Tag: sita

  • Sita was Not Abducted By Ravana Koorma Purana

    I have been reading the Eighteen Puranas in detail for the past couple of days.

    La tristesse de Sîtâ (Preah Khan, Angkor)
    La tristesse de Sîtâ (Preah Khan, Angkor) (Photo credit: dalbera)

    Though I knew there are some differences between the Puranas, I never did realize that there could be something fundamentally contradictory between their narrative details of the Ithihasa, especially the Ramayana!

    Let me highlight afew of them.

    Ravana Did Not Kidnap Sita to Lanka.

    Though many of us are aware that there are various versions of The Ramayana,we assume that would be very minor,

    For instance, some Ramayans state that Sita was not physically abducted directly by Ravana,”

    a)The ground on which she stood was lifted by Ravana and he took of.

    b)Ravana lifted Sita by her hair.

    c)Sita was lifted by Ravana holding her by her hips.

    But Valimiki states that Sita was abducted.

    “In Aaraya kandam, Sarkam 49, page 151,
    Sri C.R. Srinivasa Iyengar translates that
    Ravana lifts Sita by his right hand by touching her thighs.
    It shows Sita’s willingness
    The point is that Ravana’s head will burst and his body will be burnt
    if he touches a unwilling woman
    It was a curse on Ravana”(http://in.answers.yahoo.com/question/index?qid=20110323111752AAa7ajG)
     
    But leaving these points apart, there has been a aview that Ravana did not abuct the Real Sita at all!
     
     
    I used to brush it aside.
     
    But I found a refernce to this in The Koorma Puarana.
     
    It states that Sita knew it was Ravana who had come in the form of a Sanyasi and hence she ,with the blessings of Agni,had a Maya Sita created and it was this Sita Ravana abducted and when when the Maya Sita enetred into the Fire after the killing of Ravana by Lord Rama, the Real Sita emerged and the Maya Sita dispeeared in the fire.
     
    This is explained while extolling the Virtuous that those who are vituous will come to no harm.
     
    The same is stated in The Brahma Vaivastha Purana.
     
    Though the Puranas are old and are also authentic I still belive the Valimki version because the additional details provided in The Ramayana by Valmiki on Lord Ram‘s Birth,Death, His
     
    Date of Birth are found to be true9Please read my posts on these).
     
    Probably these are interpolations in the Puranas to insist on the Glories of Virtues.
     
  • When Lord Rama Realized He Was ‘Brahman’

    One of the differences between the Avatars Rama and Lord Krishna(both being the Avatars of Vishnu) is that Lord Krishna  was aware all the time He was the Avatar of Vishnu, while Lord Rama was not aware of it.

    Lord Sri Rama
    Lord Sri Rama

    Excepting in one instance.

    Lord Rama was facing Ravana in the Final battle in the penultimate day before the death of Ravana in the Battle field.

    The battle was fierce and both Rama and Ravana were fighting each other fiercely.

    Ravana was matching Rama arrow for arrow(Astra) and Castra(Divine Weapons).

    Rama got weary and sent his Rama Bana, which can never return unconquered.

    There is famous saying about Lord Rama in Telugu,

    Oka Mata,Oka Bana, Oka Baarya’

    One word, One Arrow, One Wife -That’s Sri Rama.

    This Rama Bana went screaming at Ravana.

    Ravana saw this and realized he could do nothing about it.

    He remembered the Sathi Ayudha, given to him by his Grand Father, Lord Brahma, who told him thus,

    “In  battle field when everything fails for you, you us e this.

    Nothing can stop it. It will destroy everything’

    Ravana sends it across.

    It meets up with the Rama Bana and goes past it towards Lord Rama.

    Lord Rama was stunned.

    He was helpless.

    It was nearing his neck.

    Without being Conscious, He utters the Pranava ‘Om from His Navel (Nabhi)

    Pranava, coming from the Reality, shatters the Sakthi Ayudha.

    Rama realizes He is more than the son of Dasaratha, husbanf Sita or the Preceptor of Hanuman.

    Ravana recalls the second part of his Grand father‘s Boon,

    ‘ If and when this Sakthi Ayudha fails, understand thatwho is facing yoyu is Para Brahman

    Ravana gets down from his chariot and prostrates  before Lord Rama, saying,

    ‘ Now In Know You are The Brahman,

    I can not win you,

    Dying in Your hands will grant me Mukthi.

    I can not surrender for people have died, including my brothers and son,s for Me.

    I can not sully them’

    Ram replies,

    .’Ravana, you are with out Arms to-day,

    Go to-day and come forth prepared to morrow’

    Related:

    Following is the procedure for performing Sri Rama Navami Pooja.

    For Sankalpam, please refer my blog on Sarasvati Pooja and make necessary changes-Kara nama Samvatsaram,Punarvasu,Ashtami/Navami)

    Astothram. Click The Link below.

    http://ramanisblog.in/2012/03/31/sri-rama-navami-pooja-details-with-mantras/

    Birth Date of Lord Rama.

    As for as The Ramayana goes, external evidence is provided in the Puranas(means ‘ very old’) , Eighteen in Number( in Sanskrit) and in regional Languages of India, be it Tamil,Telugu,Kannada, Malayalam,Hindi,Bengali,Oriya,other languages .

    In addition Dialects of India have this spread through word of mouth.

    Though the versions vary in embellishments, the basic fact that there was a King called Rama , he had been sent to forest with his wife called Sita by his father who wanted to appease his wife(not Rama’s mother),she was abducted by a Chieftain called Ravana of Sri Lanka and he was killed by Rama , never varies.(History of The Tamils by P.T.Srinivasa Iyengar)

    http://ramanisblog.in/2011/03/13/birth-date-of-lord-ramaroute-taken-by-him-to-sri-lanka-maps/

     

  • May Serene Death Descend.

    Deities of Sri Sri Sita-Rama, Lakshmana, Hanum...
    Image via Wikipedia

    My mother in law who was  79 years became senile.

    She used to ask for her parents,child hood mates.

    Immediately she will come to the present and ask my wife whether she can cut the vegetables.

    My daughter’s marriage was conducted.

    She used to ask my sister-in-law’s daughter,who was unmarried, whether her husband(really it is my son-in-law) is well and in the same breath ask my daughter if she is pregnant.

    She used to narrate Ramayana thus.

    Rama was married to Sita,n0,Sita was married to Ravana,Rama sat on  cereals with oil on him, it got stuck to him and he got up, a crow came and Rama ran away.

    She will wake up in the middle of the night and ask for Refuge of Police.

    She passed away couple of years back.

    My class mate’s Father is 96.He lies in a fetal position and keeps rocking himself in that position.

    He is unable to remember his children,but recalls his parents,brothers and sisters.

    When one of his colleagues died recently my friend informed him of this.

    He immediately rang up his friend’s Home number and inquired of his Family.

    He eats well,takes care of himself without any one’s support.

    He is alive .

    I wonder- Is this where and how we end?

    These people had no Physical/mental disorder.

    I have numerous cases to cite.

    No doubt Lord Krishna in Srimad Bhagavad Gita, clubbed old age as a disease.

    ‘Kaumaaram Yauvanam Jara’ (II Chap.)

    ‘Vrudhdham’ is a disease.

    I am sixty. 

    What can I Pray?

    ‘Sree varchchasvam,ayur, arogyam maavidhhach choba maanam maheeyande,

    Dhaanyam,Dhanam,Pasum,bahuputhra labham,satha sam vathsaram dheerkamayuhu’

    (Wealth of all kinds,Good things in Life’Longevity,Health,Food,Assets,good children)

    No ,this is what I pray.

    ‘anaysena maranam vinyedainyena jivanam |

    dehi me krupaya Sasta tvayi bhaktimacancalam’
    A painless liberation, a life devoid of misery( one which is not dependent on others) – please grant these my Lord Sastha ! and also give me an unwavering devotion towards you..

    Enough of this Life.

  • ராமேஸ்வரம்-Rameswaram-Holy Place of The Hindus.

    The temple dedicated to Lord Siva-Ramanatha Swamy,meanig, Lord Of Sri Rama,an avatar of Vishnu,-is located in the Southern tip on peninsular India and is reputed to grant the boon of child for the childless.Those who visit Kasi-,Varanasi in UP North India, must complete their pilgrimage by concluding it in Rameswaram.The place is is one Lord Rama worshiped Lord Siva for the sin committed by him killing Ravana , a Gnani, though he he committed the cardinal sin of yearning for other’s(Rama’s Wife,Sita).Rameswaram is believed to grant Moksha or Liberation by visiting this place and taking bath in the theerthas or wells,numbering 108(currently 22) ,all saline in Nature and concluding the bath in pure potable water gushing on the shores of the ocean.
    சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.
    தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பினார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் வர தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில் லிங்கம்அமைத்தாள். அந்த லிங்கத்தை ராமர் பூஜித்ததால் “ராமநாதசுவாமி’ என்ற திருநாமம் அமைந்தது.

    ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது.

    காசி, ராமேஸ்வரம் யாத்திரை
    செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி (கடல்) தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி செல்ல வேண்டும்.

    கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
    இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தான் தீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும்.

    சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கு வசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை ராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலாம்.

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்:
    புரட்டாசியில் வரும் மகாளய பட்சத்தில் பித்ருக்கள் பூமிக்கு வருகின்றனர். எமதர்மராஜா அவர்களை விடுவித்து, அவரவர் குடும்பத்தினரை பார்த்து வர அனுமதியளிப்பார். “மகாளயம்’ என்றால் “கூட்டமாக பூமிக்கு வருதல்’ எனப்பொருள்.

    இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று, தர்ப்பணம், ஸ்ரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களைச் செய்ய வேண்டியது அந்தந்த குடும்பத்தினரின் கடமை. இதனால் பிதுர் ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். பிதுர் காரியங்களைச் செய்ய சிறந்த தலம் ராமேஸ்வரம் ராமநாதர் கோயில்.

    ஜோதிர்லிங்கம் : சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று ராமேஸ்வரம். மற்ற 11 தலங்களும் பிற மாநிலங்களில் உள்ளன. விபீஷணன், ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான்.

    இந்த பாவம் நீங்க, இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தை போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, “ஜோதிர்லிங்கம்’ ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.

    முதல் தரிசனம் : ஆஞ்சநேயர் தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு, “விஸ்வநாதர்’ என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. ராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார். விசாலாட்சிக்கும் தனி சன்னதி இருக்கிறது.

    ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார். அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்டபின்பே, சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.

    கோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, ராமநாதரை தரிசிக்க வேண்டும். ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம் கோயில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது.

    உப்பு லிங்கம் : ஒருசமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை.

    அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார். ராயர் செய்த உப்பு லிங்கத்தை பிரகாரத்தில், ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம். உப்பின் சொரசொரப்பை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.

    அக்னி தீர்த்தம் பெயர் ஏன்? : ராமேஸ்வரம் கடல், “அக்னி தீர்த்தம்’ என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க, அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இந்த தீர்த்தம் “அக்னி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சீதையின் கற்புத்திறன் அக்னியையே சுட்டதாகவும், அந்த வெம்மை தாளாத அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தை தணித்ததாகவும் சொல்வதுண்டு.

    காலில் சங்கிலியுடன் பெருமாள் : குழந்தை பாக்கியம் இல்லாத சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குறையைத் தீர்க்க தன் மனைவி மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.

    மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான்.
    பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார். அன்றிரவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.

    இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள். இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.

    தீர்த்தமாடுவதின் பலன் : பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம்
    கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த
    தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.

    தீர்த்தமும் பலனும்:
    1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
    2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
    3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
    4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
    5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு
    6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
    7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
    8. நள தீர்த்தம்,
    9. நீல தீர்த்தம்,
    10.கவய தீர்த்தம்,
    11.கவாட்ச தீர்த்தம்,
    12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
    13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
    14. கங்கா தீர்த்தம்,
    15. யமுனை தீர்த்தம்,
    16. கயா தீர்த்தம்,
    17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
    18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
    19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
    20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
    21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
    22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

    பாதாள பைரவர் : ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.

    சுக்ரீவன் கோயில் : சீதையை மீட்பதற்கு உதவி செய்த சுக்ரீவனுக்கு நன்றிக்கடனாக ராமர், அவனுக்கு அநீதி இழைத்த வாலியைக் கொன்றார். வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். இந்த தீர்த்தத்துடன் கூடிய சுக்ரீவன் கோயில், ராமநாதர் கோயிலில் இருந்து ராமர் பாதம் செல்லும் வழியில் 2 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.

    காவியுடையில் இரட்டை விநாயகர் : பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவிஉடை அணிவிக்கப்படுகிறது. விநாயகர், பிரம்மச்சாரி என்பதால் இவ்வாறு அணிவித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
    குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், தங்கள் நிஜ பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும், இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.

    பதஞ்சலி முக்தி தலம் : பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்து நடராஜர் காட்சி தருகிறார். இவரது எதிரில் நந்தி இருக்கிறது. நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு கரம் மட்டும் உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடக்கும். யோகக்கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நம் கண்ணுக்கு தெரியாமல் நாகவடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்ளலாம். பதஞ்சலி முக்தியடைந்த தலம் என்பதால், நம் கண்களுக்கு தெரியமாட்டார்.

    விபீஷணன் ஸ்தாபித்த ரங்கநாதர் : அம்பாள் சன்னதி பிரகாரத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் ரங்கநாதர் காட்சி தருகிறார். ராமர் பூஜித்த ரங்கநாதரை பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தால் அச்சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அப்போது தன் திருப்திக்காக, இங்கு வேறொரு ரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த ரங்கநாதர், கையில் தண்டத்துடன் காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.

