Tag: வேத மந்திரங்கள்

  • நன் மகன் பெற ,மரண பிசாசு பயம் நீங்க விசேஷ ருத்ர மந்திரங்கள்

     

    கீழ்க்கண்ட மந்திரங்கள் ஸ்ரீ ருத்ரத்தில் இருந்து தொகுக்கப் பட்டவை .

     

    Lord Siva.Image.jpg.
    Lord Siva.

     

    மறைந்திருக்கும் இம்மந்திரங்கள் ருத்ர கலபார்ணவத்தில் இருந்து எடுக்கப் பட்டுள்ளன..

     

    மிகுந்த பலனைக் கொடுக்கும் இந்த மந்திரங்களை ஒழுக்கத்துடன் ஜபித்தால் பலன் நிச்சயம் .

     

    மந்திரங்கள் சொல்லும் விதத்தை எனது மற்றைய பதிவுகளில் காண்க.

     

    தேவையான மந்திரத்தை தினமும் 108 முறை 45 நாட்கள் ஜபிக்கவும்.

     

    நைவேத்யம் -பருப்புக்கஞ்சி ( செய் முறை எனது மற்றைய பதிவில் .

     

    நல்ல மகனைப் பெற .

     

    சரத் சந்த்ரப்ரகாசேன வபுஷா சீதளத்யுதிம்

     

    த்யாயேத் சிம்ஹாஸனாநீந  முமையா சஹிதம் சிவம்

     

    நீலக்ரீவாய .

     

    கொடிய ஜ்வரம், பேய் பிசாசு பீடித்தலை அகற்ற .

     

    சந்த்ரரர்த்த மௌலிம்காலாரிம் வியால யஞ்யோபோவீதினம்

    ஜ்வலத் பாவக சங்காஸம் த்யாயேத் தேவம் த்ரிலோசனம்.

     

    பரமேஸ்வரா

     

    பகைவரை அழிக்க , பகைவர் என்பது காமம் ,பெருந்தீனி உண்பது ,பாவத்தை செய்வது .

     

    உத்யத் பாஸ்கர கோடிப் பிரகாசம்

     

    ஆதீப்த தஹன மூர்த்தானம்

     

    பீஷன புஜங்க பூஷம்

     

    த்யாயேத் விவிதாயுதம் ருத்ரம் .

     

    அகால மரணத்தைத் தவிர்க்க .

     

    ஸ்மேராரனம்சந்த்ரகலா வதம்சம்

     

    கங்காதரம் சைலசுதா சஹாயம்

     

    த்ரிலோசனம் பஸ்ம  புஜங்க பூஷணம்

     

    த்யாயேத் பசூனாம் பத்தி மீசிதாரம்

     

     

  • சமகம் அர்த்தம் பொழிப்புரை 1

     

    யஜூர் வேதத்தில் தைத்ரிய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள், நான்காவது காண்டத்தின் மத்தியில் அமைத்துள்ளது ஸ்ரீ ருத்ரம் .

     

    Sri Rudram  Image of Lingam.jpg
    Sri Rudram

     

    இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது .

     

    ஒன்று நமகம் , மற்றொன்று சமகம்.

     

    சமகத்தின் அர்த்தம் மட்டும் பொழிப்புரை .

     

    சமகம் 11 அனுவாகங்களாக உள்ளது .

     

    சமகம் .

    ஓம் அக்னா’விஷ்ணோ ஜோஷ’ஸேமாவ’ர்தம்து வாம் கிரஃ’ | 

     

    த்யும்னைர்-வாஜே’பிராக’தம் |

     

     

    வாஜ’ஶ்ச மே ப்ரவஶ்ச’ மே ப்ரய’திஶ்ச மே ப்ரஸி’திஶ்ச மே தீதிஶ்ச’ மே க்ரது’ஶ்ச மே,

     

    ஸ்வர’ஶ்ச மே ஶ்லோக’ஶ்ச மே ஶ்ராவஶ்ச’ மே ஶ்ருதி’ஶ்ச 

     

    மே ஜ்யோதி’ஶ்ச மே ஸுவ’ஶ்ச மேப்ராணஶ்ச’ மே‌உபானஶ்ச’ மே 

     

