசிவா என்னத்
    தும்புரு நாரதர் சூரிய சந்திரர்
    கும்பமா முனியும் குளிர்ந்ததா ரகையும்
    அயன்மால் உருத்திரன் அஷ்ட கணங்கள்

    நயமுடன் நின்று நாவால் துதிக்க
    அஷ்ட லக்ஷ்மி அம்பிகை பார்வதி
    கட்டழகன் என்று கண்டுனை வாழ்த்த
    இடும்பா யுதன்நின் இணையடி பணிய

    ஆடும் தேவகன்னி ஆலத்தி எடுக்க
    தேவ கணங்கள் ஜெயஜெய என்ன
    ஏவற் கணங்கள் இந்திரர் போற்ற
    கந்தருவர் பாடிக் கவரிகள் வீசிச்

    சார்ந்தனம் என்னச் சார்வரும் அநேக
    பூதம் அடிபணிந் தேத்தவே தாளம்
    பாதத்தில் வீழ்ந்து பணிந்துகொண் டாட
    அரகர என்றடியார் ஆலவட்டம் பிடிக்க

    குருபரன் என்றன்பர் கொண்டாடி நிற்க
    குடையும் சேவலின் கொடியும் சூழ
    இடை விடாமல்உன் ஏவலர் போற்றச்
    சிவனடி யார்கள் திருப்பாத மேத்த

    நவமெனும் நால்வரை ஏற்ற சரமண்டலம்
    உருத்திர வீணை நாதசுர மேளம்
    தித்திமி என்று தேவர்கள் ஆடச்
    சங்கீத மேளம் தாளம் துலங்க

    மங்கள மாக வைபவம் இலங்க
    தேவ முரசடிக்கத் தினமேள வாத்தியம்
    சேவல் கொடியும் சிறப்புடன் இலங்க
    நந்திகே சுவரன்மீது ஏறிய நயமும்

    வந்தனம் செய்ய வானவர் முனிவர்
    எங்கள் பார்வதியும் ஈசனும் முன்வர
    ஐங்கரன் முன்வர ஆறுமா முகவன்
    வீரமயி லேறி வெற்றிவேல் எடுத்துச்

    சூரன்மேல் ஏவத் துடித்தவன் மடியச்
    சிங்கமுகா சுரன் சிரமது உருளத்
    துங்கக் கயமுகன் சூரனும் மாள
    அடலற்ற சூலத்தை அறுத்துச் சயித்து

    விடவே லாயுதம் வீசிக்கொக் கரித்துத்
    தம்ப மெனும் சயத் தம்பம் நாட்டி
    அன்பர்கள் தம்மை அனுதினம் காத்துத்
    திருப்பரங் குன்றம் சீர்ப்பதி செந்தூர்

    திருவாவி னன்குடி திருவே ரகமும்
    துய்ய பழநி சுப்பிர மணியன்
    மெய்யாய் விளங்கும் விராலி மலைமுதல்
    அண்ணா மலையும் அருள்மேவும் கயிலை

    கண்ணிய மாவூற்று கழுகுமா மலையும்
    முன்னிமை யோர்கள் முனிவர் மனத்திலும்
    நன்னய மாய்ப்பணி நண்பர் மனத்திலும்
    கதிர்காமம் செங்கோடு கதிர்வேங் கடமும்

    பதினா லுலகத்திலும் பக்தர் மனத்திலும்
    எங்கும் தானவ னாயிருந்(து) அடியார்தம்
    பங்கி லிருந்து பாங்குடன் வாழ்க
    கேட்ட வரமும் கிருபைப் படியே

    தேட்ட முடன் அருள் சிவகிரி முருகா
    நாட்டு சிவயோகம் நாடிய பொருளும்
    தாட்டிக மாய்எனக்(கு) அருள்சண் முகனே
    சரணம் சரணம் சரவண பவஓம்

    சரணம் சரணம் சண்முகா சரணம்!

    ஆறாவது கவசம் பழமுதிர்ச்சோலைக் கவசம்.

