தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் நிலை தெளிவாகாத நிலையில் இந்த வோட்டெடுப்பு கேலிக்கு உரியது .அவர்கள் நீக்கப்பட்டது சரி என்றால் ,( அது தவறு -PRC schedule 10படி சுயேச்சை MLAS Anti -Defecttion சட்டத்தில் வர மாட்டார்கள் ,மேலும் கொரடாவின் ஆணையை மீறாதவரை மற்ற MLAk க்க ளுக்கும் இந்த சட்டம் பொருந்தாது ),
நீதி மன்றம் வழங்கும் எந்த தீர்ப்பும் அபத்தமாகத்தான் இருக்கும்.
கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பால் நிலைமை மாறும் அபாயம்? இரண்டாவது முறையாக நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு வெற்றிபெற்றாலும், வரும் 18ம் தேதி ஐகோர்ட் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறது. 11 பா.ஜ., எம்.எல்.ஏ.,க் களின் நிலைமை குறித்து கர்நாடகா ஐகோர்ட் அறிவிக்கும் தீர்ப்பினால், கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை உருவாகலாம். கர்நாடகா சட்டசபையில் கடந்த 11ம் தேதி நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் முதல்வர் எடியூரப்பா, குரல் ஓட்டெடுப்பின் மூலம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் போப்பய்யா அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் 11 பேரிடம் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஐந்து பேர் தொடர்ந்த வழக்கில், வரும் 18ம் தேதி விசாரணை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.



