Tag: ஸ்ரீசூக்த அர்த்தம்

  • ஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்

    ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
    தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |

    ஜாத வேத -எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே ,

    ஹிரண்யவர்ணாம் -பொன் நிறத்தவளும்.

    ஹரிணீம் -பாவங்களைப் போக்குபவளும் ,

    ஸ்வர்ண ரதஸ்ரஜாம்-தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் ,

    சந்த்ராம்- நிலவு போன்றவளும் ,

    ஹிரண்மயீம் -பொன்னே உருவானவளும்,

    லக்ஷ்மீம் -லக்ஷ்மி என்று அழைக்கப்படும் திரு மகளை ,

    மே -என்னிடம் ,

    ஆவஹ -எழுந்தருளச் செய்வாய் —————1

    Laksmi Painting by Ravi Varma
    Maha Laksmi Ravi Varma’s painting Image credit, http://www.cyberkerala.com/rajaravivarma/ravivarma-painting-58.htm

    பொன் நிறத்தவளும் ,பாவங்களைப் போக்குபவளும் தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் நிலவு போன்றவளும் ,

    பொன்மயமானளும் ஆன மகாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்.

    தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |
    யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||2

    ஜாதவேத -அக்னியே ,

    அஹம் -நான் ,

    ஹிரண்யம் -பொன்னையும் ,

    காம் -பசுக்களையும் ,

    அஸ்வ -குதிரைகளையும் ,

    புருஷான் -உறவினரையும் ,

    விந்தேயம் -பெறுவேனோ ,

    தாம் -அந்த ,

    லக்ஷ்மீம் -அந்த மகாலக்ஷ்மியயை,

    யஸ்யாம் அனபகாமிநீம் -என்னிடமிருந்து விலகாதிருப்பவளை ,

    மே -என்னிடம் ,

    ஆவஹ -எழுந்தருளச் செய்வாய்………………………………..2

    அக்னி தேவனே,,

    யாருடைய அருளால் ,நான் பொன்னையும் பசுக்களையும் ,குதிரைகளையும் மற்றும் உறவினரையும் பெறுவேனோ ,

    அந்த மஹாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்.

    அவளை என்னிடமிருந்து விலகாதிருக்கச் செய்வாயாக.

    அஸ்வ பூர்வாம் -முன்னால் குதிரைகளும் ,

    ரத மத்யாம் -நடுவில் ரதங்களும் ,

    ஹச்திநாத ப்ரபோதிநீம் -களிறுகளின் பிளிறல்களை தனது அறிகுறியாகக் கொண்டவளுமான ,

    ஸ்ரியம் தேவீம் -மனதிற்கு உகந்தவளுமான ஸ்ரீ தேவியை ,

    உபஹ்வையே -அழைக்கிறேன் .

    ஸ்ரீ தேவி -செல்வத்தின் உறைவிடமான திருமகளே ,

    மா ஜுஷதாம் -என்னிடம் இன்புற்று உறைவாய் .

    முன்னால் குதிரைகள் ,நடுவில் தேர்கள் புடைசூழ வருபவளும் ,யானைகளின் பிளிறலை தன வரவின் முன்னோடியாகக் கொண்டவளும்மான ,மனதிற்கு உகந்த செல்வத்தின் தலைவியாகிய திருமகளை அழைக்கின்றேன் .

    திருமகளே !

    நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாயாக .

    காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |
    பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||…………………….4

    ஸ்மிதாம் -புன்முறுவல் தவழ்பவளும் ,

    ஹிரண்யப் ப்ராகாராம் -பொன் மயமான கோட்டையில் உறைபவளும் ,

    ஆர்த்ராம் -கருணை நிறைந்தவளும் ,

    ஜ்வலந்தீம் -ஒழி வீசுபவளும் ,

    த்ருப்தாம் -மன நிறைவுடயளும் ,

    தர்பப்பயந்தீம் -தன்னைத் துதிப்போர்க்கு மகிழ்ச்சியை அருளுபவளும்,

    பத்மே -தாமரையில் ,

    ஸ்திதாம் -நிலை பெற்றவளும் ,

    பத்ம வர்ணாம் -தாமரை நிறத்தவளும்,

    காம் -யாரோ ,

    தாம் ஸ்ரியம் -அந்த மனத்திருக்கு உகந்த லக்ஷ்மியை ,திருமகளை ,

    இஹ -இங்கே,

    உபஹ்வையே–வேண்டுகின்றேன்.

    குறுநகை தவழ்பவளும் ,பொன் மயமான கோட்டையில் உறைபவளும் ,கருணை நிறைந்து ததும்புவளும்,ஒளி நிறைந்தவளும் ,

    மகிழ்ச்சி நிறைந்தவளும் ,மகிழ்ச்சியைத் தருபவளும் ,தாமரையில் வீற்றிருப்பவளும் தாமரை நிறத்தவளுமான அந்தத் திருமகளை இங்கே எழுந்தருளுமாறு இறைஞ்சுகின்றேன் .

    சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |
    தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||

    லோகே -உலக வாழ் உயிர்களுக்கு ,

    சந்த்ராம் -குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் ,

    பிரபாஸாம் -சிதறும் ஒளி மிக்கவளும் ,

    யசஸா -தன மகிமையால்,

    ஜ்வலந்தீம் -சுடர் விட்டு ஒளிர்பவளும் ,

    தேவ ஜுஷ்டாம் -தேவர்காளால் வழிபடப்படுபவளும்,

    உதாராம் -கழிவிரக்கம் நிறைந்தவளும் ,

    பத்மிநீம் -தாமரையைத் தாங்கியவளும்,

    ஈம் -ஈம் என்னும் பீஜ மந்திரத்தின் பொருளாகத் திகழ்பவளும்,

    ஆன,

    தாம் ஸ்ரியம் -அந்த மனதிற்குகந்த மகலக்ஷ்மியை ,

    அஹம் -நான் ,

    சரணம் ப்ரபத்யே -அடைக்கலம் புகுகிறேன் .

    த்வாம் -உன்னை ,

    வ்ருணே -வேண்டுகிறேன்.

    மே -என்னிடமிருந்து ,

    அலக்ஷ்மி -வறுமை,

    நச்யதாம் – அழியட்டும் .

    நிலவைப் போன்றவளும் ,ஒளிநிரைந்தவளும் , சுடர்விட்டு ஒளிர்பவளும் ,தேவர்களால் வழிபடப்படுபவளும் கருணை

    மிக்கவளும் ,தாமரையைத் தாங்கியவளும் ,ஈம் என்னும் பீஜ மந்திரந்தின் பொருளாக உள்ளவளும் ஆகிய அந்த மகாலக்ஷிமயை

    நான் சரணடைகிறேன்.

    தேவியே!

    என் வறுமை விலகி அழிய அருள்வாய் .

    ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |
    தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ

    ஆதித்யவ’ர்ணே – சூரியனின் நிறத்தவளே ,

    தவ-உனது ,

    தபசக -தவத்தால் ,

    வனஸ்பதி ‘கானகங்களுக்குத் தலைவனாகிய ,

    பில்வக வ்ருக்ஷ -வில்வ மரம் ,

    அதிஜாதக -உண்டாயிற்று .

    அத -அதே போல் ,

    தபஸா -தவத்தால் ,

    தஸ்ய -அதன் ,

    பலானி -பலத்தால்,விளைவாக ,பழங்கள் ,

    மாயா -அறியாமை ஆகிய ,

    அந்தராயாக -எனது உள்ளத்தில் உள்ள அகத்தடயையும் ,

    அ’லக்ஷ்மீஃ -அமங்கலமாகிய .

    பாஹ்யா -புறத்தடயையும்,

    நுதந்து -அழிக்கட்டும்.