    சங்கரன் மகனே சரவண பவனே
    ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
    செங்கன்மால் மருமகனே தெய்வானை கேள்வனே
    பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே
    பழநிமா மலையுறும் பன்னிரு கரத்தனே

    அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்
    சரவண பவனே சட்கோணத் துள்ளுரை
    அரனருள்சு தனே அய்யனே சரணம்
    சயிலொளி பவனே சடாட்சரத் தோனே
    மயில்வா கனனே வள்ளலே சரணம்

    திரிபுர பவனே தேவசே னாபதி
    குறமகள் மகிழும் குமரனே சரணம்
    திகழொளி பவனே சேவற் கொடியாய்
    நகமா யுதமுடை நாதனே சரணம்
    பரிபுர பவனே பன்னிரு கையனே

    தருணமிவ் வேளை தற்காத் தருளே
    சவ்வும் ரவ்வுமாய் தானே யாகி
    வவ்வும் ணவ்வுமாய் விளங்கிய குகனே
    பவ்வும் வவ்வுமாய் பழமுதிர் சோலையில்
    தவ்வியே ஆடும் சரவண பவனே

    குஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய்
    தஞ்சமென் றுன்னைச் சரணம் அடைந்தேன்
    கொஞ்சிய உமையுடன் குழவியாய்ச் சென்றங்(கு)
    அஞ்சலி செய்வதன் அமுதமும் உண்டு
    கார்த்திகை மாதர் கனமார்(பு) அமுதமும்

    பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனே
    நவமைந்தர் சிவனால் நலமுடன் உதிக்கத்
    தவமுடை வீர வாகுவோ(டு) ஒன்பான்
    தம்பி மா ராகக் கொண்ட
    சம்பிர தாயா சண்முகா வேலா

    நவவீரர் தம்முடன் நவகோடி வீரரும்
    கவனமாய் உருத்திரன் அளித்தே களித்துப்
    பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய்
    ஓதிடச் செய்ய உடன் அவ் வேதனை
    ஓமெனும் பிரணவத் துண்மைநீ கேட்கத்

    தாமே யோசித்த சதுர்முகன் தன்னை
    அமரர்கள் எல்லாம் அதிசயப் படவே
    மமதைசேர் அயனை வன்சிறை யிட்டாய்
    விமலனும் கேட்டு வேகம தாக
    உமையுடன் வந்தினி துவந்து புரிந்து

    அயனைச் சிறைவிடென்(று) அன்பாய் உரைக்க
    நயமுடன் விடுத்த ஞானபண் டிதனே
    திருமால் அயன்சிவன் சேர்ந்து மூவரும்
    கௌரி லக்ஷ்மி கலைமக ளுடனே
    அறுவரோர் அம்சமாய் அரக்கரை வெல்ல

    ஆறு முகத்துடன் அவதரித்தோனே
    சிங்க முகாசுரன் சேர்ந்த கயமுகன்
    பங்கமே செய்யும் பானு கோபனும்
    சூரனோ டொத்த துட்டர்க ளோடு
    கோரமே செய்யும் கொடியராக் கதரை

    வேருடன் கெல்லி விண்ணவர் துன்பம்
    ஆறிடச் செய்த வமரர்கள் தமக்குச்
    சேனா பதியாய் தெய்வீகப் பட்டமும்
    தானாய்ப் பெற்ற தாட்டிகப் பெருமானே
    திருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய்ச்

    சிறப்புறு பழநி திருவே ரகமுதல்
    எண்ணிலாத தலங்களில் இருந்தாடும் குகனே
    விண்ணவர் ஏத்தும் விநோத பாதனே
    அன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவனே
    தஞ்சமென்(று) ஓதினர் சமயம் அறிந்தங்(கு)

    இன்பம் கொடுக்கும் ஏழைபங் காளா
    கும்பமா முனிக்குக் குருதே சிகனே
    தேன்பொழில் பழநித் தேவ குமாரா
    காண்பார்த்(து) எனையாள் கார்த்திகே யாஎன்
    கஷ்டநிஷ் டூரம் கவலைகள் மாற்றி

    அஷ்டலக்ஷ்மி வாழ் அருளெனக்(கு) உதவி
    இட்டமாய் என்முன் னிருந்து விளையாடத்
    திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே
    அருணகிரி தனக்(கு) அருளியதமிழ்போல்
    கருணையால் எனக்கு கடாட்சித் தருள்வாய்

    தேவராயன் செப்பிய கவசம்
    பூவல யத்தோர் புகழ்ந்து கொண்டாட
    சஷ்டிக் கவசம் தான்செபிப் போரைச்
    சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி வேலா
    வந்தென் நாவில் மகிழ்வுடன் இருந்து

    சந்தத் தமிழ்த்திறம் தந்தருள் வோனே
    சரணம் சரணம் சரவண பவஓம்
    சரணம் சரணம் தமிழ்தரும் அரனே
    சரணம் சரணம் சங்கரன் சுதனே

    சரணம் சரணம் சண்முகா சரணம்!

    நன்றி  : விதை விருட்சம்