Tag: கருணாநிதி

  • கருணாநிதி,ராஜீவ் காந்தி சுவிஸ் வங்கி எண் மற்றும் பண ஆவணங்கள்.

    கருணாநிதி லஞ்சம் வாங்கவில்லை என்றும் ,தனக்கு சுவிஸ் வங்கி என்றால் என்னவென்றே தெரியாதது போலும் பேசிக்கொண்டிருக்கிறார்.

    கருணாநிதி,ராஜா,சிதம்பரம் மற்றும் கலாநிதி மாறன் இவர்களின் சுவிஸ் வங்கி எண்,மற்றும் அவர்களின் கணக்கில் உள்ள பணம் இவற்றின் விவரங்களை
    கீழ்க்கண்ட ஆவணத்தில் காணலாம் ராஜீவ் .காந்தி எங்கோ உச்சத்தில் இருக்கிறார்.
    Communication fro Swiss Bank Corporation to Government of India..
    கருணாநிதி,ராஜீவ் காந்தி சுவிஸ் வங்கி எண் மற்றும் பண ஆவணங்கள்.
    மேல் விவரங்களுக்கு இந்த இணைய தளத்தில் corruption ,மற்றும் இந்தியா என்ற தலைப்புகளில் காணலாம்
  • “உயிரினும் மேலான உடன் பிறப்பே “-கலைஞர் மடல்.

    பத்திரிகைகளிலும்  இணைய தளங்களிலும் இன்ன பிற ஊடகங்களிலும் நம் கழக குடும்பத்தைப் பற்றி பரப்பப்படும் செய்திகளைக் கேட்டு உன் மனம்  பதைப்பதை நான் அறிவேன் .

    Karunanidhi.

    தம்பி ,ஆரியர்  கூட்டமும் அதற்குத்  துணை போகும் சில எட்டப்பர்களையும்  நீயும் அறிவாய் ,நானும் அறிவேன்.

    ‘நான் சொத்து சேர்த்து விட்டேனாம் ,ஊழல் புரிந்திட்டேனாம் ‘-எண்ணவே – மனம் பதைக்கிறது .

    நீ அறிவாய் ,நான் சென்னைக்கு திருவாருரில்ருந்து வருகையில் ஒரு கருப்பு நிற டிரங்குப் பெட்டியைத் தவிர ஏதும் கொணரவில்லை என்பதை, நீ மட்டுமல்ல,  இந்த  நாடே அறியும்..

    இன்று ஏதோ சிறு தொகையை கலைஞர் அறக் கட்டளைக்காக சிறிதாக ,குருவி மணி சேர்ப்பது போல் சேமித்து வைத்ததை  ஏகடியம் பேசுகின்றனர் .

    புறம் கூறற்க என்னும் தமிழ் மூதுரையையும் மறந்து ,’வாய்மை எனப்படுவது  யாவர்க்கும் தீமை இலாத சொலல் ‘ என்னும் வள்ளுவம் உரைக்கும் அற நெறியையும் புறந்தள்ளி , புழுதி   வாரித் தூற்றுவோரை , ‘மறப்போம்,,மன்னிப்போம் ‘என பேரறிஞர் கூற்றை மனதில்  இருத்தி   நான் மன்னித்தாலும் நீ மற்றக மாட்டாய் ,அடலேறு என தீப்பந்தம் ஏந்தி அன்றொரு நாள் எனது இல்லத்திற்கு,விதிகளை மீறி கட்டிடம் கட்டினேன்  என்பதற்காக மின் இணைப்புத் தராத காலையில் சென்னை வந்தவன்ரோ ,என் கண் மணி?

    கனிமொழி லஞ்சம் வாங்கினாள் என்கின்றனர் -சாட்சி உண்டா ?
    கழகக் கொள்கை பரப்ப ஊடகம் நடத்தியத் தவிர என்ன குற்றம் புரிந்தாள்?
    ஆரிய ஊடகங்களையும்  ,இங்கு உள்ள பார்ப்பனச் சதியையும் புரிந்து கொள்ள இயலாதவனா  தமிழன் ?
    பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட இனத திற்காகவும் பாடு படும் இந்தக் கருணாநிதியை வீழ்த்தும் சதியை இனங்கொண்டு  முறியடிப்போம் ..
  • .கருணாநிதியின் வாதம்.2G அலைக்கற்றை ஊழல்,

    karuanidhi's family.

