Tag: தங்கப்பதக்கம் பாடல்கள்

  • கண்ணதாசன் ,கெளரவம் ,தங்கப்பதக்கம் பாடல்கள்

    Kannadasan ,Tamil Poet
    Kannadasan

    கண்ணதாசனை ,அவரது உறவினர் ஒருவருடன் அவரது ஹென்ஸ்மன் ரோடு இல்லத்தில் (இப்போது அது கண்ணதாசன்  சாலை ) சந்தித்தேன் .

    பேச்சு பாடல்களைப் பற்றித் திரும்பியது .
    ‘இலக்கணத்திற்கு அடங்காத பாட்டை எழுதி ,கருத்தைத் தெளிவாகக் கூறுவதில் நீர் நீர்தான் ‘ என்றேன் .
    ‘அப்படியா ,சொல்லுங்க தம்பி’  என்றார்.
    கெளரவம் படத்தில் ‘நீயும் நானுமா ,கண்ணா , நீயும் நானுமா பாட்டில் அறிவைக் கொடுத்ததோர் துரோணரின் கெளரவம் அவர்மேல் தொடுத்ததேன் அர்ஜுனன் கெளரவம் வரி இலக்கணத்தில் அடங்காது,ஓரளவு உருவகம் என்று சொல்ல வேண்டியதுதான் ஆனால் படத்தின் கதை இந்த  இரண்டு வரிகளில் ‘
    ‘வேறே ‘
    தங்கப்பதக்கதில் சோதனை மேல் சோதனை பாடலில் ,சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது என்று எழுதியிருக்கிறீர்கள் .
    இந்த இரண்டு வார்த்தைகளும் சம்ஸ்க்ருதம் ,இதன் பொருள் சம்ஸ்க்ருதம்படித்தவர்களுக்கே    தெரியுமா என்பதே சந்தேகம் .
    சொந்தத்தை நாம் தேர்ந்தெடுக்க முடியாது ,இறைவன் கொடுப்பது ,தாய் ,தந்தை ,உடன் பிறப்புகள் மற்றும் மக்கள் .
    ஆனால் , பந்தம் நாம் தேர்ந்தெடுப்பது ,-மனைவி .
    கால்களிலும் கைகளிலும் விலங்கு பூட்டப்பட்டவன்,முயன்றால் ஒருவேளை கால் விலங்கை அகற்றிக்கொள்ள முடியும் .
    ஆனால்,கை விலங்கை ?
    கண்ணதாசன் சொன்னார் .
    ‘தம்பி ,நாங்க பாட்டு எழுதும்போது இதை எல்லாம் யோசிக்கறதில்லே,நான் பாட்டு தண்ணி அடிச்சுட்டு எழுதறதுதான் .
    நீங்கல்லாம் இந்தமாதிரி அனுபவிச்சு சொல்றீங்களே அது போதும் ‘
    ‘நான் தண்ணியடிச்சா தூக்கம்தான் வருது , படிக்கவே வரலே ‘
    கண்ணதாசன் தொடரும் .
    Related: