Tag: தேவி துதி

  • துர்க்கா ஸூக்தம் அர்த்தம்

     

    1.ஓம் || ஜாதவே’தஸே ஸுனவா ஸோம’ மராதீதோ னித’ஹாதி வேதஃ’ |
    ஸ னஃ’ பர்-ததி’ துர்காணி விஶ்வா’ னாவே ஸிம்தும்’ துரிதா‌உத்யக்னிஃ ||

     

    Goddess of Valor, Durga-Hinduism
    Durga Devi

     

     

    ஜாத வேதஸே -அனைத்தையும் அறிபவரான அக்னியே !

    ஸோமம் -சோமத்தை ,

    ஸுனவாம -பிழிந்து உமக்கு அளிக்கிறோம் .

    வேத :அக்னி தேவன் ,

    அராதீயதே -தடைகளை , இடர்ப்பாடுகளை ,

    நிதஹாதி -சுட்டு எரிக்கட்டும் .

    நாவா -படகு ,

    ஸிந்தும் இவ -கடலைக் கடக்க உதவுவது போல் ,

    ந -எங்களை ,

    துர்காணி -துன்பங்களில் இருந்து,

    பர்ஷததி -காக்கட்டும் .

    துரிதா -நாம் செய்யும் தவறுகளில் இருந்து நம்மை ,

    அக்னி -அக்னி ,

    அதி -நம்மைக் காக்கட்டும் .

     

    அக்னியே !

    சோமத்தைப் பிழிந்து அதன் ரசத்தை உனக்கு அளிக்கிறோம் .

    வாழ்வில் வரும் இடையூறுகளை அக்னி அழிக்கட்டும் .

    படகின் வழியே கடலைக் கடத்துவித்தல் போல், அக்னி தேவன் , எங்களை எல்லாத் துன்பங்களிலும்

    தவறுகளிலும் இருந்து காக்கட்டும் .

     

    2.தாக்னிவ’ர்ணாம் தப’ஸா ஜ்வம்தீம் வை’ரோனீம் க’ர்மலேஷுஜுஷ்டா”ம் |
    துர்காம் தேவீக்‍ம் ஶர’ணஹம் ப்ரப’த்யே ஸுதர’ஸி தரஸே’ னமஃ’ ||

     

    அக்னி வர்ணாம் -செஞ்சுடர் வண்ணம் கொண்டவளும் ,

    தபஸா -மேன்மையான தவத்தினால் ,

    ஜ்வலந்தீம் -ஒளிர்பவளும் ,

    வைரோசனீம் -ஈசருக்கு உரியவளும் ,

    கர்ம பலேஷு -செய்யப்படும் செயல்களுக்கு மற்றும் அதன் பலன்களுக்கு ,

    ஜுஷ்டாம் -ஆற்றலாக இருப்பவளும் ,

    (ஆகிய ),

    துர்காம் தேவீம் -துர்கா தேவியை ,

    சரணம் ப்ரபத்யே -நான் சரணடைகிறேன் .

     

    தரஸே -கரை சேர்ப்பவளே !

    ஸுதரஸி -கரை சேர்ப்பாய் ,

    நம :-நமஸ்காரம் .

     

    செஞ்சுடர் வண்ணம் கொண்டவளும் ,மேலான தவத்தினால் ஒளிர்பவளும் ,இறைவனுக்கு உரியவளும்

    ,செயல்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் இவற்றின் ஆற்றலாக இருப்பவளும் ஆனா துர்கா தேவியை ,

    நான் சரணடைகிறேன் .

    துன்பக் கடலில் இருந்து கரி சேர்ப்பவளே !

    எங்களைக் காப்பாய் .

    உனக்கு நமஸ்காரம் .

     

    3.க்னே த்வம் பா’ரயா னவ்யோ’ ஸ்மாம்த்-ஸ்வஸ்திபிரதி’ துர்காணிவிஶ்வா” |
    பூஶ்ச’ ப்றுத்வீ ப’ஹுலா ன’ ர்வீ பவா’ தோகா தன’யா ஶம்யோஃ ||

     

    அக்னே -அக்னியே !

    த்வம் -நீவிர் ,

    நவ்ய ;-போற்றுதலுக்கு உரியவர் ,

    ஸ்வஸ்திபி -மகிழ்ச்சியான பாதைகளின் மூலம், வழியாக ,

    அஸ்மான் -எங்களை ,

    விஸ்வா -அனைத்து ,

    துர்காணி -இன்னல்களுக்கும்

    அதிபராய -அப்பால் எடுத்துச் செல்வாய் ..

