பித்ருக்களே !மிகவும் நல்லவர்களா நீங்கள் ,எங்களுக்கு சந்ததியையும் ,செல்வத்தையும் , நீண்ட ஆயுளையும் ஆசிர்வத்த்தளிதுக்கொண்டு ,கம்பீரமாகச் சிறந்த ஆகாச மார்க்கத்தில் இங்கு எழுந்தருளுங்கள் .
இந்த கூர்ச்சத்தில் இரண்டு வம்ச பித்ருக்களை ஆவாகனம் செய்கின்றேன் .
ஆசனம் ,- இருக்கை.
Tharppanam Image credit Agastiyar,org.
தரப்பையே !நீ , ஒரு போது என்னால் சேகரிக்கப் பட்டாய்.
உன்னைப் பித்ருக்க்ளுக்காகப் பரப்புகிறேன்.
நீ அவர்களுக்குப் பஞ்சு போல் மித மிருதுவான ஆசனமாக இரு.
அருள் சுரக்கும் எண்கள் பித்ரு ,பிதாமஹ ப்ரபிதாமஹர்கள் தங்களுடைய பரிவாரங்களுடன் இங்கு
எழுந்தருளட்டும் .
( இரண்டு வம்ச பித்ருக்களுக்கும் இது ஆசனம் .
அவர்களை எல்லா வித உபசாரங்களுடன் பூஜிக்கின்றேன் .)
தர்ப்பணம் .
சோம யாகம் செய்த சிறந்த பித்ருக்களைப் போலவே , நடுத்தரத்தினரும் கடைப்ப்பட்டவரும் கூட உஅயிர்ந்த கதியை அடையட்டும் .
நம்மிடம் கோபமற்றவர்களாய் அவர்கள் நாம் செய்யும் நற் கர்மாவை உணர்ந்து ,நமது பிராணனை ரக்க்ஷித்து ,நாம் அழைக்கும்போது வந்து , நம்மைக் காத்தருளவேண்டும்.
அங்கீரசர் ,அதர்வணர் ,பிருஹுக்கள் என்று பெயருள்ள நமது பித்ருக்கள் புதிது புதிதான வகையில் அருள் புரிபவர்கள் .
சோம யாகம் செய்தவர்கள் .
பூஜித்தர்க்குரிய அவர்களுடய எந்த சிறந்த வழியில் சென்றதோ , அதையே நாமும் பின் பற்றி ,மங்களகரமான நல்ல மனது உடையவர்கள் ஆவோம் .
இன்ன கோத்திரத்தினரும் …தர்ப்பணம் செய்கின்றேன்.
அக்னிச்வாத்தர்கள் என்பவர்களும் ,சோம யாகம் செய்தவர்களுமான நமது பித்ருக்கள் தேவ மார்க்கமாக இந்து எழுந்தருளட்டும் .
இங்கு நாம் செய்யும் ஆராதனையில் சந்தோஷமடயட்டும் .
நம்மைக் காப்பாற்றட்டும் .
இன்ன ……… .
பிதா மகர்
ஜலங்களே ,எல்லாவற்றிலும் உள்ள சாரத்தை நீங்கள் உங்களிடம் கொண்டிருகிறீர்கள் .
ஆகையால் அம்ரிதமாகவும் ,நெய்யாகவும் , பாலாகவும் ,மதுவாகவும் பானகமாகவும் பரிணமித்து (எது வேண்டுமோ ,அதுவாய் நின்று நீங்கள் ) எங்கள் பித்ருக்களை திருப்தி செய்வீர்களாக .
இன்ன கோத்திர ‘.. எனது பிதா மகரை நமஸ்கரித்து ..தர்ப்பணம் செய்கிறேன்
ஸ்வதா என்னும் சொல்லால் திருப்தி அடையும் பித்ருக்களுக்கு ஸ்வதா எனக்கூறி நமஸ்கரிக்கின்றேன் .
ஸ்வதா என்னும் சொல்லால் திருப்தி அடையும் பித்த மகர்களுக்கும் ,ப்ரபிதா மகர்களுக்கும் ஸ்வதா எனக்கூறி நமஸ்கரிக்கின்றேன் .
இன்ன ……
எந்த பித்ருக்கள் இவ்வுலகில் இருக்கின்ரார்களோ , எவர்கள் இங்கு இல்லையோ , இவர்களை நாங்கள் அறிவோமோ ,இவர்களை அறிய
மாட்டோமோ , அவர்களை எல்லாம் அக்னி பகவானே, நீர் அனைத்தையும் அறியும் ஜாதவேதஸ் ஆதல்லல் அறிவீர் .அவர்களுக்குரிய
இதை அவகளிடம் சேர்த்து அருள்வீர் .
அதனால் அவர்கள் சந்தோஷமடயட்டும் .
இன்ன ……
ப்ரபிதா மகர்.
.
காற்று இனிமையாக வீசட்டும் .
நதிகள் இனிமையைப் பெருக்கிக் கொண்டு ஓடட்டும் .
செடி கொடிகள் இனிமை அளிப்பவையாக இருக்கட்டும் .
இன்ன …….ப்ரபிதா மகரை நமஸ்கரிக்கின்றேன்.
இரவும் காலையும் இனிமையாக இருக்கட்டும் .
பூமியின் புழுதியும் இன்பந் தருவதாய் இருக்கட்டும்..
இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும்,ஆதித்ய ரூபிணியும் ஆகிய எனது ப்ரபிதா மகியை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன் .(மூன்று முறை)
தாய் வழித் தாத்தா,கொள்ளுத் தாத்தா பாட்டி கொள்ளுப்பாட்டி வகை .
இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும் வசு ரூபியும் ஆகிய எங்கள் மாதா மகருக்கு தர்ப்பணம்
செய்கின்றேன்..( மூன்று தடவை )
ருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் பிதா மகருக்கு தர்ப்பணம் .( மூன்று தடவை )
ஆதித்ய ரூபியாகிய எங்கள் தாயின் ப்ரபிதா மகருக்குத் தர்ப்பணம் ..( மூன்று தடவை )
வசு ரூபியாகிய எண்கள் மாதா மகிக்கு தர்ப்பணம் ( மூன்று தடவை ).
ருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் பிதா மகிக்குத் தர்ப்பணம் .( மூன்று தடவை ).
ருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் ப்ரபிதா மகிக்குத் தர்ப்பணம் .( மூன்று தடவை ).
அன்னரசமாகவும் அம்ருதமாகவும் ,நெய்யாகவும்,பாலாகவும், தேனாகவும் பானகம் ஆகவும் பரிணமித்து , எது வேண்டுமோ அதுவாய் நின்று நநீங்கள் எனது பித்ருக்களைத் திருப்தி செய்வீர்களாக !
பித்ருக்களே,
திருப்தி அடையுங்கள்.
திருப்தி அடையுங்கள்.
திருப்தி அடையுங்கள். .
பூணூல் வலம்.
தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் அவ்வாறே மகா யோகிகளுக்கும் நமஸ்காரம் .
ஸ்வதா என்னும் பெயர் கொண்டு விளங்கும் பர தேவதைக்கு எப்போதும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம் .
( மூன்று முறை )
அபிவாதனம் , நமஸ்காரம் .
பூணல் இடம்.
பித்ருக்களே !
மிகவும் நல்லவர்களான நீங்கள் எங்களுக்கு சந்ததியையும்,செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் ஆசிர்வத்திது அளித்துக்கொண்டு கம்பிரமாக சிறந்த ஆகாய மார்க்க்கத்தில் எழுந்து அருளுங்கள் .
இந்த கூர்ச்சத்தில் இருந்து இரண்டு வர்க்க பித்ருக்களையும் அவரவர்களுடைய இருப்பிடங்களுக்கு எழுந்து அருளப் பிரார்த்திக்கிறேன் .
பவித்ரத்தை வலது காதில் வைத்துக்கொண்டு ,உபவீதியாக ,ஆசமனம் செய்து , பவித்ரத்தை போட்டுக் கொண்டு பூணூலை இடமாக்கவும் .
எவர்களுக்கு தாயோ தந்தையோ ச்நேகிதரோ தாயாதிகளோ பந்துக்களோ இல்லையோ அவர்களெல்லாம் நான் என் தரப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தி அடையட்டும் .
கூர்ச்சததைப் பிரித்து நுனி வழியாக தர்ப்பணம் செய்யவும் .
பவித்ரம் பிரிக்கவும் .
பூணூல் வலம் .
ஆசமனம்.
பின்பு பிரம்ம யக்யம் செய்க.
பத்னிகளுடன் கூடிய மாதமஹர் ,மாதாவின் பிதாமஹர் ,மாதாவின ப்ரபிதமஹர் ஆகியோருக்கும்,இரண்டு வம்ச பித்ருக்களுக்கும் ,அழிவில்லாத திருப்தி ஏற்படும் பொருட்டு ,அமாவசை புண்ணிய காலத்தில் தில தர்ப்பணம் செய்கிறேன்.
இதன் பின்னர் பொருத்தமான இடத்தில் பெயர் மற்றும் கோத்திரம் சொல்லவும்.
பிரம்மா , மன்வந்தரம்,யுகம் பற்றி அறிய எனது மற்ற பதிவுகளை காண்க.
பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.
பூணல் இடம்: தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஸம்ப்ரதாயப்படி போட்டு ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும் ..
மற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………
(அம்மா ஆத்து கோத்ரம்)………….ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு
ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. என்று “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்.
.
ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ்
ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி
ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று
தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.
வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில்
போடவும்
. இட து காலை முட்டி போட்டு கொன்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.
1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ்தேனோ வந்து
Karomi Yath Thath Sarvam Sriman Narayanethi Samarppayami’
.
என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.
ஶ்ரீவத்ஸ ஸோம தேவ ஸர்மா அமாவாசை தர்ப்பண விளக்கம் புத்தகம் 1956 ல் வெளி யிட பட்ட து
You must be logged in to post a comment.