    வ்யாஶ்ச மே‌உஸு’ஶ்ச மே சித்தம் ச’  ஆதீ’தம் ச மே 

     

    வாக்ச’மே மன’ஶ்ச மே சக்ஷு’ஶ்ச மே ஶ்ரோத்ரம்’ ச மே

     

     தக்ஷ’ஶ்ச மே பலம்’ ச  ஓஜ’ஶ்ச மேஸஹ’ஶ்ச  

     

    ஆயு’ஶ்ச மே ரா ச’ ம த்மா ச’ மே னூஶ்ச’ மே 

     

    ஶர்ம’ ச மேவர்ம’ மே‌உம்கா’னி ச மே‌உஸ்தானி’ ச மே 

     

    பரூக்ம்’ஷி ச மே ஶரீ’ராணி ச மே || 1 ||

     

    அக்னா விஷ்ணு -அக்னியும் , விஷ்ணுவும் ஆகியவர்களே ,

     

    சஜோஷா -நீங்கள் இருவரும் எங்களிடம் ஒருமித்த அன்பு நிறைந்த மனமுடயவர்களாக இருக்க வேண்டும்.

     

    வாம் -உங்களை ,

     

    இமாம் கிர: உங்களைத் துதிக்கும் இந்த வார்த்தைகள்

     

    வர்த்தந்து-செழிக்க வேண்டும் .

     

    யுவாம் -நீங்கள் இருவரும் ,

     

    த்யும்னை :அனைத்து ஐஸ்வர்யங்களுடனும் ,

     

    வாஜேபி ;உணவுப் பொருள்களுடன் ,

     

    ஆகதம்-எங்களை அனுக்ரகிக்க எழுந்தருள  வேண்டும் .

     

    வாஜச்சமே -உணவு மற்றும் நீர் முதலான பானங்கள்

     

    மே-இறைவனை துதிக்கும் என்னிடம் உள்ளன .

     

    பிரசவ -அன்னமளிக்கும் மனதும் ,

     

    ப்ரயதி :பரிசுத்தமும் ,

     

    பிரசதி :-உற்சாகமும் ,

     

    தீதி :-உணவைப் பாதுகாக்கும் திறனும் ,

     

    க்ரது-உணவை சம்பாதிக்கும் யாகமும் ,

     

    ஸ்வர:-யாகத்தில் ஸ்வரத்துடன் மந்திரங்களை உச்சரிக்கும் திறனும் ,

     

    ஸ்லோக : புகழும் ,

     

    ஸ்ராவ; சொல் திறமையும் ,

     

    ச்ருதி: வேள்வியாற்றும் திறனும் ,

     

    ஜ்யோதி :உள்ளொளியும் ,

     

    சுவ :-ஸ்வர்கமும்,

     

    பிராண :-பிராணனும் ,

     

    அபான ;-அபானனும்,

     

    வியாந:-வ்யானனும்,

     

    அஸு-உயிரும் ,

     

    சித்தம்-சித்தமும் ,

     

    ஆதீதம் -சித்தத்தால் அறியப்பட்ட பொருளும் ,

     

    வாக் -வாக்கும் ,

     

    மன : மனமும் ,

     

    சக்ஷு :கண்களும் ,

     

    ச்ரோத்ரம் -காதுகளும்,

     

    தக்ஷ -ஞா னேந்திரியங்களின்  சக்தியும் ,

     

    பலம் -கர்மேந்திரியங் களின் சக்தியும் ,

     

    ஓஜ:-பிராண சக்தியும் ,

     

    சக :பகைவரை வெல்லும் திறமையும் ,

     

    ஆயுஹு -ஆயுளும் ,

     

    ஜரா -முதுமையும் ,

     

    ஆத்மா -அந்தராத்மாவும் ,

     

    தனூ;-நல்ல உடலும் ,

     

    சர்ம-சுகமும் ,

     

    வர்ம;_உடலைக் காக்கும் கவசம் முதலியவையும் ,

     

    அங்கானி-திடமான உறுப்புகளும் ,

     