    ந -எங்கள் ,

     

    பூ : -ஊரும் ,

    ப்ருத்வீ ,-நாடும் ,

    உர்வீ ச -உலகும் ,

    பஹுலா -செழித்து ஓங்கட்டும் .

    தோகாய -பிள்ளைகளுக்கும் ,

    சம்யோ :இன்பம் தருபவனாக ,

    பவா -இருப்பாய் .
    அக்னியே !

    நீ போற்றுதலுக்கு உரியவன் .

    இன்பம் நிறைந்த பாதகளின் வழியே எங்களை எல்லாத் துன்பங்களுக்கும் அப்பால் எடுத்துச் செல்வாய் .

    எங்கள் ஊரும் நாடும் உலகும் செழிக்கச் செய்வாய் .

    எங்கள் பிள்ளைகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் மகிழ்வைத் தருவாய் .

    4.விஶ்வா’னி னோ துர்கஹா’ ஜாதவேதஃ ஸிம்துன்ன னாவா து’ரிதா‌உதி’பர்-ஷி |
    அக்னே’ அத்ரிவன்மன’ஸா க்றுணானோ”‌உஸ்மாகம்’ போத்யவிதானூனா”ம் ||

     

    ஜாத வேத: -அக்னியே !

    விஸ்வானி -அணைத்து ,

    துர்கஹா -துன்பங்களையும் அழிப்பவனே ,
    ஸிந்தும் நாவா -கடலில் படகின் மூலம் ,

    துரிதா -இன்னல்களிருந்து ,
    ந -எங்களை ,

    அதி பர்ஷி -காப்பாய் .
    அக்னே -அக்னே !

    அஸ்மாகம்-எங்கள் ,

    தனுனாம் -உடல்களை ,

    அவிதா -காப்பவனே !

    மனஸா -மனத்தால் ,

    க்ருணான -மீண்டும் ,மீண்டும் சொல்கின்ற ,

    அத்ரிவத் -அத்ரி முனிவரைப் போல் ,

    போதி -மனதில் கொள்வாய் .

     

    அக்னியே !

    எல்லாத் துன்பங்களிலிருந்தும் எங்களைக் காப்பவனே !

    கடலில் கஷ்டப்படவடுவனைப் படகின் மூலம் காப்பது போல் ,இன்னல்களிருந்து எங்களைக் காப்பாய் .

    எங்கள் உடல்களைக் காப்பவனே !

    எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மனத்தால் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கின்ற

    அத்ரி முனிவரைப் போல் எங்கள் நலனை மனதில் கொள்வாய் .

     

     

     

    5. ப்றுனா ஜிக்ம் ஸஹ’மானமுக்ரக்னிக்‍ம் ஹு’வேம பமாத்-தஸ்தா”த் |
    ஸ னஃ’ பர்-ததி’ துர்காணி விஶ்வா க்ஷாம’த்தேவோ அதி’ துரிதா‌உத்யக்னிஃ 

    ப்ருதனாஜிதகும் -எதிரிகளின் படையை அழிப்பவனும் ,

    ஸகமானம் -தாக்குபவனும் ,

    உகரம்-உக்ரமானவனுமான ,

    அக்னிம் -அக்னி தேவனை ,

    பரமத் சதஸ்யாத் -மன்றத்தின் உயர்ந்த இடத்தில் இருந்து ,

    ஹுவேம -அழைக்கிறோம் .

    ஸ -அந்த ,

    அக்னி -அக்னி ,

    தேவ -தேவன் ,

    ந -எங்களை ,

    விஸ்வா -அணைத்து ,

    துர்காணி -துன்பங்களுக்கும் ,

    ஷாமத் -அழியக் கூடியவற்றிற்கும்,

    துரிதாத் -தவறுகளுக்கும் ,

    அதி -அப்பால் ,

    பர்ஷாத் -காக்கட்டும் .
    எதிரிகளின் படைகளைத் தாக்கி அழிப்பவனும் ,உக்ரமானவனும் ஆகிய அக்னி தேவனை உயர்ந்த

    இடத்திலிருந்து இங்கே எழுந்து அருளுமாறு வேண்டுகிறோம் .

    அவன் , எங்களை அனைத்துத் துன்பங்களுக்கும் ,மற்றும் அழியக் கூடியவற்றிர்க்கும் தவறுகளுக்கும்

    அப்பால் எடுத்துச் செல்லட்டும் .

    எங்களைக் காக்கட்டும் .

