யஜூர் வேதத்தில் தைத்ரிய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள், நான்காவது காண்டத்தின் மத்தியில் அமைத்துள்ளது ஸ்ரீ ருத்ரம் .
இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது .
ஒன்று நமகம் , மற்றொன்று சமகம்.
சமகத்தின் அர்த்தம் மட்டும் பொழிப்புரை .
சமகம் 11 அனுவாகங்களாக உள்ளது .
சமகம் .
ஓம் அக்னா’விஷ்ணோ ஸஜோஷ’ஸேமாவ’ர்தம்து வாம் கிரஃ’ |
த்யும்னைர்-வாஜே’பிராக’தம் |
வாஜ’ஶ்ச மே ப்ரஸவஶ்ச’ மே ப்ரய’திஶ்ச மே ப்ரஸி’திஶ்ச மே தீதிஶ்ச’ மே க்ரது’ஶ்ச மே,
ஸ்வர’ஶ்ச மே ஶ்லோக’ஶ்ச மே ஶ்ராவஶ்ச’ மே ஶ்ருதி’ஶ்ச
மே ஜ்யோதி’ஶ்ச மே ஸுவ’ஶ்ச மேப்ராணஶ்ச’ மேஉபானஶ்ச’ மே
வ்யானஶ்ச மேஉஸு’ஶ்ச மே சித்தம் ச’ ம ஆதீ’தம் ச மே
வாக்ச’மே மன’ஶ்ச மே சக்ஷு’ஶ்ச மே ஶ்ரோத்ரம்’ ச மே
தக்ஷ’ஶ்ச மே பலம்’ ச ம ஓஜ’ஶ்ச மேஸஹ’ஶ்ச ம
ஆயு’ஶ்ச மே ஜரா ச’ ம ஆத்மா ச’ மே தனூஶ்ச’ மே
ஶர்ம’ ச மேவர்ம’ சமேஉம்கா’னி ச மேஉஸ்தானி’ ச மே
பரூக்ம்’ஷி ச மே ஶரீ’ராணி ச மே || 1 ||
அக்னா விஷ்ணு -அக்னியும் , விஷ்ணுவும் ஆகியவர்களே ,
சஜோஷா -நீங்கள் இருவரும் எங்களிடம் ஒருமித்த அன்பு நிறைந்த மனமுடயவர்களாக இருக்க வேண்டும்.
வாம் -உங்களை ,
இமாம் கிர: உங்களைத் துதிக்கும் இந்த வார்த்தைகள்
வர்த்தந்து-செழிக்க வேண்டும் .
யுவாம் -நீங்கள் இருவரும் ,
த்யும்னை :அனைத்து ஐஸ்வர்யங்களுடனும் ,
வாஜேபி ;உணவுப் பொருள்களுடன் ,
ஆகதம்-எங்களை அனுக்ரகிக்க எழுந்தருள வேண்டும் .
வாஜச்சமே -உணவு மற்றும் நீர் முதலான பானங்கள்
மே-இறைவனை துதிக்கும் என்னிடம் உள்ளன .
பிரசவ -அன்னமளிக்கும் மனதும் ,
ப்ரயதி :பரிசுத்தமும் ,
பிரசதி :-உற்சாகமும் ,
தீதி :-உணவைப் பாதுகாக்கும் திறனும் ,
க்ரது-உணவை சம்பாதிக்கும் யாகமும் ,
ஸ்வர:-யாகத்தில் ஸ்வரத்துடன் மந்திரங்களை உச்சரிக்கும் திறனும் ,
ஸ்லோக : புகழும் ,
ஸ்ராவ; சொல் திறமையும் ,
ச்ருதி: வேள்வியாற்றும் திறனும் ,
ஜ்யோதி :உள்ளொளியும் ,
சுவ :-ஸ்வர்கமும்,
பிராண :-பிராணனும் ,
அபான ;-அபானனும்,
வியாந:-வ்யானனும்,
அஸு-உயிரும் ,
சித்தம்-சித்தமும் ,
ஆதீதம் -சித்தத்தால் அறியப்பட்ட பொருளும் ,
வாக் -வாக்கும் ,
மன : மனமும் ,
சக்ஷு :கண்களும் ,
ச்ரோத்ரம் -காதுகளும்,
தக்ஷ -ஞா னேந்திரியங்களின் சக்தியும் ,
பலம் -கர்மேந்திரியங் களின் சக்தியும் ,
ஓஜ:-பிராண சக்தியும் ,
சக :பகைவரை வெல்லும் திறமையும் ,
ஆயுஹு -ஆயுளும் ,
ஜரா -முதுமையும் ,
ஆத்மா -அந்தராத்மாவும் ,
தனூ;-நல்ல உடலும் ,
சர்ம-சுகமும் ,
வர்ம;_உடலைக் காக்கும் கவசம் முதலியவையும் ,
அங்கானி-திடமான உறுப்புகளும் ,
அஸ்தானி-எலும்புகளும் ,
பரூம்ஷி -கணுக்களும் ,
சரீராணி -மற்றும் உடலில் உள்ள அனைத்து அவயவங்களும் ,
உணவு மற்றும் நீரும் முதலிய பானங்கள் ,உணவிடும் டும் மனது ,சுத்தம் ,உற்சாகமும் ,உணவைப் பாதுகாக்கும் திறனும் ,உணவை
சம்பாதிக்கும் யாகமும் ,யாகத்தில் ஸ்வரங்களை உச்சரிக்கும் திறனும் ,புகழும் ,சொல் திறமையும் ,வேள்வித் திறமையும் ,
உள்ளொளியும் , சுவர்க்கமும்,பிராணனும் ,அபானனும் ,வ்யானனும்,உயிரும் ,சித்தமும் ,சித்தத்தால் அறியப்படும் பொருளும் ,
வாக்கும் ,மனமும் ,கண்களும் ,காதுகளும் ,ஞா னேந்திரியங்களின் சக்தியும் , கர்மேந்திரியங் களின் சக்தியும் ,
பிராண சக்தியும் ,பகைவரை வெல்லும் திறமையும் ,ஆயுளும் ,முதுமையும் ,அந்தராத்மாவும் ,நல்ல உடலும் ,சுகமும் ,
உடலைக் காக்கும் கவசம் முதலியவையும் ,திடமான உறுப்புகளும் ,எலும்புகளும் ,கணுக்களும் ,
மற்றும் உடலில் உள்ள அனைத்து அவயவங்களும் ,
ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும் என்னிடம் உள்ளன .
எனவே அக்னியும் விஷ்ணுவும் ஆன நீங்கள் இருவரும் என்னிடம் ஒருமித்த அன்புடயவர்களாக இருக்க வேண்டும் .
உங்களைத்துதிக்கும் இந்த வார்த்தைகள் செழிக்க வேண்டும் .
நீங்கள் இருவரும் உணவுப் பொருள்கள் மற்றும் அனைத்து ஐஸ்வர்யங்கள், இவற்றுடன் எழுந்தருள வேண்டும் .


You must be logged in to post a comment.