‘முத்தைத்தரு’ Aruna Girinathar Tiruppugazh Divine Glory

Arunagirinathar was a Tamil Saint who lived in the Fifteenth century in Thiruvannamalai.
He was a wastrel when he was young and a womanizer.
He  used to visit prostitutes regularly.
His parents expired and he was living with his elder sister who was un married and was a Mother to him.
They fell on hard times.
They had no money.
Arunagiri could not bear the pain of not visiting the  prostitutes.
He was in an agony, on seeing her brother, His sister said to him,
‘If it is a Woman’s body you wacome to Me,
I can not bear your suffering’
Shocked Arunagiri was brought back to his senses.
He went to the Temple at at Thruvannamalai, repented his sins to Lord Subramanya, climbed up the Temple Tower, and Jumped.
Lord Subramanaya held him in his hands,said,
‘Arunagiri, Your Life’s work is not over yet,
Compose songs on Me,
Arunagiri said,
I am a wastrel, Not educated, How can I compose songs?
Lord Subramanya  took out His Triad, wrote the Pranava,’ OM’ on his tongue much like what Kali did for Kalidasa and gave him the first lines of a song.
Those lines are, 
‘முத்தைத்தரு’
I am reproducing the text and meanings below.
Thiruppugazh , in Tami had originally 1600 poems.
Now  only around 1008 are reportedly available.
The beauty is not single Meter is repeated in another song.
The pronunciation is a bit, though.( in some songs)
All these song are on Lord Subramanya .
These songs are on surrender to God(Subramanya,Life and all the Temples of Lord Subramanya, including the one in Sri Lanka (Kathirgamam)
The songs have profound meanings.
Lord Subramanya.
Lord Subramanya.
I shall , if I can,translations some time.
In the meanwhile I am proving song  ‘முத்தைத்தரு’ from the Film Arunagirinathar, sung by TMS.
Another one from the same movie,the repentance of Arunagiri for Tamil Lovers.
Saint Arunagirinathar
Saint Arunagirinathar
இராகம்: கௌளை
தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ….. தனதான
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ….. எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ….. அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ….. இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ….. ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ….. கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ….. எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ….. முதுகூகை
கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ….. பெருமாளே.
பதம் பிரித்தல்
முத்தை தரு பத்தி திரு நகை
அத்திக்கு இறை சத்தி சரவண
முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும்
முக்கண் பரமற்கு சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண
பத்து தலை தத்த கணை தொடு
ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு
பட்ட பகல் வட்ட திகிரியில் இரவாக
பத்தற்கு இரதத்தை கடவிய
பச்சை புயல் மெச்ச தகு பொருள்
பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே ?
தித்தித்தெய ஒத்த பரிபுர
நிர்த்த பதம் வைத்து பயிரவி
திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட
திக்கு பரி அட்ட பயிரவர்
தொக்கு தொகு தொக்கு தொகுதொகு
சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத
கொத்து பறை கொட்ட களம் மிசை
குக்கு குகு குக்கு குகுகுகு
குத்தி புதை புக்கு பிடி என முது கூகை
கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை
வெட்டி பலி இட்டு குலகிரி
குத்துப்பட ஒத்து பொர வ(ல்)ல பெருமாளே.
பத உரை
முத்தை = முத்துப் போன்ற முத்திச் செல்வத்தை.
தரு = அளிக்கும்.
 பத்தித் திரு நகை = வரிசையாய் விளங்கும் பற்களை உடைய.
அத்திக்கு = யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனைக்கு.
இறை = இறைவனே.
சத்தி = சத்தி வேல் (ஏந்திய).
சரவண = சரவணபவனே.
முத்திக்கு = வீட்டுப் பேற்றுக்கு.
ஒரு வித்து = ஒரு வித்தே.
குருபர = குரு மூர்த்தியே.
 என ஓதும் = என்று ஓதுகின்ற.
முக்கண் பரமற்கு = மூன்று கண்களை உடைய சிவபெருமானுக்கு.
சுருதியின் முற்பட்டது = வேதத்தில் முற்பட்டு நிற்கும் பிரணவத்தை.
கற்பித்து = கற்பித்து.
இருவரும் = பிரமன், திருமால் ஆகிய இருவரும்.
முப்பத்து மூ வர்க்கத்து = முப்பது மூன்று வகையான
அமரரும்- தேவர்களும்.
அடி பேண = (உனது)திருவடியை விரும்ப (அவுணருடன் போர் செய்த பெருமாளே).
பத்துத் தலை தத்த = (இராவணனுடைய) பத்து தலைகளும் சிதறும்படி.
கணை தொ(ட்)டு = அம்பைச் செலுத்தியும்.
ஒற்றைக் கிரி மத்தை = ஒப்பற்ற மந்தரம் என்னும் மலையை மத்தாக நட்டு.பொருது = (கடலைக்) கடைந்தும்.
ஒரு பட்டப்பகல் = ஒரு பட்டப் பகலை.
வட்ட = வட்ட வடிவமாக உள்ள.
திகிரியில் = சக்கரத்தினால்.                        இரவாக = இரவாகச் செய்தும்.
பத்தற்கு இரதத்தைக் கடவிய = பத்தனாகிய அருச்சுனனுடைய தேரைப் பாகனாகஇருந்த நடத்திய.
 பச்சைப் புயல் = பச்சை மேகம் போல் நிறமுடைய திருமால்.
 மெச்சத் தகு பொருள் = மெச்சத் தகுந்த பொருளே.
பட்சத்தொடு = (என் மீது) அன்பு வைத்து.
ரட்சித்து அருள்வதும் = (என்னைக்) காத்தருளும்.
அருள்வதும். ஒரு நாளே = ஒரு நல்ல நாளும் உண்டாகுமா?
தித்தித்தெய ஒத்து = தித்தித்தெய என்னும் தாளத்துக்கு ஒத்த வகையில்.
பரிபுரம் = சிலம்பு (அணிந்த).
நிர்த்தப் பதம் வைத்து = நடனப் பதத்தை வைத்து.
பயிரவி = காளி.                                                 திக்கு = திக்குகளில்.
ஒட்க நடிக்க = சுழன்று நடிக்கவும்.        கழுகொடு = கழுகுகளுடன்.
கழுது = பேய்கள்.                                               ஆட = ஆடவும்.
திக்குப் பரி = திக்குகளைக் காக்கும்.     அட்டப் பயிரவர் = எட்டு பயிரவர்கள்.
தொக்கு…..தொகு = தொக்குத் தொகு என வரும்.
சித்ர = அழகிய.                                                  பவுரிக்கு = மண்டலக் கூத்தை.
த்ரிகடக என ஓத = த்ரிகடக என்று ஓதவும்.
கொத்துப் பறை = கூட்டமான பறைகள்.
கொட்ட = முழங்கவும்.                                களம் மிசை = போர்க் களத்தில்.
குக்குக்குகு…குத்திப் புதை புக்குப் பிடி= இவ்வாறு ஒலி செய்து.
முது கூகை = கிழக் கோட்டான்கள்.
கொட்புற்று எழ = வட்டம் இட்டு எழவும்.
நட்பு அற்ற அவுணரை = பகைவர்களாகிய அசுரர்களை.
வெட்டிப் பலி இட்டு = வெட்டிப் பலி இட்டு.
குலகிரி = குலகிரியாகிய கிரௌஞ்ச மலை.
 குத்துப்பட ஒத்து = குத்துப்படத் தாக்கி.
பொர வ(ல்)ல = சண்டை செய்ய வல்ல.
பெருமாளே = பெருமாளே.

http://thiruppugazhamirutham.blogspot.in/2012/08/5.html

Comments

Leave a Reply

More posts

Discover more from Ramanisblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading