Tag: ஹிந்து மதம்

  • தமிழ் நாடு 216 சிவ ஸ்தலங்கள் விலாசம் போன்

    போன் நம்பர்களை சரி பார்த்துக் கொள்ளவும்.

    மாறுதல் இருப்பின் தெரியப் படுத்தவும் .

    எண் – கோயில் – இருப்பிடம் – போன்
    சென்னை மாவட்டம்
    01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் – பாடி – 044 – 2654 0706.
    02. மாசிலாமணீஸ்வரர் – வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., – 044 – 2637 6151.
    03. கபாலீஸ்வரர் – மயிலாப்பூர் – 044 – 2464 1670.
    04. மருந்தீஸ்வரர் – திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை – 044 – 2441 0477.

    காஞ்சிபுரம் மாவட்டம்
    05. ஏகாம்பரநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., – 044 – 2722 2084.
    06. திருமேற்றளீஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., – 98653 55572, 99945 85006.
    07. ஓணகாந்தேஸ்வரர் – ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை – 98944 43108.
    08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., – 044-2722 2084.
    09. சத்யநாதர் – காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., – 044 – 2723 2327, 2722 1664.
    10. திருமாகறலீஸ்வரர் – திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. – 94435 96619.
    11. தெய்வநாயகேஸ்வரர் – எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., – 044 – 2769 2412, 94448 65714.
    12. வேதபுரீஸ்வரர் – திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ – 044-2627 2430, 2627 2487.
    13. கச்சபேஸ்வரர் – திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., – 044 – 2746 4325, 93811 86389.
    14. ஞானபுரீஸ்வரர் – திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ., – 044 – 2742 0485, 94445 23890.
    15. வேதகிரீஸ்வரர் – திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ., – 044 – 2744 7139, 94428 11149.
    16. ஆட்சிபுரீஸ்வரர் – அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்) – 044 – 2752 3019, 98423 09534.

    திருவள்ளூர் மாவட்டம்
    17. திரிபுராந்தகர் – கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ., – 94432 53325.
    18. வடாரண்யேஸ்வரர் – திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.
    19. வாசீஸ்வரர் – திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ., – 98944 86890.
    20. ஊன்றீஸ்வரர் – பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ., – 044 – 2763 9725,
    21. சிவாநந்தீஸ்வரர் – திருக்கண்டலம். சென்னை – பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ., – 044 – 2762 9144, 99412 22814.
    22. ஆதிபுரீஸ்வரர் – திருவொற்றியூர். – 044 – 2573 3703.

    வேலூர் மாவட்டம்
    23. வில்வநாதேஸ்வரர் – திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ., – 0416-223 6088.
    24. மணிகண்டீஸ்வரர் – திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ., – 04177 – 248 220, 93454 49339.
    25. ஜலநாதீஸ்வரர் – தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ., – 04177 – 246 427.

    திருவண்ணாமலை மாவட்டம்
    26. அண்ணாமலையார் – திருவண்ணாமலை. – 04175 – 252 438.
    27. வாலீஸ்வரர் – குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ., – 99432 95467.
    28. வேதபுரீஸ்வரர் – செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., – 04182 – 224 387.
    29. – தாளபுரீஸ்வரர் – திருப்பனங்காடு.காஞ்சிபுரத்தில் இருந்து 16 கி.மீ., – 044 – 2431 2807, 98435 68742.

    கடலூர் மாவட்டம்
    30. திருமூலநாதர் – சிதம்பரம். (நடராஜர் கோயில்) – 94439 86996.
    31. பாசுபதேஸ்வரர் – திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம். – 98420 08291, 98433 88552.
    32. உச்சிநாதர் – சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ., – 98426 24580.
    33. பால்வண்ணநாதர் – திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ., – 98426 24580.
    34. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் – ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ. – 04144 – 264 845.
    35. பதஞ்சலீஸ்வரர் – கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., – 04144 – 208 508, 93457 78863.
    36. சவுந்தர்யேஸ்வரர் – திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ., – 94425 71039, 94439 06219.
    37. அமிர்தகடேஸ்வரர் – மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., – 93456 56982.
    38. தீர்த்தபுரீஸ்வரர் – திருவட்டத்துறை.விருத்தாசலத்தில் இருந்து 22கி.மீ., – 04143 – 246 467.
    39. பிரளயகாலேஸ்வரர் – பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ., – 04143 – 222 788, 98425 64768.
    40. நர்த்தன வல்லபேஸ்வரர் – திருக்கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக 20 கி.மீ., – 04144 – 208 704.
    41. திருக்குமாரசாமி – ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) – ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ., – 04143 – 243 533, 93606 37784.
    42. சிவக்கொழுந்தீஸ்வரர் – தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ. – 94434 34024.
    43. மங்களபுரீஸ்வரர் – திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டி<ல் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ., – 94425 85845.
    44. வீரட்டானேஸ்வரர் – திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை – 98419 62089.
    45. விருத்தகிரீஸ்வரர் – விருத்தாச்சலம். சென்னை – மதுரை ரோட்டில் உளுந்தூர் பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ., – 04143 – 230 203.
    46. சிஷ்டகுருநாதேஸ்வரர் – திருத்தளூர். கடலூரில் இருந்து பண்ருட்டி வழியாக 32 கி.மீ., – 04142 – 248 498, 94448 07393.
    47. வாமனபுரீஸ்வரர் – திருமாணிக்குழி. கடலூரிலிருந்து பாலூர் வழியாக 15 கி.மீ., – 04142 – 224 328.
    48. பாடலீஸ்வரர் – திருப்பாதிரிபுலியூர். கடலூர் நகருக்குள், – 04142 – 236 728.

    விழுப்புரம் மாவட்டம்
    49. பக்தஜனேஸ்வரர் – திருநாவலூர். பண்ருட்டி-உளுந்தூர் பேட்டை வழியில் 12 கி.மீ., – 94861 50804, 04149 – 224 391.
    50. சொர்ணகடேஸ்வரர் – நெய்வணை. உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கி.மீ., – 04149 – 291 786, 94862 82952.
    51. வீரட்டேஸ்வரர் – கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்) விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., – 93456 60711.
    52. அதுல்யநாதேஸ்வரர் – அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ., – 99651 44849.
    53. மருந்தீசர் – டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., – 04146 – 216 045, 94424 23919.
    54. கிருபாபுரீஸ்வரர் – திருவெண்ணெய்நல்லூர். விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ., – 93456 60711.
    55. சிவலோகநாதர் – கிராமம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வழி 14 கி.மீ. – 04146 – 206 700.
    56. பனங்காட்டீஸ்வரர் – பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., – 99420 56781.
    57. அபிராமேஸ்வரர் – திருவாமத்தூர். விழுப்புரம் -செஞ்சி ரோட்டில் 6 கி.மீ., – 04146 – 223 379, 98430 66252.
    58. சந்திரமவுலீஸ்வரர் – திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ., – 0413 – 268 8949.
    59. அரசலீஸ்வரர் – ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி- திண்டிவனம்- வழியில் 13 கி.மீ., 04147 – 235 472.
    60. மகாகாளேஸ்வரர் – இரும்பை. புதுச்சேரி – திண்டிவனம் வழியில் 12 கி.மீ., – 0413 – 268 8943, 98435 26601.

    நாமக்கல் மாவட்டம்
    61. அர்த்தநாரீஸ்வரர் – திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., – 04288 – 255 925, 93642 29181.

    ஈரோடு மாவட்டம்
    62. சங்கமேஸ்வரர் – பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., – 04256 – 230 192, 98432 48588.
    63. மகுடேஸ்வரர், – கொடுமுடி,ஈரோடு – கரூர் ரோட்டில் 47 கி.மீ., – 04204 – 222 375.

    திருப்பூர் மாவட்டம்
    64. அவிநாசி ஈஸ்வரர் – அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ., – 04296 – 273 113, 94431 39503.
    65. திருமுருகநாதர் – திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை ரோட்டில் 8 கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ., – 04296 – 273 507.

    திருச்சி மாவட்டம்
    66. சத்தியவாகீஸ்வரர் – அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ., – 0431 – 254 4927.
    67. ஆம்ரவனேஸ்வரர் – மாந்துறை. திருச்சியிலிருந்து லால்குடி வழி 15 கி.மீ., – 99427 40062, 94866 40260.
    68. ஆதிமூலேஸ்வரர் – திருப்பாற்றுறை.திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழி கல்லணைரோட்டில் 13 கி.மீ. – 0431 – 246 0455.
    69. ஜம்புகேஸ்வரர் – திருவானைக்காவல். திருச்சியில் இருந்து 8 கி.மீ., – 0431 – 223 0257.
    70. ஞீலிவனேஸ்வரர் – திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 23 கி.மீ., – 0431 – 256 0813.
    71. மாற்றுரைவரதர் – திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ., – 94436 – 92138.
    72. மரகதாசலேஸ்வரர் – ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., – 04326 – 262 744, 94439 50031.
    73. பராய்த்துறைநாதர் – திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர் ரோட்டில்15 கி.மீ. – 99408 43571.
    74. உஜ்ஜீவநாதர் – உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி – வயலூர் வழியில் 7 கி.மீ., – 94431 50332, 94436 50493.
    75. பஞ்சவர்ணேஸ்வரர் – உறையூர்.திருச்சி கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில் – 0431 – 276 8546, 94439 19091.
    76. தாயுமானவர் – திருச்சி. மலைக்கோட்டை – 0431 – 270 4621, 271 0484.
    77. எறும்பீஸ்வரர் – திருவெறும்பூர்.திருச்சி- தஞ்சாவூர் ரோட்டில் 10 கி.மீ. – 98429 57568.
    78. திருநெடுங்களநாதர் – திருநெடுங்குளம். திருச்சி-துவாக்குடியிலிருந்து 3 கி.மீ. – 0431 – 252 0126.

    அரியலூர் மாவட்டம்
    79. வைத்தியநாதசுவாமி – திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ., – 04329 -292 890, 97862 05278.
    80. ஆலந்துறையார் – கீழப்பழுவூர். அரியலூர்- தஞ்சாவூர் வழியில் 12 கி.மீ. – 99438 82368.

    கரூர் மாவட்டம்
    81. ரத்தினகிரீஸ்வரர் – அய்யர் மலை. கரூரில் இருந்து குளித்தலை வழியாக 40 கி.மீ., – 04323 – 245 522.
    82. கடம்பவனேஸ்வரர் – குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ., – 04323 – 225 228
    83. கல்யாண விகிர்தீஸ்வரர் – வெஞ்சமாங்கூடலூர்.கரூரிலிருந்துஆறுரோடு பிரிவு வழியாக 21 கி.மீ., – 04324 – 262 010, 99435 27792.
    84. பசுபதீஸ்வரர் – கரூர் – 04324 – 262 010.

    புதுக்கோட்டை மாவட்டம்
    85. விருத்தபுரீஸ்வரர் – அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ., – 04371 – 239 212

    தஞ்சாவூர் மாவட்டம்
    86. பசுபதீஸ்வரர் – பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை ரோட்டில் 30 கி.மீ., – 98657 78045. 0435 – 2450 595.
    87. அக்னீஸ்வரர் – கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை – 0435 – 247 3737.
    88. கோடீஸ்வரர் – திருக்கோடிக்காவல்.கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ., – 94866 70043.
    89. பிராணநாதேஸ்வரர் – திருமங்கலக்குடி. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்) – 0435 – 247 0480.
    90. அருணஜடேஸ்வரர் – திருப்பனந்தாள். கும்பகோணம்- சென்னை ரோட்டில் 15 கி.மீ., – 94431 16322, 0435 – 245 6047.
    91. பாலுகந்தநாதர் – திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை வழியில் 18 கி.மீ., – 94421 67104.
    92. சத்தியகிரீஸ்வரர் – சேங்கனூர். கும்பகோணம்-சென்னை ரோட்டில் 16 கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்) – 93459 82373, 0435 – 2457 459.
    93. யோகநந்தீஸ்வரர் – திருவிசநல்லூர். கும்பகோணம்- சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,. – 0435 – 200 0679, 94447 47142.
    94. கற்கடேஸ்வரர் – திருந்துதேவன்குடி. கும்பகோணம் – சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ., – 99940 15871, 0435 – 200 0240.
    95. கோடீஸ்வரர் – கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 5 கி.மீ., – 0435 – 245 4421.
    96. எழுத்தறிநாதர் – இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ., – 96558 64958, 0435 – 200 0157.
    97. சாட்சி நாதேஸ்வரர் – திருப்புறம்பியம்.கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. (இன்னம்பூர் அருகில்) – 94446 26632, 0435 – 245 9519.
    98. விஜயநாதேஸ்வரர் – திருவிஜயமங்கை. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ., (திருவைகாவூர் அருகில்) – 0435 – 294 1912, 94435 86453.
    99. வில்வ வனேஸ்வரர் – திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 17 கி.மீ., – 94435 86453, 96552 61510.
    100. தயாநிதீஸ்வரர் – வடகுரங்காடுதுறை. கும்பகோணம் – திருவையாறு ரோட்டில் 20 கி.மீ. – 04374 – 240 491, 244 191.
    101. ஆபத்சகாயர் – திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில் – 04362 – 326 668.
    102. ஐயாறப்பர் – திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., – 0436 – 2260 332.
    103. நெய்யாடியப்பர் – தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ., – 04362 – 260 553.
    104. வியாக்ரபுரீஸ்வரர் – திருப்பெரும்புலியூர். திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ. – 94434 47826, 94427 29856.
    105. செம்மேனிநாதர் – திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை). திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியே 30 கி.மீ., – 04362 – 320 067, 93450 09344.
    106. அக்னீஸ்வரர் – திருக்காட்டுப்பள்ளி.திருவையாறிலிருந்து 25 கி.மீ., – 94423 47433.
    107. ஆத்மநாதேஸ்வரர் – திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., – 04365 – 284 573.
    108. புஷ்பவனேஸ்வரர் – தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ., – 94865 76529.
    109. பிரம்மசிரகண்டீசுவரர் – கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., – 04362 – 261 100, 262 222.
    110. சோற்றுத்துறை நாதர் – தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ., – 99438 84377.
    111. வேதபுரீஸ்வரர் – திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ., – 93451 04187, 04362 – 262 334.
    112. பசுபதீஸ்வரர் – பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., – 97914 82102.
    113. வசிஷ்டேஸ்வரர் – தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ., – 04362 – 252 858.
    114. கரவாகேஸ்வரர் – கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் – கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,
    115. முல்லைவனநாதர் – திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ., – 04374 – 273 502, 273 423.
    116. பாலைவனேஸ்வரர் – பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ., – 94435 24410.
    117. கல்யாண சுந்தரேஸ்வரர் – நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ., – 93631 41676.
    118. பசுபதீஸ்வரர் – ஆவூர் (கோவந்தகுடி).கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ., – 94863 03484.
    119. சிவக்கொழுந்தீசர் – திருச்சத்திமுற்றம். பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ., – 94436 78575, 04374 – 267 237.
    120. பட்டீஸ்வரர் – பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ., – 0435 – 241 6976.
    121. சோமநாதர் – கீழபழையாறை வடதளி.கும்பகோணம் – ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில் – 98945 69543.
    122. திருவலஞ்சுழிநாதர் – திருவலஞ்சுழி.சுவாமிமலையில் இருந்து 1கி.மீ., – 0435 – 245 4421, 245 4026.
    123. கும்பேஸ்வரர் – கும்பகோணம். – 0435 – 242 0276.
    124. நாகேஸ்வரர் – கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே – 0435 – 243 0386.
    125. சோமேஸ்வரர் – கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை – 0435 – 243 0349.
    126. நாகநாதர் – திருநாகேஸ்வரம். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., – 94434 89839, 0435 – 246 3354,
    127. மகாலிங்க சுவாமி – திருவிடைமருதூர். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ., 0435 – 246 0660.
    128. ஆபத்சகாயேஸ்வரர் – ஆடுதுறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 14 கி.மீ., – 94434 63119, 94424 25809.
    129. நீலகண்டேஸ்வரர் – திருநீலக்குடி. கும்பகோணம் – காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ., – 94428 61634. 0435 – 246 0660.
    130. கோழம்பநாதர் – திருக்குளம்பியம். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ., – 04364 – 232 055, 232 005.
    131. சிவானந்தேஸ்வரர் – திருப்பந்துறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ., – 94436 50826, 0435 – 244 8138.
    132. சித்தநாதேஸ்வரர் – திருநறையூர் (நாச்சியார்கோவில்).கும்பகோணம்- திருவாரூர் ரோட்டில் 10 கி.மீ., – 0435 – 246 7343, 246 7219.
    133. படிக்காசுநாதர் – அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., – 99431 78294, 0435 – 246 6939.
    134. அமிர்தகடேஸ்வரர் – சாக்கோட்டை. கும்பகோணம்-மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., – 98653 06840, 0435 – 241 4453.
    135. சிவகுருநாதசுவாமி – சிவபுரம். கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ., – 98653 06840.
    136. சற்குணலிங்கேஸ்வரர் – கருக்குடி (மருதாநல்லூர்).கும்பகோணம் – மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., – 99435 23852
    137. சாரபரமேஸ்வரர் – திருச்சேறை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ.,
    138. ஞானபரமேஸ்வரர் – திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்). கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ., – 94439 59839.
    139. ஆபத்சகாயேஸ்வரர் – ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்) மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ., – 04374 – 269 407.
    140. பாஸ்கரேஸ்வரர் – பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ. (உளூர் அருகில்) – 0437 – 256 910.