    மூன்றாம் பிரகார சிறப்பு : முத்துராமலிங்க சேதுபதி மன்னர், இக்கோயிலில் மூன்றாம் பிரகாரத்தை மிகப்பெரிதாகக் கட்டியுள்ளார். 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது.

    ஸ்படிக லிங்க பூஜை : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர். இந்த அபிஷேகத்திற்கு பின்பே, ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இத்தலம், “சேதுபீடம்’ ஆகும். அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும்
    சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர்.

    12 ஜோதிர்லிங்க தரிசனம்! : இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களையும் ராமேஸ்வரம் தீர்த்தக்கரையிலுள்ள சங்கர மடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். அந்தந்த சுவாமிக்குரிய விமான வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முருகனின் 16 வடிவங்களையும் இங்கு தரிசிக்கலாம்.

    விவேகானந்தர் வருகை : வீரத்துறவி விவேகானந்தர் 1897ம் ஆண்டு, ஜனவரி 27ல் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். அப்போது அவர் ஆற்றிய சொற்பொழிவில்,””அன்புதான் சமயம். உடல், உள்ளம் இரண்டும் சுத்தமில்லாமல் சிவனை வழிபடுவதால் ஒரு பலனும் இல்லை. உள்ளம், மன சுத்தத்துடன் தன்னை பிரார்த்திப்பவர்களின் கோரிக்கைகளுக்கு சிவன் செவிசாய்க்கிறார்.

    தூய்மையில்லாமல் கோயிலுக்குள் செல்பவர்கள், தங்களின் பாவங்களோடு மேலும் ஒரு பாவத்தைச் சேர்த்துக் கொள்கிறார்கள். சிவனுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள், அவரது படைப்புகளுக்கு சேவை செய்ய வேண்டும். தன்னால் முடிந்தவரையில் பிறருக்கு தூய மனதுடன் உதவுபவனே, சிவபெருமானுக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பைப் பெறுகிறான்,” என்று பேசியுள்ளதுடன் பார்வையாளர் புத்தகத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.

    தீவுக்குள் ராமர் கோயில் : விபீஷணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். ராவணன் அதை ஏற்க மறுக்கவே, அவன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு கோயில் உள்ளது. சுவாமிக்கு “கோதண்டராமர்’ என்பது திருநாமம். இவரது அருகில் விபீஷணன் வணங்கியபடி இருக்கிறான்.

    அவனை ராமரிடம் சேர்க்க பரிந்துரை செய்த ஆஞ்சநேயரும் அருகில் இருக்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில், வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது.

    ராமாயண திருவிழா : ராமநாதர் கோயிலில் ராமர், லட்சுமணர், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் இவர்கள் புறப்பாடாவர்.

    ராமலிங்க பிரதிஷ்டையின்போது ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், ராமன் ராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், ராமர் லிங்க பிரதிஷ்டை செய்தல் ஆகிய வைபவங்கள் நடக்கும்.

    வால் இல்லாத ஆஞ்சநேயர் : கயிலாயத்தில் இருந்து தான் லிங்கம் கொண்டு வரும் முன்பாக சீதையால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கத்திற்கு ராமபிரான், பூஜை செய்தது கண்டு ஆஞ்சநேயர் தன் தாமதத்துக்காக வருந்தினார். ஆனாலும், அந்த மணல் லிங்கத்தை வாலால் பெயர்க்க முயன்றார். இந்த நிகழ்வின்போது அவரது வால் அறுந்தது. இதன் அடிப்படையில் வால் இல்லாத கோலத்தில் ஆஞ்சநேயருக்கு தனிக்கோயில் இருக்கிறது. ராமநாதசுவாமி கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. இங்கு கடல் மணலால் உருவாக்கப்பட்ட மற்றொரு வால் இல்லாத ஆஞ்சநேயர் சிலையில், சிப்பி பதிந்திருப்பதைக் காணலாம்.

    சீதையை மீட்பது குறித்து ராமர் ஆலோசித்த இடத்தில், “ராமர் பாதம்’ இருக்கிறது. பொதுவாக கோயில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை. இது எந்த பாவத்தையும் தீர்க்கும் தலம் என்பதால், இங்கு சிவனுக்கு தாழம்பூவும் சூட்டுகின்றனர்.

    கருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது வித்தியாசமான அமைப்பு. வடநாட்டு பக்தர்கள் தலையில் ராமாயணம் புத்தகத்தை சுமந்து கொண்டு ராமநாதசுவாமி சன்னதியை சுற்றி வந்து வழிபடுகிறார்கள்.