    -திராவிடர்களுக்கு எதிராக தமிழக பார்ப்பனர்களும் (சோ,சுவாமி ) மற்றும் ஆரிய ஊடகங்களும் கிளப்பவிட்ட சதி.
    சோவிற்கும் சுவாமிக்கும் எந்த அளவு மக்களிடையே செல்வாக்கு உள்ளது என்பது அனைவரும் அறிந்தததே .
    மேலும் இந்த ஊழலைப்பற்றி சுவாமி ஒரு வருடத்திற்கு முன்பே பிரதமருக்கு தெரிவித்து உள்ளார் .அப்போது இந்த வாதம் எங்கே போயிற்று ?இதுவரை ஏதும் பேசாமல் இருந்தது ஏன் ?
    அவரின் புகார் வர்த்தக நிறுவனங்கள் அவர்களால் நியமிக்கப்பட்ட ‘lobbyist ‘அரசாங்கத்தை நடத்துகிறது ,அந்த நிறுனங்கள் என்ன ஆதாயங்கள் பெற்றுள்ளன அது எதனால் என்பதுதான்..இதற்கு,மறுமொழி மழுப்பலாக இருந்தததால் ,உச்ச நீதி மன்றம் சென்றுள்ளார்..
    CAG அறிக்கை எவரால் தயாரிக்கப்பட்டது ?அது எந்த ஒரு விஷயத்திற்காக மட்டும் அமைக்கப்பட்டுள்ள அமைப்பு அல்ல .அரசின் நிர்வாகத்தில்  எந்த முறைகேடு இருப்பதாக சந்தேகப் பட்டால் அது அறிக்கை வெளியிடும்.
    உச்ச நீதி மன்றம் பார்ப்பனர்களால்  நடத்தப்படுவது அல்ல..
    ஆரியர் சதி என்றால் ஆரியர்களே சதிக்கூட்டம் என்பதுதானே ?
    நீங்கள் உறவு கொண்டிருக்கும் சோனியா காந்தி திராவிடரா?அல்லது ‘நிலையான அரசு தருக ‘ என்று அழைத்த இந்திரா காந்தி ஆரியரா ?உங்கள் குடும்பத் தொலைக் காட்சிகளை நடத்துபவர்கள் தமிழர்களா ?
    சோ இந்த விவகாரத்தில் , முறைகேடுகள் வெளி வந்தவுடன்  கருத்து தெரிவித்தார்.
    ‘அவதூறு வழக்கு ஊடகங்கள் மற்றும் சோ சுவாமி மீது தொடருவேன் ‘
    இது வரை தொடரவில்லை என்பது இருக்கட்டும்..
    ஓலி நாடாக்களை வெளியிட்ட outlook மேல் ஏன் தொடரவில்லை?
    அது சரி , ஒலிநாடாக்களில் இருப்பது எங்கள் நபர்கள் இல்லை, அது மிமிக்ரி  என்று ஏன் மறுக்கவில்லை ?
    யாரோ ஒரு உதவியாளர் நில பேர விவகாரத்தில் சம்பந்தப்ப்டுள்ளார் என்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே தெரிந்துகொண்டிருக்கக்கூடிய  விஷயங்களை உங்கள் துணைவியார் நீட்டி முழக்கி அறிக்கை விடுப்பது ஏன்?
    இத்தனைக்கும் அவரை நேரடியாக யாரும் குற்றம் சாட்டவில்லை .
    அப்படி இருக்க , நேரடியாக குற்றம் சாட்டப்பட்ட ராசா ஏன் அறிக்கை விடவில்லை ?
    துணைவியாருக்கு வரிந்து கட்டாத கருணாநிதி , ராசாவுக்கு வக்காலத்து ஏன்?
    நிருபர் ராசா வீட்டில் CBI சோதனை பற்றிக்கேட்டதற்கு ‘நீ ஏன் பாடு  படுகிறாய் ?உன் வீட்டிலா சோதனை’ என்பது ஏன்?
    பார்பனர், ஆரியர் சதி ,CAG அறிக்கை இறுதி அல்ல ,சிபிஐ  விசாரணை வழக்கமான (?) ஒன்று ,ராசாவை விசாரணைக்குத்தான் அழைத்தாகள்,அது ஒன்றும் இல்லை .
    இதுதான் கடமை ,கண்ணியம் மற்றும் கட்டுப்பாடு .

    (please read my blogs under Radia tapes,Politics,Business,Corruption,Politicians ,Politics)

    இதையும் படிங்க;

    http://ramanisblog.in/2010/12/25/sarkaria-report-veeranam-scam/