    திருவாரூர் மாவட்டம்
    141. தியாகராஜர் – திருவாரூர். – 04366 – 242 343.
    142. அசலேஸ்வரர் – திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் – 04366 – 242 343.
    143. தூவாய் நாதர் – திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி – 99425 40479, 04366 – 240 646.
    144. பதஞ்சலி மனோகரர் – விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., – 98947 81778, 94894 79896.
    145. கரவீரநாதர் – கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பஸ் ஸ்டாப் – 04366 – 241 978.
    146. வீரட்டானேஸ்வரர் – திருவிற்குடி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில். – 94439 21146.
    147. வர்த்தமானீஸ்வரர் – திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., – 94431 13025, 04366 – 292 300.
    148. ராமநாதசுவாமி – திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) – 94431 13025, 04366 – 292 300.
    149. கணபதீஸ்வரர் – திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில் இருந்து 29 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) – 94431 13025, 04366 – 270 278.
    150. கேடிலியப்பர் – கீழ்வேளூர். திருவாரூர்- நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ. – 04366 – 276 733.
    151. தேவபுரீஸ்வரர் – தேவூர். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழியில் 18 கி.மீ., – 94862 78810, 04366 – 276 113.
    152. திருநேத்திரநாதர் – திருப்பள்ளி முக்கூடல். திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ., – 98658 44677, 04366 – 244 714.
    153. பசுபதீஸ்வரர் – திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில் இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ., – 04366 – 228 033.
    154. சவுந்தரேஸ்வரர் – திருப்பனையூர். திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ., – 04366 – 237 007.
    155. ஐராவதீஸ்வரர் – திருக்கொட்டாரம். கும்பகோணம் (நெடுங்காடு வழி) – காரைக்கால் ரோட்டிலுள்ள வேளங்குடி. – 04368 – 261 447.
    156. பிரம்மபுரீஸ்வரர் – அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ., – 04366 – 238 973.
    157. மகாகாளநாதர் – திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால் ரோடு. – 94427 66818, 04366 – 291 457.
    158. மேகநாதசுவாமி – திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., – 94448 36526, 04366 – 239 170.
    159. சகல புவனேஸ்வரர் – திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., – 94448 36526, 04366 – 239 170.
    160. முக்தீஸ்வரர் – செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ., – 04366 – 238 818, 239 700, 94427 14055.
    161. வெண்ணிகரும்பேஸ்வரர் – கோயில்வெண்ணி.திருவாரூரிலிருந்து 26 கி.மீ., – 98422 94416.
    162. சேஷபுரீஸ்வரர் – திருப்பாம்புரம்.கும்பகோணம்-காரைக்கால் வழியில் 20 கி.மீ. தூரத்திலுள்ள கற்கத்தியில் இருந்து 3 கி.மீ. – 94439 43665, 0435 – 246 9555.
    163. சூஷ்மபுரீஸ்வரர் – செருகுடி.கும்பகோணம்-காரைக்கால்இருந்து 3 கி.மீ. (பூந்தோட்டம் வழி) கடகம்பாடியில் இருந்து 3 கி. மீ. – 04366 – 291 646.
    164. அபிமுக்தீஸ்வரர் – மணக்கால் அய்யம்பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ.,
    165. நர்த்தனபுரீஸ்வரர் – திருத்தலையாலங்காடு. திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., – 94435 00235, 04366 – 269 235.
    166. கோணேஸ்வரர் – குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., – 94439 59839.
    167. சொர்ணபுரீஸ்வரர் – ஆண்டான்கோவில்.கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழி 13 கி.மீ., – 04374 – 265 130.
    168. பாதாளேஸ்வரர் – அரித்துவாரமங்கலம், கும்பகோணம் – அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ., – 94421 75441, 04374 – 264 586
    169. சாட்சிநாதர் – அவளிவணல்லூர்.கும்பகோணத்தில் இருந்து அம்மாப்பேட்டை வழியாக 26 கி.மீ., – 04374 – 275 441.
    170. வீழிநாதேஸ்வரர் – திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ., – 04366 – 273 050, 94439 24825148.
    171. சதுரங்க வல்லபநாதர் – பூவனூர்.திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி ரோட்டில். – 94423 99273. 172. நாகநாதர் – பாமணி.மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ., – 93606 85073.
    173. பாரிஜாதவனேஸ்வரர் – திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 21 கி.மீ., – 04367 – 279 374.
    174. பொன்வைத்த நாதர் – சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்) – 94427 67565.
    175. மந்திரபுரீஸ்வரர் – கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ., – 99420 39494, 04369 – 262 014.
    176. சற்குணநாதர் – இடும்பாவனம். திருத்துறைப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டியக்காடு வழி) – 04369 – 240 349.
    177. கற்பக நாதர் – கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி -புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) – 04369 – 240 632.
    178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) – தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., – 98658 44677.
    179. கொழுந்தீஸ்வரர் – கோட்டூர்.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., – 97861 51763, 04367 – 279 781.
    180. வண்டுறைநாதர் – திருவண்டுதுறை.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 11 கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில் – 04367 – 294 640.
    181. வில்வாரண்யேஸ்வரர் – திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் -கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் – 04366 – 262 239.
    182. ஜகதீஸ்வரர் – ஓகைப்பேரையூர்.திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி) – 04367 – 237 692.
    183. அக்னீஸ்வரர் – திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ., – 04369 – 237 454.
    184. நெல்லிவனநாதர் – திருநெல்லிக்காவல்.திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ., – 04369 – 237 507, 237 438.
    185. வெள்ளிமலைநாதர் – திருத்தங்கூர்.திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., – 94443 54461, 04369 – 237 454.
    186. கண்ணாயிரநாதர் – திருக்காரவாசல்.திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., – 94424 03391, 04366 – 247 824.
    187. நடுதறியப்பர் – கண்ணாப்பூர், திருவாரூர் – திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து 7 கி.மீ., – 94424 59978, 04365 – 204 144.
    188. கைச்சினநாதர் – கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., – 94865 33293
    189. ரத்தினபுரீஸ்வரர் – திருநாட்டியத்தான்குடி.திருவாரூர்- வடபாதிமங்கலம் ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி) – 94438 06496, 04367 – 237 707.
    190. அக்னிபுரீஸ்வரர் – வன்னியூர்(அன்னூர்). கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ., – 0435 – 244 9578
    191. சற்குணேஸ்வரர் – கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தூரத்திலுள்ள கூந்தலூர் – 94429 32942, 04366 – 273 900
    192. மதுவனேஸ்வரர் – நன்னிலம்.திருவாரூர்-மயிலாடுதுறை ரோட்டில் 16 கி.மீ., – 94426 82346, 99432 09771
    193. வாஞ்சிநாதேஸ்வரர் – ஸ்ரீவாஞ்சியம். கும்பகோணம்- நாகபட்டினம் வழியில் 27 கி.மீ. அச்சுதமங்கலம் ஸ்டாப் – 94424 03926, 04366 – 228 305
    194. மனத்துணைநாதர் – திருவலிவலம். திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்) – 04366 – 205 636
    195. கோளிலிநாதர் – திருக்குவளை. திருத்துறைபூண்டி – எட்டுக்குடி ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்) – 04366 – 245 412
    196. வாய்மூர்நாதர் – திருவாய்மூர்.திருவாரூர்- வேதாரண்யம் ரோட்டில் 25 கி.மீ., – 97862 44876