    கதிரவன் நிறத்தவளே ,காட்டிற்குத் தலைவனான வில்வ மரம் உன் தவத்தால் உண்டாயிற்று .

    அதன் பழங்கள் அறியாமையாகிய அகத்தடயையும் ,அமங்கலமாகிய புறத்தடையையும் உன் தவத்தாலே

    அழிக்க்கட்டும் .

    உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |
    ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||…….7

    தேவஸகஃ’குபேரனும் ,

    கீர்திச்ச -புகழின் தேவனும் ,

    மணின சஹ -என்னை நாடி வர வேண்டும் .

    அஸ்மின் -இந்த ,

    ராஷ்ட்ரே‌-நாட்டில் ,

    ப்ராதுர் பூத அஸ்மின் -பிறந்திருக்கிறேன் .

    மே -எனக்கு ,

    கீர்த்திம்- பெருமையும் ,

    ரிதிம் -செல்வமும் ,

    ததாது வழங்குவாய் .

    செல்வதிர்க்குத் தலைவனான குபேரனும் புகழின் தேவனும் என்னை நாடி வர நீண்டும்.

    உனது அருளும் கருணையும் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன் .

    நீ எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய் .

    க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |
    அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||…… 8

    க்ஷுத்பி’பாஸாம’லாம் -பசியினாலும் தாகத்தினாலும் இளைத்தவளும் ,

    ஜ்யேஷ்டாம-( உனக்கு மூத்தவளும் ), முன்னால் பிறந்தவளுமான ,

    அலக்ஷ்மீம் -செல்வதிலிருந்து விலகிய மூதேவியை ,

    அஹம் -நான் ,

    மீ க்ருஹாத் -எனது இல்லத்திலிருந்து

    நாசயாமி -விலக்குகிறேன் .

    சர்வாம் -எல்லா ,

    அபூதிம் -ஏழ்மையையும் ,

    அசம்ருத்திம் ச -வறுமையையும் ,

    நிர்ணுத -அகற்றி அருளுக .

    பசி தாகத்தினால் மெலிந்தவளும் ,லக்ஷ்மிக்கு முன்னால் பிறந்தவளுமான மூதேவியை நான் விளக்குகிறேன் .

    எனது இல்லத்திலிருந்து அனைத்து எழ்மைகளையும் வறுமைகளையும் அகற்றி அருள்வாய் .

    கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |
    ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||…9

    கம்தத்வாராம்-நறுமணத்தின் இருப்பிடமானவளும் ,

    துராதர்ஷாம் -வெல்லவே முடியாதவளும் ,

    நித்ய புஷ்டாம் -நிதமும் வலிமையை தருபவளும் ,

    கரீஷிணீம் -அனைத்தும் நிறைந்தவளும் ,

    சர்வ பூதானாம் -எல்லா உயிர்களுக்கும் ,

    ஈஸ்வரீம் -தலைவியும் ஆன ,

    தாம் ஸ்ரியம் -அந்த மகாலக்ஷ்மியை ,

    இஹ -இங்கே ,

    உபஹ்வையே–எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன் .

    நறுமணத்தின் இருப்பிடமானவளும் ,எவராலும் வெல்லப்பட முடியாதவளும் , என்றும் இனிமையைத் தருபவளும்,

    அனைத்தும் நிறைந்தவளும் ,அனைத்து உயிர்களின் தலைவியுமான, மகாலக்ஷ்மியை

    இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்

    மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |
    பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||..10.

    ஸ்ரீ -திருமகளே !,

    மனசஹ -மனத்தில் எழும் ,

    காமம் -ஆசைகளையும் ,

    ஆகூதிம் -தருமத்திற்கு முரணாகாத ஆசைகளையும் ,மகிழ்ச்சிகளையும் ,

    வாக்-வாக்கில் ,

    சத்யம் -உணமையையும் ,

    பசூனாம் -பசுக்களாலும் ,

    அன்னச்ய -உணவினாலும் ,

    அசீமகி ,-அனுபவிக்க வேண்டும் .

    மயி -எனக்கு ,

    கீர்த்தி -பெருமை ,

    ஸ்ரயதாம் -உண்டாகட்டும் .

    திருமகளே !

    தருமத்திற்குப் புறம்பாகாத எனது நல்ல ஆசைகளையும் ,மகிழ்ச்சியையும் ,வாக்கில் உண்மையையும் ,

    பசுக்களின் மற்றும் உணவின் நிறைவால் ,ஏற்படுகின்ற இன்பத்தை நான் நுகர வேண்டும் .

    எனக்கு புகழ் உண்டாகட்டும் .

    கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |
    ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||..11

    கர்தமே’ன. கர்த்தமரே (கர்தம முனிவரே ),

    கர்தமேன -உமக்கு (கர்த்தமராகிய )

    பிரஜா பூதா -மகளாய்ப் பிறந்த மகாலக்ஷ்மி ,

    மயி -எனக்கு ,என்னிடம்,

    சம்பவ -தோன்ற வேண்டும் .

    பத்ம மாலினீம் -தாமரைப்பூக்களினால் ஆன மாலை அணிந்தவளும் ,

    ஸ்ரியம் -செல்வத்திற்கு தலைவியுமான ,

    மாதாம் -அன்னையும்

    மே -என் ,

    குலே- என் குலத்தில் ,

    வாசய -தங்கச் செய்ய வேண்டும் .

    கர்த்தமரே !

    உமது மகளான லக்ஷ்மி என்னிடம் வர வேண்டும் .

    தாமரை மாலை அணிந்தவளும் ,செல்வத்தின் தலைவியும் அன்னயுமாகிய அவளை என் குலத்தில் தங்கச்

    செய்ய வேண்டும்.

    சிக்லீத -சிக்லீதரே (முனிவர்,லக்ஷ்மியின் மகன் )

    ஆபஹ -தண்ணீர் ,

    ச்னிக்தானி ;சிறந்த உணவுப் பொருள்களை ,
    .
    ஸ்ருஜந்து -விளைவிக்கட்டும் .

    மே -எனது ,

    க்ருஹே -எனது இல்லத்தில் ,

    வசஹ -வசிக்க வேண்டும் .

    ச -மேலும் ,

    தேவீம் -தேவியும் ,

    மாதரம் -உலகிற்கு அன்னையும் ஆன ,

    ஸ்ரியம் -உங்கள் தாயாகிய திருமகளை ,

    மே -என் .

    குலே -குலத்தில் ,

    நிவாசய – எப்போழ்தும் வாழும்படி அருள வேண்டும் .

    லக்ஷ்மியின் மகனான சிக்லீதரே !

    நீர் சிறந்த உணவுப் பொருள்களை விளைவிக்கட்டும் .

    நீங்கள் என் இல்லத்தில் வசிக்க வேண்டும் .

    தேவியும் உங்கள் அன்னையுமான மகாலக்ஷ்மியை என் குலத்தில் நிலைத்து வாழ அருள வேண்டும் .

    ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |
    ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||…13.

    ஜாத வேத -அக்னியே !,

    ஆர்த்ராம் -கருணை நிரம்பிய மனமுடயவளும் ,

    புஷ்கரிணீம் -தாமரை மலர்கள் நிரம்பிய தடாகத்தில் வசிப்பவளும் ,

    புஷ்டிம்-உணவூட்டி அனைவரையும் வளர்ப்பவளும் ,

    பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும் ,

    பத்ம மாலீநீம் -தாமரை மாலை அணிந்தவளும் ,

    சந்திராம் -நிலவைப் போன்றவளும் ,

    ஹிரண்மயீம் -பொன்மயமானவளுமான ,

    லக்ஷ்மீம் -மகா லக்ஷ்மியை ,

    மே -என்னிடம் ,

    ஆவஹ -எழுந்தருளச் செய்ய வேண்டும்.

    அக்னியே !

    கருணை நிரம்பிய மனதை உடையவளும் ,தாமரை மலரில் உறைபவளும் ,உலகை ஊட்டி வளர்ப்பவளும்,

    குங்குமத்தின் நிறத்தை உடையவளும் ,தாமை மாலை அணிபவளும் ,பொன் மயமானவளுமான திருமகளை ,

    என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .

    ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |
    சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||..14

    ஜாத வேத -அக்னியே !,

    ய-யார் ,

    ஆர்த்ராம் -கருனைநிரம்பிய மனத்தவளும் ,

    கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரமானவளும் ,

    யஷ்டீம் -தருமத்தை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும் ,

    சுவர்ணாம் -உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும் ,

    ஹேம மாலீனினீம் -பொன் மாலை அணிந்தவளும் ,

    சூர்யாம் -பகலவன் போல் பிரகாசிக்கின்றவளும் ,

    ஹிரண்மயீம் -பொன் மயமானவளும் ,

    ஆன ,

    லக்ஷ்மீம் -மகாலக்ஷ்மீயை ,

    மே -என்னிடம்,

    ஆவஹ -எழுந்து அருளச் செய்ய வேண்டும்.

    அக்னியே !

    கருணை நிரம்பியவளும் ,செயல் திறத்தில் கம்பீரமானவளும் ,நீதியை நிலை நிறுத்த செங்கோல்

    ஏந்தியவளும் ,அழகிய நிறத்தை உடையவளும் ,பகலவன் போல் பிரகாசிப்பவளும் ,பொன் மயமான

    லக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .

    தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |
    யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||..14.

    ஜாத வேத -அக்னியே !,

    யஸ்யாம் -யாரால் ,

    பிரபூதம் -அளவிட முடியா ,

    ஹிரண்யம் -பொன்னும் ,

    காவஹ -பசுக்களும் ,

    தாஸ்ய -பணிப் பெண்டிரும் ,

    அஸ்வான் -குதிரைகளும் ,

    புருஷான் -பணியாட்களும் ,

    அஹம் -நான் ,

    விந்தேயம்-பெறுவேனோ,

    தாம் -அந்த ,

    லக்ஷ்மீம் -திருமகளை ,

    மே அனபகாமீநீம் -என்னிடமிருந்து விலகாதிற்குமாறு ,

    ஆவஹ -செய்தருள வேண்டும் .

    அக்னி தேவனே !

    யாரால் அளவிட முடியாத பொன்னும் , பசுக்களும் ,பணிப் பெண்டிரும் ,குதிரைகளும் மற்றும்

    பணியாட்களையும் நான் பெறுவேனோ ,அந்த திருமகள் ,என்னை விட்டு விலகாதிருக்க அருள வேண்டும் .

    ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||

    மஹா லக்ஷ்மியை அறிந்து கொள்வோம் ,

    திருமாலின் துணைவியாம் அவளை த்யாநிப்போம் ,

    அந்தத் திருமகள் நம்மைத் தூண்டுவாளாக .

    ய சுசி ..
    ..
    இதனின்று பலஸ்ருதி ,

    ஆகவே பொருள் இங்கு தரப்படவில்லை.

    ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
    தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |

    யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||
    அஶ்வபூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் |
    ஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயே ஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் ||

    காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |
    பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||

    சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |
    தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||

    ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |
    தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ ||

    உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |
    ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||

    க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |
    அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||

    கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |
    ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||

    மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |
    பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||

    கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |
    ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||

    ஆபஃ’ ஸ்றுஜம்து’ ஸ்னிக்தானி சிக்லீத வ’ஸ மே க்றுஹே |
    னி ச’ தேவீம் மாதரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||

    ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |
    ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

    ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |
    சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

    தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |
    யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||

    ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||

    ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” | தான்யம் தனம் பஶும் பஹுபு’த்ரலாபம் ஶதஸம்”வத்ஸரம் தீர்கமாயுஃ’ ||

    ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

    Enhanced by Zemanta