Tag: அர்த்தமுள்ள இந்து மதம்

  • சமகம் அர்த்தம் பொழிப்புரை 1

     

    யஜூர் வேதத்தில் தைத்ரிய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள், நான்காவது காண்டத்தின் மத்தியில் அமைத்துள்ளது ஸ்ரீ ருத்ரம் .

     

    Sri Rudram  Image of Lingam.jpg
    Sri Rudram

     

    இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது .

     

    ஒன்று நமகம் , மற்றொன்று சமகம்.

     

    சமகத்தின் அர்த்தம் மட்டும் பொழிப்புரை .

     

    சமகம் 11 அனுவாகங்களாக உள்ளது .

     

    சமகம் .

    ஓம் அக்னா’விஷ்ணோ ஜோஷ’ஸேமாவ’ர்தம்து வாம் கிரஃ’ | 

     

    த்யும்னைர்-வாஜே’பிராக’தம் |

     

     

    வாஜ’ஶ்ச மே ப்ரவஶ்ச’ மே ப்ரய’திஶ்ச மே ப்ரஸி’திஶ்ச மே தீதிஶ்ச’ மே க்ரது’ஶ்ச மே,

     

    ஸ்வர’ஶ்ச மே ஶ்லோக’ஶ்ச மே ஶ்ராவஶ்ச’ மே ஶ்ருதி’ஶ்ச 

     

    மே ஜ்யோதி’ஶ்ச மே ஸுவ’ஶ்ச மேப்ராணஶ்ச’ மே‌உபானஶ்ச’ மே 

     

    வ்யாஶ்ச மே‌உஸு’ஶ்ச மே சித்தம் ச’  ஆதீ’தம் ச மே 

     

    வாக்ச’மே மன’ஶ்ச மே சக்ஷு’ஶ்ச மே ஶ்ரோத்ரம்’ ச மே

     

     தக்ஷ’ஶ்ச மே பலம்’ ச  ஓஜ’ஶ்ச மேஸஹ’ஶ்ச  

     

    ஆயு’ஶ்ச மே ரா ச’ ம த்மா ச’ மே னூஶ்ச’ மே 

     

    ஶர்ம’ ச மேவர்ம’ மே‌உம்கா’னி ச மே‌உஸ்தானி’ ச மே 

     

    பரூக்ம்’ஷி ச மே ஶரீ’ராணி ச மே || 1 ||

     

    அக்னா விஷ்ணு -அக்னியும் , விஷ்ணுவும் ஆகியவர்களே ,

     

    சஜோஷா -நீங்கள் இருவரும் எங்களிடம் ஒருமித்த அன்பு நிறைந்த மனமுடயவர்களாக இருக்க வேண்டும்.

     

    வாம் -உங்களை ,

     

    இமாம் கிர: உங்களைத் துதிக்கும் இந்த வார்த்தைகள்

     

    வர்த்தந்து-செழிக்க வேண்டும் .

     

    யுவாம் -நீங்கள் இருவரும் ,

     

    த்யும்னை :அனைத்து ஐஸ்வர்யங்களுடனும் ,

     

    வாஜேபி ;உணவுப் பொருள்களுடன் ,

     

    ஆகதம்-எங்களை அனுக்ரகிக்க எழுந்தருள  வேண்டும் .

     

    வாஜச்சமே -உணவு மற்றும் நீர் முதலான பானங்கள்

     

    மே-இறைவனை துதிக்கும் என்னிடம் உள்ளன .