    நாகப்பட்டினம் மாவட்டம்
    197. சிவலோகத்தியாகர் – ஆச்சாள்புரம். சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ., – 04364 – 278 272.
    198. திருமேனியழகர் – மகேந்திரப்பள்ளி. சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ., – 04364 – 292 309.
    199. முல்லைவனநாதர் – திருமுல்லைவாசல். சீர்காழியிலிருந்து 12 கி.மீ., – 94865 24626.
    200. சுந்தரேஸ்வரர் – அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., – 93605 77673, 97879 29799.
    201. சாயாவனேஸ்வரர் – சாயாவனம். சீர்காழி- பூம்புகார் வழியில் 20 கி.மீ., – 04364 – 260 151
    202. பல்லவனேஸ்வரர் – பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ., – 94437 19193.
    203. சுவேதாரண்யேஸ்வரர் – திருவெண்காடு.சீர்காழி-பூம்புகார் வழியில் (புதன் ஸ்தலம்) 15 கி.மீ., – 04364 – 256 424
    204. ஆரண்யேஸ்வரர் – திருக்காட்டுப்பள்ளி. சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ., – 94439 85770, 04364 – 256 273.
    205. வெள்ளடைநாதர் – திருக்குருகாவூர். சீர்காழியில் இருந்து 5 கி.மீ., – 92456 12705.
    206. சட்டைநாதர் – சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ., – 04364 – 270 235.
    207. சப்தபுரீஸ்வரர் – திருக்கோலக்கா. சீர்காழியிலிருந்து 2 கி.மீ., – 04364 – 274 175.
    208. வைத்தியநாதர் – வைத்தீஸ்வரன்கோவில்.மயிலாடுதுறை -சீர்காழி வழியில் 18கி.மீ., – 04364 – 279 423.
    209. கண்ணாயிரமுடையார் – குறுமாணக்குடி. மயிலாடுதுறை- வைத்தீஸ்வரன் கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. – 94422 58085
    210. கடைமுடிநாதர் – கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., – 94427 79580, 04364 – 283 261,
    211. மகாலட்சுமிபுரீஸ்வரர் – திருநின்றியூர். மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., – 94861 41430.
    212. சிவலோகநாதர் – திருப்புன்கூர்.மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ., – 94867 17634.
    213. சோமநாதர் – நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., – 99436 68084, 04364 – 250 424,
    214. ஆபத்சகாயேஸ்வரர் – பொன்னூர். மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., – 04364 250 758.
    215. கல்யாண சுந்தரேஸ்வரர் – திருவேள்விக்குடி. மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ., – 04364 – 235 462.
    216. ஐராவதேஸ்வரர் – மேலத்திருமணஞ்சேரி

  • சந்தியா வந்தனம்உத்தர பாகம் நிறைவு அர்த்தம்

     

    முதல் பாகத்தின் இணைப்பை இறுதியில் காண்க .

     

    கணபதி த்யானம் .

     

    எங்கும் நிறைந்தவரும் எனினும் பக்தருக்கு உகந்த வடிவம் எடுப்பவரும்,வெண்மையான ஆடை உடுத்தவரும் ,நிலவு போன்ற  ஒளி உள்ளவரும் ,நான்கு கைகள் உள்ளவரும் ,ஆனந்தம் பொங்கும் முகமண்டலத்தை உடையவரும் ஆகிய கணபதியை ,எல்லா இடையூறுகளும் விலகுவதற்காக த்யானம் செய்ய வேண்டும்.

     

    மூச்சின் ஆட்சி .

     

    ஓங்காரமே பூலோகம் ,
    ஓங்காரமே புவ லோகம் ,
    ஓங்காரமே ஸுவர் லோகம் ,
    ஓங்காரமே மகர் லோகம் ,
    ஓங்காரமே ஜன லோகம் ,
    ஓங்காரமே தபோ லோகம் ,
    ஓங்காரமே சத்திய லோகம் ,

     

    ஓங்காரப் எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ ,அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதி ஸ்வரூபத்தை தியானிப்போம் .
    ஓங்காரமே ஜலமும் ஒளியும் ,
    ஓங்காரமே ரசம் பொருந்திய அன்னத்தை அளிக்கும் பூமியும் ,
    அதுவே உயிருக்கு ஆதாரமான வாயுவும் ,
    எங்கும் பரந்த ஆகாசமும் ,
    பூ:புவ:சுவ: என்ற வ்யாஹ்ரிதிகள் குறிப்பிடும் மனம் ,புத்தி அகங்காரம் என்ற தத்துவங்களும் ஓங்காரமே.

     

    தெளிந்த தீர்மானம் .

     

    என்னால் அடையப்பட்ட எல்லாப் பாவங்களையும் நசிக்கச் செய்வதின் மூலம் , பகவானின் அருளுக்குப் பாத்திரமாகும் பொருட்டு ,காலையில் ,நடுப்பகலில் ,மாலையில் காயத்ரி மகா மந்திர ஜபம் ஆரம்பிக்கிறேன்.

     

    பிரணவ ந்யாசம்.

    ஒங்காரதிற்கு பிரம்மா ரிஷி ,

    தேவி காயத்ரி சந்தம் ,

    பரமாத்மா தேவதை .

    பூ முதலிய ஏழு வ்யாஹ்ரிதிகளுக்கும் முறையே அத்ரி , பிருகு குத்சர் ,வசிஷ்டர் , கௌதமர் காஸ்யபர் ,ஆங்கிரசர் ரிஷிகள்.

    காயத்ரி ,அனுஷ்டுப் ,ப்ருஹதி ,பங்க்தி ,த்ருஷ்டுப் ,ஜகதி என்பவை சந்தங்கள் .

    அக்னி ,வாயு ,சூரியன்,பிருகஸ்பதி ,வருணன் ,இந்திரன் விச்வேதேவர்கள் முறையே தேவதைகள் .

    ப்ராணாயாமம்

    ஓங்காரமே பூலோகம் ,
    ஓங்காரமே புவ லோகம் ,
    ஓங்காரமே ஸுவர் லோகம் ,
    ஓங்காரமே மகர் லோகம் ,
    ஓங்காரமே ஜன லோகம் ,
    ஓங்காரமே தபோ லோகம் ,
    ஓங்காரமே சத்திய லோகம் ,

    ஓங்காரப் எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ ,அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதி ஸ்வரூபத்தை தியானிப்போம் .
    ஓங்காரமே ஜலமும் ஒளியும் ,
    ஓங்காரமே ரசம் பொருந்திய அன்னத்தை அளிக்கும் பூமியும் ,
    அதுவே உயிருக்கு ஆதாரமான வாயுவும் ,
    எங்கும் பரந்த ஆகாசமும் ,
    பூ:புவ:சுவ: என்ற வ்யாஹ்ரிதிகள் குறிப்பிடும் மனம் ,புத்தி அகங்காரம் என்ற தத்துவங்களும் ஓங்காரமே.

    காயத்ரி ஆவாகனம் .

    ஆயாது எனும் அனுவாகதிற்கு வாம தேவர் ரிஷி ,

    அனுஷ்டுப் சந்தம் ,

    காயத்ரி தேவதை .

    விரும்பிய வரங்களை அளிப்பவளும்,அழிவற்றவளும் வேதத்தால் அறியப்பட்டவளும் வேத மாதாவும் ஆகிய காயத்ரி தேவி எழுந்தருளி இந்த வேத மந்திர ஸ்துதியை அங்கீகரிக்க வேண்டும் .

    காயத்ரியே !

    நீயே பிராண சக்த்யாகவும் ,இந்திர சக்தியாகவும் இருக்கிறாய் ,

    சத்ருக்களை வெல்லும் திறமையாக இருக்கிறாய் ,

    அங்கங்களின் வலிமையாக இருக்கிறாய் ,

    ஞான ஒளியாக இருக்கிறாய் ,

    தேவர்களின் பிரசித்தமான பிரகாச வடிவாய் இருக்கிறாய் ,

    உலக வடிவாய் இருக்கிறாய் ,

    கால் ரூபியாக உலகின் ஆயுளாகவும் இருகிறாய் .

    எல்லோருடைய ஆயுளாகவும் இருக்கிறாய் ,

    அனைத்தையும் வென்றவள் ஆக இருக்கிறாய் ,
    பிரணவப் பொருளான காயத்ரியே !

    உன்னை , எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன் ,

    சாவித்ரி !

    உன்னை எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன் ,

    சரஸ்வதி

    உன்னை எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன் .

    காயத்ரி ந்யாசம் .

    காயத்ரி மந்திரத்திற்கு விஸ்வாமித்ரர் ரிஷி ,

    நிஸ்ருத் காயத்ரி என்னும் சந்தம்

    சவிதா தேவதை .

    அனகன் ந்யாசம் , கர ந்யாசம் ஸ்வரூப த்யானம் ,பஞ்ச பூஜை செய்து கொள்ளவும் .

    காயத்ரி ஜபம் .

    ஓங்காரப் பொருளான எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ ,அந்த அனைத்தையும் படைக்கிறவரான ,பகவானுடைய சிறந்த ஜோதி ஸ்வரூபத்தை த்யாநிப்போம் .

    காயத்ரி உபஸ்தானம் காலை சந்த்யோபஸ்தானம் செய்கிறேன் ,

    நடுப்பகலில் ஆதித்ய உபஸ்த்தானம் செய்கிறேன் ,

    சாயங்காலத்தில் சாயம் சந்த்யா உபஸ்தானம் செய்கிறேன் .

    பிரகாசிக்கின்ற காயத்ரி தேவியே ,
    பூமியில் பிரம்ம உபாசனம் செய்கின்ற எங்களுக்கு அனுக்கிரகத்தை செய்து மேரு மலையின் உச்சியில் உத்தமமமான சிகரத்தில் உள்ள உனது ஆலயத்திற்கு ஆனந்தமாய் எழுந்து அருள்வாய் .