     

    6.ப்ரத்னோஷி’ மீட்யோ’ அத்வரேஷு’ னாச்ச ஹோதா னவ்ய’ஶ்ச ஸத்ஸி’ |
    ஸ்வாம்சா”‌உக்னே னுவம்’ பிப்ரய’ஸ்வாஸ்மப்யம்’  ஸௌப’மாய’ஜஸ்வ II
    அக்னே -அக்னியே !

    அத்வரேஷு வேள்விகளில் ,

    ஈட்ய – புகழப்படுகின்ற ,

    கம் -ஆனந்தத்தை ,

    ப்ரத்னோஷி -அதிகரிக்கிறாய் .

    ஹோதா -வேள்வி செய்பவர்களுள் ,

    ஸனாத் ச -தொன்மையானதும் ,

    நவ்ய ச -புதியனாகவும் ,

    ஸத்ஸி -இருக்கிறாய்.

    ஸ்வாம்- உனது ,

    தனுவம் ச -வடிவாக இருக்கின்ற ,

    அஸ்மப்யம் -எங்களுக்கு ,

    பிப்ரஸ்ய -மகிழ்ச்சியைத் தருவாய் .

    ச -மேலும் ,

    ஸௌபகம் -நன்மையை ,

    அயுஜஸ்ய -எல்லாப் புறங்களில் இருந்தும் கொண்டு வருவாய் .

     

    அக்னியே !

    வேள்விகளில் புகழ்ச்சியால் சிறப்பிடப் படுகின்ற நீ எங்களின் சந்தோஷத்தை அதிகரிக்கின்றாய் .

    வேள்வி ஆற்றுபவர்களுள் நீ தொன்மையானவனும் மற்றும் புத்யவனும் ஆக விளங்குகிறாய் .

    உனது வடிவவி இருக்கின்ற எங்களுக்கு இன்பத்தைத் தருவாய் .

    அனைத்துப் புறங்களிலிருந்தும் எங்களுக்கு நன்மையைக் கொண்டு வருவாய் .

     

    7.கோபிர்ஜுஷ்ட’மயுஜோ னிஷி’க்தம் தவேம்”த்ர விஷ்ணோனுஸம்ச’ரேம |
    னாக’ஸ்ய ப்றுஷ்டபி ம்வஸா’னோ வைஷ்ண’வீம் லோக ஹ மா’தயம்தாம் ||

     

     

    இந்த்ர -தேவர்களின் தலைவனே !

    அயுஜ – பாவக் கலப்பில்லாதவன் ,

    விஷ்ணோ -எங்கும் நிறைந்தவன் ,

    கோபி :-பசுக்களுடன் ,

    ஜுஷ்டம்-மேலான ஆனந்தம் ,

    நிஷிக்தம் -மிகுதியாகப் பெற ,

    தவ -உன்னை ,

    அனு சஞ்சரேம-பின் தொடர்கிறோம் .

    பிருஷ்டம் அபி -உயர்ந்த ,

    நாகஸ்ய ‘தேவர்கள் உலகில் ,

     

    ஸம்வஸான -உறைகின்ற ,

    வைஷ்ணவீம் -விஷ்ணு உருவான தேவியிடம் ,

    இஹ -இந்த ,

    லோகே -உலகம் ,

    மாதயந்தாம் -இன்பத்தைத் தரட்டும் .

    இறையே !

    நீ பாவக் கலப்பிலாதவன் .
    எங்கும் நிறைந்தவன் .

    ஏராளமான பசுக்களுடன் நிறைந்த செல்வம் பெற்று இன்புறுவதர்க்காக உன்னைத் தொடர்கிறோம் .

    விஷ்ணு வடிவினளான தேவியிடம் நான் கொண்ட பக்திக்காக ,உயர்ந்த தேவருலகில் வாழுகின்ற தேவர்கள்

    இந்த உலகில் எனக்கு மகிழ்வைத் தரட்டும்.

    ஓம் காத்யானாய’ வித்மஹே’ கன்யகுமாரி’ தீமஹி | தன்னோ’ துர்கிஃ ப்ரசோதயா”த் ||

    ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

    காத்யயனாய -காத்யாயனி தேவியை ,

    வித்மஹே -அறிவோமாக .

    கன்யாகுமாரி . -கன்யா குமாரியை ,

    தீ மஹி -த்யானிப்போம் .

    தத் துர்கி -அந்த துர்கா தேவி ,

    ந -நம்மை ,

    ப்ரசோதயாத் -தூண்டட்டும் .
    காத்யாயனி தேவியை அறிவோமாக .

    அதன் பொருட்டு , அந்த கன்னியாகுமரி தேவியை த்யாநிப்போம் .

    அந்த துர்கா தேவி நம்மைத் துண்டுவாளாக .

     

     

     

     

    Enhanced by Zemanta