     

    பிரசவ -அன்னமளிக்கும் மனதும் ,

     

    ப்ரயதி :பரிசுத்தமும் ,

     

    பிரசதி :-உற்சாகமும் ,

     

    தீதி :-உணவைப் பாதுகாக்கும் திறனும் ,

     

    க்ரது-உணவை சம்பாதிக்கும் யாகமும் ,

     

    ஸ்வர:-யாகத்தில் ஸ்வரத்துடன் மந்திரங்களை உச்சரிக்கும் திறனும் ,

     

    ஸ்லோக : புகழும் ,

     

    ஸ்ராவ; சொல் திறமையும் ,

     

    ச்ருதி: வேள்வியாற்றும் திறனும் ,

     

    ஜ்யோதி :உள்ளொளியும் ,

     

    சுவ :-ஸ்வர்கமும்,

     

    பிராண :-பிராணனும் ,

     

    அபான ;-அபானனும்,

     

    வியாந:-வ்யானனும்,

     

    அஸு-உயிரும் ,

     

    சித்தம்-சித்தமும் ,

     

    ஆதீதம் -சித்தத்தால் அறியப்பட்ட பொருளும் ,

     

    வாக் -வாக்கும் ,

     

    மன : மனமும் ,

     

    சக்ஷு :கண்களும் ,

     

    ச்ரோத்ரம் -காதுகளும்,

     

    தக்ஷ -ஞா னேந்திரியங்களின்  சக்தியும் ,

     

    பலம் -கர்மேந்திரியங் களின் சக்தியும் ,

     

    ஓஜ:-பிராண சக்தியும் ,

     

    சக :பகைவரை வெல்லும் திறமையும் ,

     

    ஆயுஹு -ஆயுளும் ,

     

    ஜரா -முதுமையும் ,

     

    ஆத்மா -அந்தராத்மாவும் ,

     

    தனூ;-நல்ல உடலும் ,

     

    சர்ம-சுகமும் ,

     

    வர்ம;_உடலைக் காக்கும் கவசம் முதலியவையும் ,

     

    அங்கானி-திடமான உறுப்புகளும் ,

     

    அஸ்தானி-எலும்புகளும் ,

     

    பரூம்ஷி -கணுக்களும் ,

     

    சரீராணி -மற்றும் உடலில் உள்ள அனைத்து அவயவங்களும் ,

     

    உணவு மற்றும் நீரும் முதலிய பானங்கள் ,உணவிடும் டும் மனது ,சுத்தம் ,உற்சாகமும் ,உணவைப் பாதுகாக்கும் திறனும் ,உணவை

     

     

    சம்பாதிக்கும் யாகமும் ,யாகத்தில் ஸ்வரங்களை உச்சரிக்கும் திறனும் ,புகழும் ,சொல் திறமையும் ,வேள்வித் திறமையும் ,

     

    உள்ளொளியும் , சுவர்க்கமும்,பிராணனும் ,அபானனும் ,வ்யானனும்,உயிரும் ,சித்தமும் ,சித்தத்தால் அறியப்படும் பொருளும் ,

     

    வாக்கும் ,மனமும் ,கண்களும் ,காதுகளும் ,ஞா னேந்திரியங்களின்  சக்தியும் , கர்மேந்திரியங் களின் சக்தியும் ,

     

    பிராண சக்தியும் ,பகைவரை வெல்லும் திறமையும் ,ஆயுளும் ,முதுமையும் ,அந்தராத்மாவும் ,நல்ல உடலும் ,சுகமும் ,

     

    உடலைக் காக்கும் கவசம் முதலியவையும் ,திடமான உறுப்புகளும் ,எலும்புகளும் ,கணுக்களும் ,

     

    மற்றும் உடலில் உள்ள அனைத்து அவயவங்களும் ,

     

    ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும்  என்னிடம் உள்ளன .

     

    எனவே அக்னியும் விஷ்ணுவும் ஆன நீங்கள் இருவரும் என்னிடம் ஒருமித்த அன்புடயவர்களாக  இருக்க வேண்டும் .

     

    உங்களைத்துதிக்கும் இந்த வார்த்தைகள் செழிக்க வேண்டும் .

     

    நீங்கள் இருவரும் உணவுப் பொருள்கள் மற்றும் அனைத்து ஐஸ்வர்யங்கள், இவற்றுடன் எழுந்தருள  வேண்டும் .

