18.
ஏதத்வாயு சம்சர்க்ககோபாதி–பேதேன ரேசக:பாசக :
சோஷகோ தாக :
ப்லாகவ இதி பிராண –முக்யத்வேன பஞ்சதசா ஜடராக்னிற் பவதி .18
க்ஷாரக உததராக :க்ஷோபகோ ஜ்ரும்பகோ மோஹக இதி நாக
ப்ராதான்யேன பஞ்சவிதாஸ்தே மனுஷ்யாணாம் தேஹகா பக்ஷ்ய

போஜ்ய சோஜ்ய சோஷ்ய லேஹ்ய பேயாத்மக பஞ்சவித
மன்னம் பாசயந்தி .
ஏதாதசவக்னிகலா:சர்வக்ஞாயாத்யா அந்தர் தசார தேவதா
18 to 20.
மேற்கூறிய பத்து அக்னிகள் பத்து தொழில்களையாற்றுகின்றன .
அவையாவன .
ஜாடராக்னி ,பிராணன் முதலிய ஐந்து வாயுக்களுடன் சேர்ந்து உபாதி
பேதத்தினால் ,ரேசகம்,பாசகம் (உணவைப் பரிபக்குவம் செய்தல் ,
சோஷகம் -உணவை உலர்த்துதல் (during digestion),
தாஹகம்- உணவை எரித்தல்,
ப்லாவகம் –நிறைத்தல் .(5 )
க்ஷாரகம்,உத்தாரகம்,க்ஷோபகம் ,ஜ்ரும்பகம் ,மோஹகம் எனப்பட்ட ஐந்து
உப வாயுக்களுடன் , ஜாடாக்னி செய்கிறது..
இவை மனிதரின் உடலெங்கும் பரவி , பஷ்ய,போஜ்ய ,சோஷ்ய லேஹ்ய
,பேய( ஐந்து விதமான உணவுகள் நாம் சாப்பிடும் முறையை வைத்து )
எனப்பட்ட ஐந்து வகையான உணவுகளை ஜீரணம் செய்கிறது .
இப்பத்து அக்நிகலைகளும் , சர்வக்க்யா முதலிய பத்துக் கோணங்கள் .
21.
சீதோஷ்ண –சுகது : க்கேச்சா :சத்வம் ரஜஸ்தமோ
வசின்யாதி –சக்தயோஷ்டௌ.
குளிர் ,வெப்பம் ,இன்பம் ,துன்பம் ,ஆசை,சத்வம் ,ரஜஸ் ,தமஸ் ஆகியன வசினி முதலான எட்டு சக்திகள் .
22.
சப்தாதி தன்மாத்ரா பஞ்ச புஷ்ப பாணா:
23.மன இக்ஷு தனு:
24. ராக : பாச :
25.
த்வேஷான்குச:
ஸ்பர்சம் ,ரூபம், கந்தம் ,ரசம் , சப்தம் ஆகிய ஐந்து தன்மாத்திரைகள்
தேவியின் கையில் உள்ள புஷ்ப பானங்கள்;
மனமே கரும்பு வில் ;
ஆசையே பாசமாகிய கயிறு ,
த்வேஷமே அங்குசம் ,
26.
அவ்யக்த :மகத் அஹங்காரா :காமேஸ்வரி வஜ்ரேஸ்வரி
பகமாலின்யோந்தஸ்திரி-கோணகா தேவதா :
அவ்யக்தம்(விளக்கவொண்ணாதது),மகத்,அஹங்காரம் ஆகியவையே ,காமேஸ்வரி,,வஜ்ரேஸ்வரி மற்றும் பகமலலினி எனப்படும் உள் முக்கோண தேவதைகள் .
27. நிருபாதிக சம்விதேவ காமேஸ்வர:
உபாதியற்ற பிந்துவடிவான ஞானமே காமேஸ்வரர்
28.
சதானந்த பூர்ண :ச்வாத்மைவ பரதேவதா லலிதா
எப்பொழுதும் பரிபூர்ண ஆனந்தமாயிருக்கும் தனது ஆத்ம ஸ்வரூபமே
லலிதா தேவி .
29.
லவ்ஹித்ய மேதச்ய சர்வச்ய விமர்ச :
ஜீவன் சக்தி இவற்றின் செந்நிறம் , இவ்வனைத்தின் விமர்சம் .
30.
அனன்ய சித்தத்வேன ச சித்தி :
இந்த சாதைனையால் சித்தத்தை ஒருமுகப்படுத்தலே சித்தியாகும் .
31.
பவானாயாக : க்ரியா : உபசார :.
பாவனை செய்வதே உபசாரம்.
32.
அகம் த்வமஸ்தி நாஸ்தி கர்த்தவ்ய மகர்த்தவ்ய முபாசிதவ்ய
மிதி விகல்பானா மாத்மனி விலாபனம் ஹோம :
நான் ,நீ ,உண்டு , இல்லை , செய்யத்தக்கது , தகாதது ,உபாசிக்கத்தக்கது எனும் வேறுபாடுகளை எல்லாம் ஆத்மாவில் ஒடுங்க ,லயிக்கச் செய்வதே ஹோமம்.
33.
பாவனா விஷயாணா மபேத பாவனா தர்ப்பணம்
பாவனைக்கு சொல்லப்பட்ட விஷயங்களில் உயர்ந்தது தாழ்ந்தது பார்க்காமல் இருப்பதே தர்ப்பணம் .
34.
பஞ்சதச திதி ரூபேண காலச்ய பரிநாமவலோகன :
பதினைந்து திதிகளின் வடிவைக் காலம் மாறி வருவதை , சாட்சியாயிருந்து ,காண்பதே காட்சி
35.
ஏவம். முஹூர்த்த த்விதயம் முஹூர்த்த மாத்ரம் வா
பாவனா பரோ ஜீவன் முக்தோ பவதி ஸ ஏவ சிவ
யோகீதி கத்யதே.
இப்படி மூன்று முஹூர்த்தமோ , அல்லது இரண்டு முஹூர்த்தமோ ,அல்லது ஒரு முஹூர்த்தமோ ஆவது பாவனையில் நிலைத்திருப்பவன்
ஜீவன் முக்தன் ஆவான்
அவனே சிவயோகி எனப்படுவான் .
36.காதி மதேனாச்சக்ர பாவனா : பிரதிபாதிதா :
இவ்வாறு காதி மதத்தை ஒற்றி மிகவும் தனிப்பட்ட ஸ்ரீசக்ர பாவனைகள்
விளக்கப்பட்டன
ய.ஏவம் வேத ஸோதர்வசிரோ தீதே
யார் இதை உள்ளபடி அறிகிறானோ அவன் அதர்வ வேதத்தின் சிறந்த உண்மையைக் கற்றவன் ஆகிறான் .
இதத்துடன் பாவனோபனிஷத் நிறைவு பெற்றது .
பத்ரம் கர்நேபி …… சொல்லவும்.
Related;
Leave a Reply