    காலையில் சூரிய உபஸ்தானம்.

    பிரஜைகளை ரக்ஷிக்கும் சூரிய தேவனுடைய பூஜிக்கத் தகுந்ததும்,அழிவற்றதும் , கேட்பவர் மனத்தை கவர்வதில் சிறந்ததுமான

    கீர்த்தியையும் பெருமையும் த்யானிக்கிறேன்

    சூரியன் அனைத்தையும் அறிந்து கொண்டு ஜனங்களை நடத்தி வைக்கிறார் .

    சூரியன் பூமியையும் மேல் உலகையும் தாங்குகிறார் .

    அவர் ஜீவராசிகளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் .

    அழியாது பலனைப் பெறுவதற்காக வேய் நிறைந்த ஹவிஸ்ஸை அளிக்கிறோம் .

    மித்திரர் ஆன சூரிய பகவானே !

    எவன் நியமத்துடன் உம்மை ஆராதிக்க விரும்புகிறானோ ,அந்த மனிதன் பரி பூரணமான தர்மபலனுடன் கூட்டினான் ஆகட்டும் .

    உம்மால் இரட்சிக்கப் பட்டவன் நோய் வயப்பட்டு அழிவுறான் .

    இவனைப் பாவம் சமீபத்திலோ தூரத்திலோ துன்புறுத்தாது .

    மத்தியான்னம் .

    ஆன்ம ஜோதியாலும் கண்காணும் பிரகாசத்தாலும் தேவ உலகினரையும் அவரவர் கருமங்களில் புகுத்திக் கொண்டு சுற்றி

    வருபவரான சூரிய தேவன் ,பொன் மயமானதேரில் உலகங்களை நன்கு பார்வையிட்டுக் கொண்டு சஞ்சரிக்கிறார் .

    இருளை விழுங்கிக் கொண்டு உதிக்கின்ற உயர்ந்த ஜோதி வடிவானவராயும் ,தேவர்களையும் உள்ள சூரிய தேவனைப் பார்ப்பவர்கள்

    ஆன நாம் உத்தமமான ஆன்ம ஜோதியையே அடைந்தவர்கள் ஆவோம் .

    அந்தப் பிரசித்தமான அனைத்தையும் அறிகின்ற தேவனான சூரியனை கிரணங்கள் ஆகிய குதிரைகள் உலகோரின் தரிசனத்திற்காக

    உயரத் தாங்கிச்செல்கின்றன .

    மிதிரனுக்கும் வருணனுக்கும் அக்னிக்கும் கண் போன்றவரும் , விசித்திரமான சர்வ தேவ ஸ்வரூபியும் ஆகிய சூரியன்

    உயரசெல்கிறார் .

    அசையும் பொருள்களுக்கும் அசையாப் பொருள்களுக்கும் ஆத்மாவாகிய சூரியன் தேவ லோகம் ,பூலோகம் அந்தரிக்ஷம் அனைத்தையும் வியாபிக்கிறார் .

    கிழக்கில் பரிசுத்தமாய் உதித்து தேவர்களுக்கு நமை செய்வதும் கண் போன்றதும் ஆன அந்த சூரிய மண்டலத்தை நூறாண்டு காலம் கண்டு வணைங்குவோம் .

    அங்ஙனம் நூறாண்டு வாழ்வோம் .

    நூறாண்டு உற்றார் உறவினருடன் கூடிக் குலவுவோம் .
    நூறாண்டு மகிழ்வோம் .
    நூறாண்டு கீர்த்தியுடன் விளங்குவோம் .
    நூறாண்டு இனியதே கேட்போம் .

    நூறாண்டு இனியதே பேசுவோம் .
    நூறாண்டும் தீமைகளால் ஜெயிக்கப்படாமல் வாழ்வோம் .
    இங்ஙனம் நீண்ட காலம் சூரிய தேவனைப் பார்த்து அனுபவிக்க ஆசைபடுகின்றோம் .

    விரும்பிய பலனை அளிப்பவரும் சிவந்த கண்களை உடையரும் ஆன எல்லாம் அறிந்தவருமான எவர் எத்திக்கிலும் பபிரகாசிப்பவராய் பெரிய ஜல சமுத்திரத்தில் மத்தியில் இருந்து காலையில் உதித்தாரோ அந்த சூரிய தேவன் என்னை முழு மனதுடன் புனிதாக்கி அருள்வாராக .

    மாலையில்

    வருண தேவரே!

    எங்களுடைய இந்த வேண்டுகோளைக் கேட்டுருள்வீராக ,

    இப்போழுதே இன்பமுறச்செய்வீர் .

    ரக்ஷை வேண்டி உம்மைப் பிரார்த்திக்கின்றேன் .

    வேத மந்திரத்தால் ஸ்தோத்திரம் செய்து கொண்டு அதற்காகவே உம்மைச் சரண் அடைகிறேன் .

    யாகம் செய்பவன் ஹவிஸ் திரவியங்களைக் கொண்டு அதையே கோருகிறான்.

    புகழ் மிக்க வான தேவரே !

    அநாதரவு செய்யாமல் இப்பொழுது என் பிரார்த்தனையை அங்கீகரிக்க வேண்டும் .

    எமது ஆயுளைக் குறைத்து விடாதீர் .

    வருண தேவரே !

    விவேகமற்ற மனிதரைப் போல் உம்முடைய ஆராதனையை தினந் தோறும் அனுஷ்டிக்காமல் அஜாக்கிரதையால் எதை விடுததோமோ ,

    வருண தேவரே !

    தேவதைகளின் சமுகத்திற்கு மனிதர்களாகிய நாங்கள் அறியாமையால் இவ்விதமான வஞ்சனை எது எது செய்துள்ளோமோ <

    உம்முடைய தருமத்தில் எதைக் கெடுத்தோம்,

    வருண தேவரே !