     

     

    Sri Rudram Chamaakm Text

     

     

    Enhanced by Zemanta
  • அர்த்தமுள்ள இந்து மதம் கண்ணதாசன் முழுத் தொகுப்பு

    கண்ணதாசனைப் போல் நாத்திகம் பேசியவரில்லை.ஆத்திகரானதும.

    அவர்போல் பழகு தமிழில் இந்துமதத்தத்துவங்களைப்பரப்பியவர் எவருமில்லை.

    அர்த்தமுள்ள இந்துமதம்வீடியோ  1 -12 பதிவு செய்திருக்கிறேன் .

    Book on Hinduism by Tamil Poet Kannadasan
    On Hinduism,The Meaning of Hinduism.Book By Kannadasan

    13 மற்றும் 14 இதோ.

    மேலும் விதைவிருட்சம் இணையதளம் கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்துமதம் முழுத்தொகுப்பினை ,கட்டுரை வடிவில் வெளியிட்டுள்ளது .அது:

    முழுத்தொகுப்பு வ்ருட்சம் விருட்சம் இணைய தளத்தில் .

    எனது வலைப்பதிவு மக்கள் நலனுக்காகவெளியிடப்பட்டுள்ளது .

    மேல் விவரம்கவியரசர்கண்ணதாசன குடும்பத்தினரிடம்.

     

    காப்புரிமை கவியரசு கண்ண‍தாசன் அவர்களது குடும்பத்தார்..

    ‘முதற்கட்டம் வறுமை என்றால், அடுத்த கட்டம் செல்வம். தற் கட்டம் இன்பமென்றால், அடுத்த கட்டம் துன்பம்.

    முதற்கட்டமே துன்பமென்றால், அடுத்த கட்டம் இன்பம். இறைவ னது தராசில் இரண்டு தட்டுகளும் ஏறி ஏறி இறங்குகின்றன.

    `இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
    அடுத்தூர்வ தஃதொப்ப தில்’
    என்றான் வள்ளுவன்…

    எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை. அந்த நாளில் எனக்கு நல்ல பசியெடுத்தது; உணவு கிடைக்கவில்லை. பின் பசியுமிருந்தது; உணவும் கிடைத் தது. இப்போது உணவு கிடைக்கிறது; பசியில்லை. அடுக்கடுக்கா கப் பணம் சேர்த்து, ஆயிரம் வேலிக்கு மிராசுதாரர் ஆனார் ஒரு வர். ஆன மறுநாளே, அவரை `அரிசி சாப்பிடக் கூடாது; சர்க்கரை வியாதி’ என்று சொல்லிவிட்டார் டாக்டர்.

    ..

    எனது தி.மு.க. நண்பர்கள் ஒவ்வொருவரும் கடுமையான உழைப் பாளிகள். ரயிலிலும் கட்டை வண்டிகளிலும், கால்நடையாகவும் சென்று கூட்டத்தில் பேசுவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைச் சாலைக்குப் போவார்கள். அப்பொழுதெல்லாம் அவர்கள் உடல்நிலை நன்றாகவே இருந்தது. அவர்கள் பதவிக்கு வந்து நிம்மதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அவர்களில் பலருடைய ஆரோக்கியம் கெட்டுவிட்டது.

    எனது நண்பர் ஒருவர் படமெடுத்தார். முதற்படமே அபார வெற்றி. அளவு கடந்த லாபம். அடுத்த படத்திலிருந்து விழத் தொடங்கியது அடி. இன்னும் அவர் எழ முடியவில்லை. இன்னொரு பட அதிபர்… ஊமைப்படக் காலத்திலிருந்து தொழிலில் இருக்கிறார். ஆரம்பக் கட்டத்தில் பல படங்கள் அவருக்குக் கை கொடுக்கவில்லை. மிகுந்த சிரமப்பட்டு சென்னைக்கு வந்து ஒரு படம் எடுத்தார்.  அவ ரது `வாழ்க்கை’யையே அந்தப் படம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். அந்தப் படம் அமோகமாக ஓடியது. ஒரு புது நடிகையை நட்சத்திர நடிகையாக்கிற்று. அது தெலுங்கி லும் வெற்றி; இந்தியிலும் வெற்றி. அது முதல் அவர் தொட்ட தெல்லாம் வெற்றி.

    பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இல்லாமல் வாழ்ந்தவர் கள் எத்தனை பேர்? கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாரு ங்கள்.

    இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிட விரும்பு கிறேன். பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறுவயதிலிருந்தே அவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர்.  சினிமாத் தொழிலிலேயே மதுப் பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவ ர். மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது வாழ்க்கை கடுமையான வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது. அப்போதும் அவர் நாண யத்தையும் நேர்மையையும் விட்டதில்லை.

    குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார். ஜூபி டர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலை பார்த்தார். அவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடமாகும். அந்த நேரத்தில் ஒரு வெற்றிலை பாக்குக் கடையில் அவருக்கு ஆறு ரூபாய் வரை கடனாகி விட்டது. கடைக்காரன் அவர் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்கினான்; அந்தக் கடையிருக்கும் பக்கமே போக முடியாதபடி அவதிப்பட் டார்.

    அடிக்கடி கோவைக்குப் பத்து மைலுக்கு அப்பாலிருக்கும் மருத மலைக்குப்போய் `முருகா! முருகா!’ என்று அழுவார். அந்தக் கோவி லோ ஜன நடமாட்டமில்லாத கோவில். கடைக்காரன் கோபித்துக் கொண்ட அன்று இரவு. அந்த மருதமலைக் கோவிலில் போய் உட்கா ர்ந்து கொண்டு அழுதார்; “முருகா! காப்பாற்று” என்று வேண்டிக் கொண்டார்.

    நள்ளிரவில் காடுகள் நிறைந்த அந்த மலையை விட்டு இறங்கி னார். வழியில் ஒரு சிகரெட் பாக்கெட் கிடந்தது. அதைக் காலால் உதை த்துக் கொண்டு நகர்ந்தார். கொஞ்சதூரம் வந்ததும் என்ன தோன்றி ற்றோ? அந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தார். உள்ளே இரண்டு சிகரெட்டுகளும், பத்து ரூபாய் நோட்டும் இருந்தன.

    அப்போது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?

    ஆதாரம் :

    http://vidhai2virutcham.com/2013/05/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E2%80%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E2%80%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/#respond

     

    http://ramanisblog.in/2012/06/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-kannadasan-volum/

  • Kannadasan,அர்த்தமுள்ள இந்து மதம் Parts 1-6

     

    KANNADASAN\’S ARTHAMULLA INDHU MADHAM PART-1

    KANNADASAN\’S ARTHAMULLA INDHU MADHAM PART-2

    KANNADASAN\’S ARTHAMULLA INDHU MADHAM PART-3

    KANNADASAN\’S ARTHAMULLA INDHU MADHAM PART-4

    KANNADASAN\’S ARTHAMULLA INDHU MADHAM PART-5

    KANNADASAN\’S ARTHAMULLA INDHU MADHAM PART-6

    There have been greater poets.

    But Kannadasan’s appeal to heart  is unique..

    Many of his Poems/songs may not be original like’Satti Suttadhada,veedu varai uravu,Irandhavanai chumandhavanum irandhuttan,

    But Kannadasan’s rendering is more appealing than the original.

    It is a Gift.

    There have been /are Scholarly treatises on’Hinduism

    But nothing like ‘Artamulla Indhumadham in terms of simple presentation of complex issues and an exquisite prose.

    May be there are inaccuracies here and there, those who find them may search the original for final say.

    Even here Kannadasan scores-he made you look for Hinduism.

    Uploaded above are six parts of Kannadasan’s ‘Arthamulla Indhumadham’

    http://www.mediafire.com/?y2aeafno11udzem

     

    Arthamulla Indhumadham Volume  7-12  http://ramanisblog.in/2012/06/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-kannadasan-volum/