    அஸ்தானி-எலும்புகளும் ,

     

    பரூம்ஷி -கணுக்களும் ,

     

    சரீராணி -மற்றும் உடலில் உள்ள அனைத்து அவயவங்களும் ,

     

    உணவு மற்றும் நீரும் முதலிய பானங்கள் ,உணவிடும் டும் மனது ,சுத்தம் ,உற்சாகமும் ,உணவைப் பாதுகாக்கும் திறனும் ,உணவை

     

     

    சம்பாதிக்கும் யாகமும் ,யாகத்தில் ஸ்வரங்களை உச்சரிக்கும் திறனும் ,புகழும் ,சொல் திறமையும் ,வேள்வித் திறமையும் ,

     

    உள்ளொளியும் , சுவர்க்கமும்,பிராணனும் ,அபானனும் ,வ்யானனும்,உயிரும் ,சித்தமும் ,சித்தத்தால் அறியப்படும் பொருளும் ,

     

    வாக்கும் ,மனமும் ,கண்களும் ,காதுகளும் ,ஞா னேந்திரியங்களின்  சக்தியும் , கர்மேந்திரியங் களின் சக்தியும் ,

     

    பிராண சக்தியும் ,பகைவரை வெல்லும் திறமையும் ,ஆயுளும் ,முதுமையும் ,அந்தராத்மாவும் ,நல்ல உடலும் ,சுகமும் ,

     

    உடலைக் காக்கும் கவசம் முதலியவையும் ,திடமான உறுப்புகளும் ,எலும்புகளும் ,கணுக்களும் ,

     

    மற்றும் உடலில் உள்ள அனைத்து அவயவங்களும் ,

     

    ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும்  என்னிடம் உள்ளன .

     

    எனவே அக்னியும் விஷ்ணுவும் ஆன நீங்கள் இருவரும் என்னிடம் ஒருமித்த அன்புடயவர்களாக  இருக்க வேண்டும் .

     

    உங்களைத்துதிக்கும் இந்த வார்த்தைகள் செழிக்க வேண்டும் .

     

    நீங்கள் இருவரும் உணவுப் பொருள்கள் மற்றும் அனைத்து ஐஸ்வர்யங்கள், இவற்றுடன் எழுந்தருள  வேண்டும் .

     

     

    Sri Rudram Chamaakm Text

     

     

    Enhanced by Zemanta
  • புருஷ சூக்தம் அர்த்தம் பொழிப்புரை

    புருஷன் ,இறைவன் ஆயிரக்கணக்கான தலைகள் உடையவர் .

    ஆயிரக்கணக்கான கண்களை உடையவர் .

    Purusha Sooktham, Virata Purusha
    Viraata Purusha ,Purusha Suktham

    Image credit. http://karmakandi.com/Images/VishwaRoop.jpg

    ஆயிரக்கணக்கான பாதங்களை உடையவர் .அவர் பூமியை வியாபித்து 10 அங்குல அளவில் நிற்கிறார் .1

    முன்பு எது இருந்ததோ ,எது இனி வரப் போகிறதோ ,இப்பொழுது எது காணப்படுகிறதோ ,எல்லாம் இறைவனே .

    மரணமிலாப் பேரு நிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே.

    ஏனெனில் , அவர் இந்த ஜட உலகைக் கடந்தவர் . 2

    இங்கு காணப்படுவதெல்லாம் இறைவனின் மகிமையே .

    ஆனால் ,அந்த இறைவன் ,இவற்றை விடச் சிறப்பு மிக்கவர் .

    தோன்றியவை எல்லாம் அவருடைய கால் பங்கு மட்டுமே .

    அவரது முக்கல் பங்கு விண்ணில் இருக்கிறது . 3

    பரம்பொருளின் முக்கல் பங்கு விண்ணில் விளங்குகிறது ,

    எஞ்சிய கால் பண்குமீண்டும் இந்தப் பிரபஞ்சமாகத் தோன்றியது .

    பிறகு , அவர் உயிர்கள் மற்றும் ஜடப் பொருள்களில் எல்லாம் ஊடுருவிப் பார்த்தார். 4

    அந்த ஆதி புருஷனிடமிருந்து பிரம்மாண்டம் தோன்றியது .

    ப்ரம்மாண்டைத் தொடர்ந்து பிரம்ம உண்டாகி எங்கும் வியாபித்தார் .

    பிறகு அவர் பூமியைப் படைத்தார் .

    அதன் பிறகு , உயிர்களுக்கு உடலைப் படைத்தார் . 5

    முதற்பபடைப்பில் படைக்கப்பட்ட தாங்கள் வேள்வி செய்வதற்கான் போருல்கலில்லை என்பதைக் கண்டனர்.

    எனவே ,இறைவனை ஆகுதியாகக் கொண்டு மனத்தளவில் வேள்வி செய்தனர் .

    இயற்கையின் அம்சங்களான காலம் போன்றவற்றைப் பயன் படுத்தினர் . 6

    இந்த வேள்விக்கு பஞ்ச பூதங்கள் ,இரவு ,பகல் ஆகியவை பரிதிகள் ஆயின .

    இருபத்தொரு தத்துவங்கள் விறகுகள் ஆயின .

    தேவர்கள் யாகத்தை ஆரம்பித்து பிரம்மாவை ஹோமப் பசுவாய்க் கட்டினார்கள் 7

    முதலில் உண்டான அந்த யஜ்ன புருஷனான பிரம்மாவின் மீது தண்ணீர் தெளித்தார்கள் .

    அதன் பிறகு சாத்த்யகளும் தேவர்களும் ரிஷிகளும் இன்னும் யார் யார் உண்டோ அவர்களும் யாகத்தைச் செய்தார்கள்.9

    பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்தில் இருந்து தயிர் கலந்த நெய் உண்டாயிற்று .

    பறவைகளையும் மான் புலி போன்ற காடு விலங்குகளையும் ,பசு போன்ற வீடு மிருகங்களையும் பிரம்ம படைத்தார் 9

    பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யகத்தில் இருந்து ரிக் ,சாம வேத மந்திரங்களும் ,காயத்ரீ சந்தங்களும் உண்டாயின .

    அதிலிருந்தே யஜுர் வேதம் உண்டாயிற்று . 10

    அதிலிருந்தே குதிரைகள் தோன்றின .

    இருவரிசைப் பற்கள் உடைய மிருகங்களும் ,பசுகாளும்வேள்ளடுகளும் ,செம்மறியாடுகளும் தோன்றின . 11

    பிரம்மாவை தேவைகள் பலியிட்டபோது அவரை எந்தெந்த வடிவம் ஆக்கினார்கள்?

    அவர் முகம் எதுவாயிற்று ?

    கைகால்களாக எது சொல்லப்படுகிறது ?

    தொடைகளாக ,பாதங்களாக எது கூறப்படுகிறது ? 12

    அவரது முகம் பிராம்மணன் ஆயிற்று .

    கைகள் சத்ரியன் ஆயிற்று .

    தொடைகள் வைசியன் ஆயிற்று .

    அவரது பாதங்களில் இருந்து சூத்திரன் தோன்றினான் . 13.

    மனதிலிருந்து சந்திரன் தோன்றினான் .

    கண்ணில் இருந்து சூரியனும் ,முகத்தில் இருந்து இந்திரனும் அக்னியும் தோன்றினர் .

    பிராணன் வாயுவைத் தோற்றுவித்தது . 14.

    தொப்புளில் இருந்து வானவெளி தோன்றிற்று .

    தலையில் இருந்து சொர்க்கம் தோன்றியது .பாதங்களில் இருந்து பூமியும் ,காதில் இருந்து திசைகளும் தோன்றின .

    அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன . 15.

    எல்லா உருவங்களையும் தோற்றுவித்து ,பெயர்கையும் அமைத்து ,எந்த இறைவன் செயல் பட்டுக் கொண்டிருக்கிறாரோ ,

    மகிமை பொருந்தியவரும் ,சூரியனைப் போல் ஒளிர்பவரும் ,இருளுக்கு அப்பாற்பட்டவரும் ஆன அந்த இறைவனை நான்

    அறிவேன் . 16

    எந்த இறைவனை பிரம்மா ஆதியில் என்று கண்டு கூறினாரோ ,இந்திரன் நான்கு நான்கு திசைகளிலும் நன்றாகக் கண்டானோ ,

    அவரை நான் இவ்வாறு அறிவபன்,

    இங்கேயே, அதாவது இந்தப் பிறவியிலே முக்தனாகிறான் .

    மோட்சத்திற்கு வேறு வழி இல்லை . 18

    தேவர்கள் இந்த வேள்வியினால் இறைவனை வழி பட்டார்கள் .

    அவை முதன்மையான தர்மகள் ஆயின .

    எங்கே ஆரம்பத்தில் வேள்வியால் இறைவனை வழி பட்ட சாத்யர்களும் தேவர்களும் இருக்கிறார்களோ தர்மங்களைக் கடைப்

    பிடிக்கின்ற மகான்கள் அந்த மேலான உலகை அடைவார்கள் . 18

    தண்ணீரிலிருந்தும் சாரமான அம்சத்தில் இருந்தும் பிரபஞ்சம் உண்டாயிற்று .

    பிரபஞ்சத்தை உருவாக்கிய இறைவனிடம் இருந்து சிறந்தவரான பிரம்ம தோன்றினார் .

    இறைவன் அந்த பிரம்மாவின் (பதிநானு உலகும் நிறைந்த)உருவை உண்டாக்கி அதில் வியாபித்து இருக்கிறார் .

    பிரம்மாவின் இந்தப் பிரபஞ்ச வடிவம் படைப்பின் தொடக்கத்தில் உண்டாயிற்று . 19

    மகிமை பொருந்தியவரும் ,சூரியனைப் போல் ஒளிர்பவரும் ,இருளுக்கு அப்பால் இருப்பவரும் ஆகிய அந்த இறைவனை நான்

    அறிவேன் .

    அவரை இவ்வாறு அறிபவன் இங்கேயே இந்தப் பிறவியில் முக்தனாகிறான் .

    முக்திக்கு வேறு வழி இல்லை . 20

    இறைவன் பிரபஞ்சத்தில் செயல் படுகிறார் .

    பிறக்காதவர் ஆயினும் ,அவர் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறார்.

    அவரது உண்மையான வடிவத்தை மகான்கள் நாக்கு அறிகிறார்கள் .

    பிரம்மா போன்றோர் கூட மரீசி போன்ற மகன்களின் பதவியை விரும்புகிறார்கள் . 21.

    யார் தேவர்களிடம் தேஜஸ் ஆக விளங்குகிராரோ ,ஹெவர்களின் குருவாக இருக்கிறாரோ ,தேவர்களுக்கு முன்பே

    தோன்றியவரோ , அந்த ஒளி மயமான பரம்போருக்கு நமஸ்காரம் . 22.

    பரம்பொருளைப் பற்றிய உண்மையை அளிக்கும்போது தேவர்கள் ஆதியில் அடாஹிப் பற்றி பின் வருமாறு கூறினார்கள் .

    “யாராக இருந்தாலும் , பரம்பொருளை நாடுபவன் , இவ்வாறு அறிவான் ஆனால் , அவனுக்கு தேவர்கள் வசமாக இருப்பார்கள்

    – 23

    நாணத்தின் தலைவி ஆகிய ஹ்ரீ தேவியும் ,செல்வத்திற்குத் தலைவி ஆகிய லக்ஷ்மி தேவியும் உமது மனைவியர் .

    பகலும் இரவும் உமது பக்கங்கள் ,நட்சத்திரங்கள் உமது திரு உருவம் .

    அஸ்வினி தேவர்கள் உமது மலர்ந்த திரு வாய் . 24.

    பரம் பொருளே !

    நாங்கள் விரும்புவதைக் கொடுத்து அருள்வாய் .

    இவ்வுலக இன்பத்தைக் கொடுத்து அருள்வாய் ,

    இகத்திலும் , பரத்திலும் அனைத்தையும் தந்தருள்வாய் .

    ஓம் தத் சத் !

    புருஷ சூக்தம் நிறைந்தது