    அந்தப் பாவத்திற்காக எங்களை இம்சியாது காத்து அருள வேண்டும்
    .

    .

    சூதாடிகளைப் போன்றோர் ,நல்லோர் நாடாத இடத்தில் எந்தப் பழியை அநியாயமாக என் மீது சுமத்தினார்களோ ,

    அல்லது அந்தப் பாவம் உண்மையில் அறிந்து செய்யப் பட்டதோ ,மேலும் எதைச் செய்தும் அறியவில்லையோ ,

    அவையனைத்தும் சிதறிப் போகுமாறு நாசம் செய்யும் .

    வருண தேவரே !

    பின்னர் உமக்குப் பிரியமானவர்களாக நாங்கள் எப்போதும் இருக்க வேண்டும் .

    சமஷ்டிய அபிவாதனம் ..

    சந்த்யா தேவிக்கு நமஸ்காரம் .

    சாவித்ரி தேவிக்கு நமஸ்காரம்.

    காயத்ரி தேவிக்கு நமஸ்காரம் .

    சரஸ்வதி தேவிக்கு நமஸ்காரம் .

    எல்லா தேவதைகளுக்கும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம் ..

    காமம் செய்தது , கோபம் செய்தது -நான் செய்த பாவம் எதுவும் வேண்டுமென்று மனமோப்பிச் செய்ததன்று .

    காமம் குரோத வசத்தால் அறியாமையில் நிகழ்ந்து விட்டதால் ,

    தேவர்களே !

    பொறுத்து அருள வேண்டும்
    .
    தேவர்களே உங்களைப் பன் முறை வணங்குகிறேன்.

    அபிவாதனம் .

    யம மந்திரம் .

    யமனுக்கு நமஸ்காரம் .

    அனைத்தையும் அடக்கி ஆள்பவனாகவும் ,தருமா தேவதையாகவும் ,அழிப்பவனாகவும் ,முடிப்பவனாகவும் ,

    விவச்வானுடைய மகனும் ,கால ஸ்வரூபியாகவும் ,எல்லாப் பிராணிகளையும் ஒழிப்பவனாயும்,

    மிக்க பலசாலியும் தத்னன் என்ற பெயருடவனும் கரிய மேனி உடையவனும் எல்லோராலாரும் பூஜிக்கப்

    பட்டவனாகவும் பேரு வயிறு படைத்தவனாயினும் ,விசித்ரமானவனும் ,விசித்ரமாகத் தன் ரகசியங்களைக் காப்பவனும் ,

    உள்ள தர்ம ராஜனுக்கு எனது நமஸ்காரம் .

    மீண்டும் சித்ரகுப்தனுக்கு நமஸ்காரம் .

    ஹரிஹர வந்தனம் .

    காணும் பொருள்களில் அழகாயும் ,காட்சிக்கு ஆதாரமாயும் ,உள்ள பரப் பிரம்மத்தை ,உடல் தோறும் உறைபவனைக் கருமேனித்

    திருமாலும் செம்மேனிச் சிவனும் ஒன்றாய் இணைந்த வடிவை ,வீரியத்தின் மேல் நோக்கு உடையவனை ,முக்கண்ணனை ,

    எல்லாம் தன வடிவாய்க் கொண்டவனக்குப் பன்முறை நமஸ்காரங்கள் .

    சூரியநாராயண வந்தனம் .

    உலகத்திற்கெல்லாம் ஒரு கண்ணாக விளங்குபவரும் ,உலகின் சிருஷ்டி ,ஸ்திதி சம்ஹார காரணரும் ,வேதஸ்வரூபியும் ,

    முக்குணத்தால் மூன்று வடிவம் தாங்கி ,பிரம்மா , விஷ்ணு , சங்கரன் என்ற மூர்த்திகளில் விளன்குபரும் ஆகிய சூரிய தேவனுக்கு

    நமஸ்காரம் .

    சூரிய மண்டல மத்தியில் உறைபவரும் ,பத்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும் ,தோல் வளையும் ,காதில் மகர குனடலமும் ,

    சிரஸில் கிரீடமும் ,மார்பில் முத்துமாலை அணிந்தவரும் ,சங்கும் சக்கரமும் ஏந்தியவரும் பொன்போல் ஒளிரும் திருமேனி

    உடையவருமான நாராயணர் எப்போதும் த்யானத்திற்கு உரியவர் .

    சங்கு சக்கரம் கதை இவைகளைக் கையில் ஏந்தியவரே !

    த்வாரகையில் நித்ய வாசம் புரிபவரே !

    அடியவரை நழுவவிடாதிருப்பவரே !

    உலக ரக்ஷகரே !

    தாமரை போற கண்களை உடையவரே !

    சரணடைந்த என்னைக் காத்தருளும் .

    ஆகாயத்திலிருந்து விழுந்த நீர் சமுத்திரத்தை நோக்கி எவ்வாறு சென்று அடைகிறதோ , அவ்வாறே எல்லா தேவர்களுக்கும்

    செய்யும் நமஸ்காரம் கேசவனையே நாடி அடைகிறது .

    அபிவாதயே ..

    சமர்ப்பணம் .

    சரீரத்தாலோ ,வாக்காலோ மனதாலோ கர்ம இந்திரியங்கள் ஆலோ ஞான இந்த்ரியங்கலாலோ ,இயற்கையின் இயக்க்கத்தாலோ

    எது எதைச் செய்கிறேனோ அது எல்லாவற்றையும் பரம் புருஷனாகிய நாராயணுக்கு சமர்ப்பிக்கிறேன் .

    ஓம் தத் சத் .

    சந்த்யா வந்தனம் நிறைவுற்றது .

    தவறுகளுக்கு மன்னிக்க்கவும்.

    பிழைகளைச் சுட்டிக் காட்டவும் .

    http://ramanisblog.in/2014/04/01/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/